Tamil books

Thursday 21 April 2011

ஈழத்தமிழ்ப் பதிப்புலகம் பிரச்சனைகளும் செல்நெறியும்

ந. இரவீந்திரன்



புத்தகப் பண்பாட்டுச் செல்நெறியிலான பதிப்பு முயற்சிகளை மீட்டுப் பார்க்கும் முயற்சி பல்வேறு களங்களை முன்னிறுத்துவதாக அமைய வாய்ப்புண்டு. அவை பெரும்பாலும் பண்பு சார்ந்தனவாகப் பகுக்கப்படலாம். இட-வேறுபாடு சார்ந்து தமிழகத்தினுள் பிரிப்புக்குச் சாத்தியமில்லை. ஈழம், அயலகம் என்ற பிரிப்பு அவசியப்படும். தமிழகத்திலிருந்து ஈழம் பிரிக்கப்படுவது தவிர்க்கவியலாதது என இன்று உணரப்படுவது போல, சென்ற நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் விளங்கிக் கொள்ளப்-பட்டதில்லை.
மி
சென்ற நூற்றாண்டில் பிரித்தானியராட்சிக் காலம் வரையில் இலங்கையில் பெரும்பாலான அரசியல்_சமூக_இலக்கியத் தலைவர்களிடையே இந்தியாவின் ஒரு பகுதியாகவே இலங்கையைப் பார்க்கும் உணர்வுநிலை காணப்பட்டது. ஏகாதிபத்திய நலன் சார்ந்து இந்தியாவுக்கு எதிர்நிலையில் இலங்கையைப் பிரித்தானிய அரசு கையாண்டபோதிலும் நிர்வாகச் செயற்பாடு-களில் இந்தியாவுடன் இணைந்தே இலங்கை-யையும் ஆளுகை செய்து வந்தது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் ரூபாய் நாணயம் ஒன்றாகவே இருந்தது (ரூபாயின் பகுதிகளான இந்தியாவின் காசு இலங்கையின் சதத்திலிருந்து வேறுபட்-டிருந்தது). இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுகிறவர்கள் ரூபாயில் நாணயத்தை எடுத்துக்கொண்டால், நாணய மாற்றுக்கு அவசியமின்றிச் செலவுகளைக் கையாள முடியும். இலங்கை_இந்தியத் தொடர்பாடலில் இதுவொரு பிரதான அம்சமாக அமைந்தது.
பிரித்தானியர் வெளியேற்றத்தின் பின்னர் இறைமைமிக்க தனிநாடாக இலங்கை இயங்கி வந்திருக்கிறது. இருப்பினும் பெரும்பாலான தமிழ் மக்கள் இந்தியாவைத் தாய் நாடாகவும் இலங்கையை அதன் சேயாகவும் தரிசிக்கும் மனப்பாங்குடையவர்களாகவே இருந்தனர். இதற்குத் தமிழ் மொழித் தொடர்பாடல் இணைப்புக் கண்ணியாக அமைந்தது. சிங்கள மக்களும் தம்மை இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய வம்சாவழியினராய்க் காண்பதும், பௌத்தத்தை வழங்கிய புண்ணிய பூமியாக இந்தியாவைத் தரிசிப்பதையும் தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள்தாம். அமெரிக்க மேலாதிக்கம் கால்பதிக்க வழியேற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கையினால் இந்தியாவுடன் பகையேற்படுத்திப் பின் இந்திய_இலங்கை உடன்படிக்கை வாயிலாக இலங்கையின் இறைமையைத் தாரைவார்த்துள்ள ஜே. ஆர். ஜெயவர்த்தனாவிடம் நாற்பதாம் ஆண்டுகளி-லேயே இலங்கை இந்தியாவுடன் இணைந்த மாநிலமாகத் திகழவேண்டும் என்ற கருத்தே இருந்தது. இலங்கையில் ஏற்படக்கூடிய சமத்-துவத்துக்கான எழுச்சியைத் தடுக்க அவசியமான நடவடிக்கை என்ற சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த விருப்பம் அது; இன்று-வரை ஆளும் வர்க்கம் பேணி வரும் உறவும் அத்தகையதே.
மக்கள் நலன் சார்ந்த தொடர்பாடல் இன்னொரு வகையானது. “பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழகத்திலும் ஈழத்திலும் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் மிகவும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்-தனர். போக்குவரத்து வசதி-களும் தொடர்பியற் சாதனங்களும் மிக அருகலாக இருந்த அக்காலத்தில் இரு நிலங்களிலுமிருந்த தமிழறிஞர்களும் புலவர்களும் கவிராயர்களும் கணக்காயர்களும் அடிக்கடி சந்தித்து அளவளாவிப் பரஸ்பரம் உணர்வைப் பரிமாறிக் கொண்டனர். இன்று நாம் நம்ப-முடியாத அளவில் இது நடைபெற்றிருக்கிறது. ஈழத்தவரான சு. சரவணமுத்துப் பிள்ளை ‘சைவ_உதயபானு’ என்னும் பத்திரிகையை ஏக காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்தும் மதுரை-யிலிருந்தும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த அளவிற்கு அன்றைய உலகம்_கற்றோர் உலகம்_-நன்கு ஒன்றிணைக்கப்பட்டதாயிருந்தது. இன்று, எத்தனையோ வசதிகள்_ வாய்ப்புகள்_ இருந்தும்_ வெளியீட்டுச் சாதனங்கள் வெகுவாகப் பரவி-யிருந்தும்_ இரு நாடுகளிலுமுள்ள எழுத்தாளரிற் பெரும்பாலானோர் தத்தம் குறுகிய எல்லை-களுக்கு அப்பாலுள்ள இலக்கியங்களை அறியாதவர்களாகவே காணப்படுகின்றனர். இது கவலைக்குரியது. நம் காலத்து முரண்படு செய்தி-களில் ஒன்று’’ என்பார் க. கைலாசபதி (க. கை. ப. 11).
ஈழத்துப் படைப்புலகம் வீச்சோடு எழுச்சி கொள்ளத் தேசிய இலக்கியக் கோட்பாட்டை முன்னிறுத்தி, அதற்கெனக் குரல் கொடுத்தவர்-களுடன் இணைந்து வீரார்ந்த இலக்கிய இயக்கத்தை முன்னெடுத்தவர் கைலாசபதி. இங்கே தமிழக_ஈழப் பரிமாற்றம் உயிர்ப்புள்ள-தாக அமைவதற்கான ஏக்கத்தை வெளிப்படுத்தக் காண்கிறோம். தமிழகத்தின் நிழலாக ஈழப்-படைப்புலகம் அமையக்கூடாது, ஈழ மக்களது வாழ்வடிப்படை சார்ந்த மண்வாசனை இலக்கியங்களும் கலை-களும் எழுச்சிகொள்ள வேண்டும் என்பது தேசிய இலக்கிய இயக்கத்தின் அச்சாணியாக அமைந்தது. தமிழக_ஈழத் தொடர்பாடல் ஆரோக்கிய-மானதாக அமைய வேண்டும் என்பது மற்றொரு விடயம்.
இன்றுவரையிலுங்கூட இந்த தொடர்பாடல் நேர்-சீராக இல்லை என்பதுதான் வருந்தத்தக்க உண்மை. தேசிய இலக்கியக் கோட்பாடு ஐம்பது-களின் பிற்கூறிலிருந்து எழுச்சி பெற்ற மண்வாசனை இலக்கிய இயக்கத்தோடு உடன்நிகழ்வாக வெளிப்பட்டது. எழுபதுகளில் மூன்றாமுலக நாடுகள் பல நடைமுறைப்படுத்திய சுயசார்புப் பொருளாதாரம் இலங்கைக்கும் சாத்தியப்பட்ட சூழலில், இலங்கையில் தேசிய இலக்கிய எழுச்சி வீறு-கொண்டு எழுந்தது. இன்றுஞ்சரி, முன்னருஞ்சரி தமிழகத்தின் வணிகநலன் சார்ந்த குப்பைகள் கலை_ இலக்கியம் எனும் பெயரில் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருப்பன. ஆரோக்கியமான படைப்புகள் மிக அருந்தலாகவே ஈழத்தை வந்தடைய முடிவதாய் அமையும். அவற்றையும் குப்பை கூளங்களிலிருந்து பிரித்தெடுப்பதோ சிரமப்பிரயத்தனம். வலுவான நல்ல படைப்புகள் வராமலே போய்விடுவதே அதிகம். இத்தகைய சூழலிலேதான் இறக்குமதிக் கட்டுப்பாடு எழுபது-களில் ஏற்படுத்தப்பட்டது. அந்தக்காலமே ஈழத்துப் பதிப்புலகின் பொற்காலமாக அமைந்-திருந்தது.
அத்தகைய வீரியத்துடன் ஏனைய காலங்கள் அமையாதபோது ஈழத்துப் பதிப்புத் தேவை பெரும்பாலும் தமிழகத்தினூடாக நிறைவு செய்யப்படுவதாய் அமைந்திருந்தது. நாவலர் முதல் இன்று வரை ஈழத்தின் அநேகமான வீச்சான முயற்சிகள் இலங்கையிலும் இந்தியாவிலும் பதிக்கப்படுவதாக இருக்கும் அல்லது இந்தியாவில் பதிக்கப்பட்டு இலங்கை பெற்றுக்கொள்வதாக இருக்கும். ஈழத்தில் பதிக்கப்பட்டுத் தமிழகத்தைச் சென்றடை-யாதனவும் பலவுள. இதுகுறித்து ஈழத்திலிருந்தான குரல்கள் அவ்வப்போது எழுந்தபோதிலும் தமிழகத்தின் எந்தத் தரப்பும் அதனைப் பொருட்-டாக எடுத்துக்கொண்டதில்லை. தமிழகத்தி-லிருந்து மட்டும் வருவதாக அன்றி ஈழத்திலிருந்-தும் தமிழகத்துக்கு நூல்களும் கலைப்படைப்பு-களும் வருவதாக ‘இரு வழிப்பாதை’ சாத்தியப்பட வேண்டும் என்ற ஈழத்தின் குரல் ஈனசுரத்தில்தான் ஒலிக்கிறது.
இந்திய மொழிகளில் உள்ள நூல்கள் இறக்குமதிக்கு இந்தியாவிலுள்ள தடை ஏனைய எந்த மொழிகளையும் சீண்டியதில்லை. தமிழுக்கு மட்டுமே தேசியமொழி அந்தஸ்துடனான அயல் நாடுகளின் இருப்பு வாய்த்துள்ளதால், தமிழர் அக்கறை கொண்டால் மட்டுமே இரு வழிப்-பாதையை சாத்தியமாக்க முடியும். வேறு மொழி-யினராயின் இந்நேரம் இதனைச் சாதித்திருக்கக் கூடும்;  தமிழகம் ஏனைய பல விடயங்களைப் போன்றே இதிலும் அலட்டிக் கொள்ளவில்லை. தவிர, திரைகடலோடித் திரவியம் தேடும் சமூகம் என்கிற வகையில் ஏற்றுமதி வணிக நலன் ஏனைய தமிழ்ச் சமூகங்களின் குரலை அமுக்க வாய்ப்புகள் அதிகம்.
இத்தகைய வலுவான பதிப்பு ஆளுமைக்கு ஆட்பட்டிருக்கத்தக்க தொலைவுக்குள் இலங்கை உள்ளமையினால் அதற்கேயான பதிப்புலகம் தனக்கான தனித்துவத்துடன் மிளிரும் துறை-களில் மட்டுமே சாத்தியப்பட வல்லது. இன்-னொரு மாற்றையும் ஈழத்து வெளியீட்டுத்துறை சார்ந்துள்ளது. ஈழத்தின் வணிக சஞ்சிகைத் தேவையைத் தமிழகத்தின் கல்கி, ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் போன்றன பூர்த்தி செய்வதால் அங்கு சிறு சஞ்சிகைக்கான காத்திரமான படைப்-புகள் வேறாக வருவது போலன்றி ஈழத்தின் தினசரிகளே பெரும்பாலும் இலக்கியத் தேவை-களைப் பூர்த்தி செய்கின்றன. கூடவே இலங்கை-யின் சஞ்சிகைகளில் ஆக்கங்கள் வெளிவருவதே போதுமானதாகக் கருதப்படுகிறது.
ஆக, படைப்பாக்கம் எவ்வளவுதான் எழுச்சி-யடைந்தபோதிலும் அதற்குச் சமாந்தரமான பதிப்புத்துறை வீச்சுப்பெறவில்லை என்பது கவனிப்புக்குரியது. எழுபதுகளிலிருந்து தமிழ் சிறப்புப்பாடமாகக் கற்கும் பட்டப்படிப்பில் பல்கலைக்கழகங்கள் ஆய்வுகளைக் கட்டாய-மாக்கி--யுள்ளன . ஏராளமான ஆய்வுகள் மேற்-கொள்ளப்பட்டுள்ளன. அவற்றுள் விரல்விட்டு எண்ணத்தக்கன கூட நூலுருப் பெறவில்லை. இது குறித்து க. அருணாசலம் கருத்துக் கவனிப்புக்குரியது: (பட்ட மேற்படிப்புக்கான இரு காத்திரமான ஆய்வேடுகளது நிலைமையைப் பார்க்கும்போது) ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ என்னும் ஆய்வுக் கட்டுரை சிற்சில மாற்றங்களுடன் மிகுந்த நிதி நெருக்கடியின் மத்தியிலும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் முயற்சியினால் 1978ஆம் ஆண்டு நூல் வடிவில் வெளிவந்துள்ளது. ‘ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்’ என்னும் ஆய்வுக் கட்டுரை பிரசுர வசதிக் குறைவினால் 1974ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஆய்வுக் கட்டுரை வடிவிலேயே பேராதனைப் பல்கலைக்கழக நூல்நிலையத்திலே துயின்று கொண்டிருக்கிறது. இதே போன்று ஈழத்து நவீன இலக்கியம் பற்றி 1970களிலும் அதன் பின்னரும் முதுமாணி, கலாநிதி முதலிய பட்டங்களுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பலவும், பல்கலைக் கழகங்களில் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயிலும் இறுதி-யாண்டு மாணவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் பலவும் பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் முதலியவற்றின் பல்கலைக்கழக நூல்நிலையங்களிலே துயின்று கொண்டிருத்தல் வேதனைக்குரியதே’ (க.அருணாசலம் ப.34).
இதுபோன்ற ஆய்வேடுகள் பலவும் தமிழகத்-தில் ‘சூட்டோடு சூடாக’ வெளியிடப்படுகின்ற இன்றைய சூழலிலுங்கூட இலங்கையில் இதே நிலைமையே நீடிக்கிறது. இத்தகைய பதிப்பு வசதியீனம் காரணமாகப் பல்வேறு ஆய்வு விடயங்கள் கவனிக்கப்படாமலே இருப்பதையும் காண முடியும். பிரதானமாக இலங்கைச் சூழலில் சமூகத் தாக்கம் விளைத்த ஆளுமைகள் குறித்து ஆழமான ஆய்வுகள் நிகழ்த்தப்படுவதில்லை என்ற குறை உண்டு. இவ்வாறு விடுபட்ட ஆளுமைகள் குறித்து க.அருணாசலம் கூறும் கருத்தும் கவனிப்புக்குரியது. “ஈழத்துத் தமிழர் சமூகம், சமயம், பண்பாடு முதலிய துறைகளில் குறிப்பிடத்-தக்க பணிகளை ஆற்றியுள்ள சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், இந்து சபை (போர்ட்) இராசரத்தினம், பசுபதிச் செட்டியார், பண்டித-மணி அருளம்பலவனார், புலோலியூர் நா.கதிரை-வேற்பிள்ளை, மட்டுவில் க.வேற்பிள்ளை, வித்துவான் சி.கணேசையர், காசிவாசி. செந்தி-நாதையர், சபாபதி நாவலர், வண்ணார்பண்ணை க. வைத்தியலிங்கம்பிள்ளை, த.கைலாசபிள்ளை, காரைத்தீவு அருணாசல உபாத்தியாயர், யோகர் சுவாமிகள் முதலியோரது வாழ்க்கை வரலாறு, பணிகள் முதலியன விரிவாக ஆராயப்படுதல் அவசியமாகும்’’ என்பார் அவர் (க.அருணாசலம் ப.360).
மேற்படிப் பெயர்ப்பட்டியல் ஒரு மாதிரிக்-கானது-தான். அரசியல், கலை, இலக்கிய, பண்பாட்டுத்-துறை சார் ஆளுமைகள் பலரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆய்வுக் குறிப்புகள் இலங்கையில் கிடையாது. தமிழர் தலைவர்கள் எனப்பட்ட ஜி.ஜி. பொன்னம்பலம், தந்தை செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம், இடது சாரித் தலைவர்களாக வலுமிக்க சமூகத்தாக்கம் ஏற்படுத்தியிருந்த தருமகுல சிங்கம், இராமசாமி ஐயர், கார்த்திகேசன், வைத்திலிங்கம், சண்முக-தாசன், பொன்.கந்தையா, வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம் இலக்கிய ஆளுமைகளாகத் திகழ்ந்த கனக செந்திநாதன் முதல் கைலாசபதி வரை எனப் பலரும் நுண்ணாய்வுக்கு உள்ளாக்-கப்-படாமலே விடப்பட்டுள்ளனர்.
கவிதை, சிறுகதை, நாடகம் போன்ற துறைகளில் ஈழப்படைப்புலகம் ஆளுமையுடன் திகழ முடிகிறது. கவிதை, சிறுகதை ஆகியவற்றின் வெளிப்பாட்டுக் களங்களாக தினசரிகளும் சஞ்சிகைகளுமே போதுமானதாயிருப்பதால் இது சாத்தியமாயுள்ளது. நாடகம் ஆற்றுகைக் கலை என்கிற வகையில் வீச்சான அதன் வளர்ச்சி காற்றோடு கலந்துவிட இடமுண்டு; தாக்கம் செலுத்திய பல நாடகப் பிரதிகள் பதிப்பு வசதியைப் பெறவில்லை என்பது கவனிப்புக்-குரியது. அவ்வாறே நாவல் முயற்சிகள் போதி-யளவில் முன்னெடுக்கப்பட முடியாமல் இருப்பதற்குப் பதிப்பு விநியோக வசதிக் குறைவே காரணம் என்பது பலராலும் சுட்டிக்காட்டப்-பட்ட ஒன்றே, இன்றைய ஈழ வாழ்வனுபவக் கொதிநிலை நாவல் களமாகப் பதிவுபெற முடியா-மல் இருப்பது வேதனைக்குரியது. அதற்கான ஆளுமைகள் இல்லாமல் இல்லை. வன்னி உலைக்-களத்தில் வந்த பல நாவல்களை இலங்கையி-லேயே பார்க்க முடியாதவர்கள் பலர். ஈழத்தின் பல நூறு படைப்புகள் தமிழக எல்லையைத் தொட்டும் பார்த்ததில்லை என்பதைச் சொல்லித் தெரிய அவசியமில்லை.
இத்தகைய பின்னணியிலேதான் ஈழத்துப் பதிப்புலகம் குறித்துக் கவனஞ்செலுத்த நேர்கிறது. மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்ட தேடல் முழுமைப்படுத்தப்பட்ட தகவல் திரட்டைத் தர இடமற்ற நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய விடயப்பரப்பே விநோதமாய்த் தெரிந்தது. ஈடுபட்டுத் தேடியபோது வெளிப்படுத்-தப்பட வேண்டிய ஆழமான சுரங்கமாக ஈழப்பதிப்புலகமும் திகழ்ந்தமையைக் காட்டி நின்றது. அது குறித்த முன்னோட்டமான ஒரு முன்னுரைக் குறிப்பாகவே இதனைக் கொள்ள வேண்டும். இந்த முதல் முயற்சி, எதிர்காலத்தில் முழுமையான பதிப்புலக வீரியத்தை ஈழம் சார்ந்து வெளிப்படுத்த உதவிகரமானதாக அமைய இடமேற்படுத்தித் தரும்.
மிமி
இலங்கை மீதான ஐரோப்பியர் கவனத்தில் யாழ்ப்பாணத்தை ஒரு கல்வி முதலீட்டு மையமாகத் தெரிந்து எடுத்துக் கொண்டமை ஆர்வத்தைத் தூண்ட வல்ல ஒரு ஆய்வுப் பொரு-ளாகும். இது குறித்த முழுமையான நுண்ணாய்வு இடம் பெறவில்லையெனினும், அதற்கான அடிப்படைகள் குறித்து ஆங்காங்கே ஆய்வுக்-குறிப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நமது இந்தக் களம் அதனைத் தேடுவதற்கு இடமளிப்-பதல்ல. யாழ்ப்பாணம் கல்விமையமாக்கப்-பட்டதன் விளைவாக ஈழப்பதிப்புலகம் பெற்றுத் திகழ்ந்து தொடர்ந்து வளர்த்துச் சென்ற செல்நெறியின் தனித்துவமே நமது கவனிப்புக்-குரியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுக்காறில் பண்டிதர் உலகு சமயப் பிரபந்தங்களினுள் மூழ்கிக் கரை தேடிக் கொண்டிருந்தபோது யதார்த்த உலகு பல்துறைக் களங்களில் தமிழ்ச் சமூகத்தை ஆற்றுப்படுத்திவிட்டது. தமிழகத்தில் ஆரிய -_ திராவிட விவாதம் முனைப்பாகி, தமிழின் தனித்துவ ஆளுமையும் தொன்மையும் கண்டு காட்டப்படுவது தொடங்கப்பட்டது; ஈழத்தில் விஞ்ஞான உண்மைகளை நூலுருப்படுத்-தும் ஆற்றலைத் தமிழில் சாத்தியப்படுத்த முடிவ-தும், அதற்கு அடிப்படையாக அகராதித்துறை விருத்தி செய்யப்படுவதும் முனைப்பாக்கப்-பட்டது.
ஈழம் இது தொடர்பில் பெற்ற தனித்துவத்-தைப் பற்றிக் கைலாசபதி இவ்வாறு கூறுவார்: “அச்சியந்திரம் வந்ததன் பயனாகச் சமயச் சார்புடைய நூல்கள் மட்டுமன்றிப் பிற துறை-களைச் சேர்ந்த நூல் எழுந்தன. இலங்கையைப் பொறுத்தமட்டில் இரு துறைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவையாயுள்ளன. விஞ்ஞானத் துறையில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியிலே இன்றுகூடப் பெருமைப்படத்தக்க சில நூல்களை டாக்டர் கிறீனும் அவரைச் சார்ந்தோரும் சுயமாக எழுதியும் மொழிபெயர்த்தும் ஆக்கினர்.  1850 ஆம் ஆண்டளவில் வைத்தியர் கிறீன் (1822-_1884) விஞ்ஞானத்தை அதுவும் சிக்கல் நிறைந்த வைத்தியவியலை _ மாணவர்க்குத் தமிழில் போதிக்க முற்பட்டார். இம்முயற்சியின் பயனாக நவீன வைத்திய ஞானம் மாத்திரம் நம்மவருக்குக் கிடைத்தது என்று கருதுவது தவறு. ‘இரண வைத்தியம்’ (1867), ‘மனுஷ அங்காதிபாதம்’ (1872), ‘கெமிஸ்தம்’ (1875), ‘வைத்தியாகரம்’ (1875) முதலிய நூல்கள் புதிய விஷய ஞானத்தைப் புகுத்திய அதேவேளையில் தமிழ் மொழியின் வளத்தையும் புதுக் கருத்துகளை வெளிப்படுத்தும் அதன் ஆற்றலையும் அதிகரிக்கச் செய்தன. அதாவது மொழியின் ஏற்புடைமையை விருத்தியடையச் செய்தன”. (க.கைலாசபதி பக்.20_-21).
இதன் உடன் நிகழ்வாக அகராதி வெளியீடு முதன்மையிடம் பெறலாயிற்று. எம். உவின்ஸ்லோ என்னும் பாதிரியார் 1862 இல் ‘தமிழ் _ ஆங்கில அகராதி’ ஒன்றை வெளியிட்-டார் (கைலாசபதி குறிப்பிட்டிருந்த இரண்டா-வது துறை இது). முன்னதாகவே நிகண்டுகளும், அகராதிகளும் பதிக்கப்படுவது ஈழத்தின் அவசியப் பணியாயிருந்தது. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ சங்கம் 1833இல் தமிழ் _ -தமிழ், தமிழ் -_ ஆங்கிலம், ஆங்கிலம் -_ தமிழ் ஆகிய அகராதி-களின் தயாரிப்பு முயற்சியில் இறங்கியிருந்தது. யாழ்ப்பாண அகராதி (மானிப்பாய் அகராதி மனுவல்) 1842இல் வெளியிடப்பட்டது. முன்னரே 1679இல் தமிழ் _ -போர்த்துக்கேய அகராதி வெளிவந்துள்ளமை கவனிப்புக்குரியது (இவை தொடர்பாக ‘ஞானம்’ கலை இலக்கியச் சஞ்சிகை 100வது இதழில் “ஈழத்தில் தமிழ் அகராதி முயற்சிகள்’’ எனும் தலைப்பிலான ஞா.பாலச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை முழுமைத் தகவல்களைத் திரட்டித் தர முயன்-றுள்ளது). அத்தகைய முதற்பதிப்பு முயற்சிகள் பல மீள் பதிப்புக் காணவில்லை. எனினும் யாழ்ப்பாண அகராதி அண்மையில் சேமமடு பொத்தக சாலையால் வெளிக் கொணரப்-பட்டுள்ளது. புலோலியூர் நா. கதிரைவேற்-பிள்ளை யாழ்ப்பாண அகராதியை விரிவுபடுத்தி 1899 இல் வெளியிட்டிருந்தார். தமிழ் அகராதி முயற்சியில் கு.வை. கதிரைவேற்பிள்ளையும் கவனிப்புக்குரியவர். சங்கர பண்டிதர், சைமன் காசிச்செட்டி, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர், ஞானப்பிரகாச அடிகள், ச. சுப்பிரமணிய சாஸ்திரி போன்றோர் இத்துறையில் பங்களித்-துள்ளனர் (ஞானம் பக்.162_-167).
இத்தகைய விஞ்ஞானத் தாக்குறவும் அயல் மொழிகளின் (குறிப்பாக நவீனத்துவப் பாய்ச்-சலைச் சாத்தியப்படுத்திய ஐரோப்பிய மொழி-களின்) ஊடாட்டமும் ஈழத்தமிழறிஞர்களது உலக நோக்கை விசாலித்ததாகவும் ஆழமுடைய-தாகவும் விஞ்ஞானபூர்வமானதாயும் ஆக்குவதற்கு உதவின. அதன் பேறாக பழந்தமிழிலக்கிய நூல்-களைத் தேடிப் பதிப்பதில் முன்னோடிகளாகத் திகழ்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரில், “காலவாராய்ச்சி, சரித்திரவுணர்வு, ஒப்பியல் நோக்கு, திறனாயும் தன்மை, ஆய்வறிவு நேர்மை, முறையியல் நுட்பம் ஆகியன ஐயரிலும் பார்க்கப் பிள்ளையிடத்து அதிகமாகக் காணப்படுதல் தெளிவு’’ (க. கைலாசபதி ப.24)
இவ்விருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த ஆறுமுக நாவலரது பதிப்பு முயற்சியிலும் இந்தப் பார்வை வீச்சைத் தரிசிக்க முடியும். ‘கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள்’ எனக் கூறிய நாவலர் வெறும் மதவாதத்துக்குள் முடங்கியவர-ல்ல. அவரது இலக்கிய ரசனை விசாலித்திருந்தது. “நாவலரவர்கள் தமது அடிப்படை நம்பிக்கை-களுக்கியையப் புராணக் கருத்துகள் _ - சமயப்-பொருளை _ - சிரமேற்கொண்டவர் எனினும் ‘சீவக சிந்தாமணி’ போன்ற சமண சமயச் சார்புடைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்க எண்ணி இருந்தார் என்பதும் தெரிந்ததே. நாவலர் சென்னை முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்திலே பதிப்பித்து வெளியிட்ட ‘திருக்கோவையார்’ (1860) அநுபந்-தத்திலே எதிர்காலத்தில் ‘அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ்’ செய்ய விரும்பிய நூல்களின் பட்டியல் இடம் பெற்றது. அதிலே சைவ சமயச் சார்பற்ற நூல்களுள் ‘கல்லாடவுரை’, ‘சீவக சிந்தாமணியுரை’, ‘சிலப்பதிகாரவுரை’, ‘மணிமேகலை’, ‘வளையாபதி’, ‘கலித்தொகையுரை’, ‘புறநானூறு’ முதலியன குறிப்பிடப்பட்டிருக்-கின்றன. மொத்தம் அறுபத்து இரண்டு நூல்-களை அவர் குறிப்பிட்டிருந்தார்’’ என்பார் கைலாசபதி (க.கைலாசபதி ப.59).
நாவலரின் சைவப்பற்றானது அடிப்படையில் ஏகாதிபத்தியப் பண்பாட்டுத் திணிப்புக்கு எதிரான பண்பாட்டுப் பாதுகாப்புக் குணாம்சம் உடையதாகவே இருந்தது. அவர் ஒருபோதும் பிற மதங்கள் மீது காழ்ப்புணர்வுகொண்ட மதவெறியராக நடந்துகொண்டதில்லை. இலங்கை மக்களது மதங்களான பௌத்தம், சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்றவற்றில் மதிப்புணர்வுடனேயே தனது சைவப்பாதுகாப்புக் கருத்துகளை முன்வைத்தார். கிறிஸ்தவப் பாதிரி-களுடன் மிகக் கடுமையான விவாதங்களை மேற்-கொண்டபோதிலும், மதகுருமாரது தவறுகளைக் கண்டனம் செய்தாரேயன்றிக் கிறிஸ்தவத்தை இழிவுபடுத்த முயன்றதில்லை. கிறிஸ்தவப் பாட-சாலையில் ஆங்கிலமொழி மூலம் கல்வியைக் கற்றபோதும், பைபிளை மொழி பெயர்த்த-போதும் அவற்றின் நல்ல அம்சங்கள் மீது அவர் மதிப்பை வளர்த்திருந்தார். அதேவேளை அவை எம்மை அடிமை கொள்வதற்கு எதிரான விழிப்புணர்வோடு சைவத்தைப் புதுப்பிக்கும் (சீர்திருத்தும்) அவசியத்தைப் புரிந்துகொண்டார். இலங்கையர் என வரும்போது தமிழர் _- சிங்களவர் _ - முஸ்லிம்கள் ஆகியோரது உரிமைக-ளுக்-காக அவர் குரல்கொடுத்திருந்தமை விதந்-துரைக்கத்தக்கது. வலதுசாரிப் பிற்போக்குவாதி-யான சேர்பொன். இராமநாதன் நாவலரின் வாரிசு என்கிற வகையில் அது மட்டுமே நாவலரின் பரிமாணம் எனப் பார்க்கிறவர்கள் இருக்கி-றார்கள். நாவலர் நூற்றாண்டை வேறெவரைக் காட்டிலும் மார்க்சியர்கள் ஆய்வுக் களமாக்கி-யிருந்தார்கள். உண்மையில் நாவலரின் இடது-சாரிப் பண்பின் பரிமாணமாகப் பல புரட்சிகர மார்க்சியர்கள் பரிணமித்திருந்தார்கள். இரண்-டுக்கும் இடைப்பட்ட தளத்தில்  பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை போன்றோர் காணப்-பட்டார்கள். நாவலர் மரபை ஒற்றைப்படைத்-தன்மையில் காண முடியாது என்பதே உண்மை.
இன்று முஸ்லிம் மக்கள் தனித் தேசிய இனமாகப் பல போராட்டங்களூடாகத் தம்மை நிலைநிறுத்தியுள்ளார்கள்; இத்தகைய சூழலில் நாவலர் முஸ்லிம் மக்களைத் தனித்து அடையாளப்படுத்தியிருந்தமையைக் காண்-போர்க்கு வியப்பளிக்காமற் போகலாம். ஐம்பது வருடங்களின் முந்திய நிலையில் வைத்துப் பார்த்தால், அதற்கும் எழுபது, எண்பது ஆண்டு-களின் முன்னே நாவலர் முஸ்லிம்களது தனி உரிமையை வலியுறுத்தியதன் தாத்பரியம் புரியும். இதனைப் புரிந்துகொள்வதற்கு எம்.எஸ்.எம்.-இக்பால் குறிப்பிடும் விடயத்தைப் பார்ப்பது உசிதமானது: “....1956ல்தான் தமிழ் இலக்கிய எழுச்சி முஸ்லிம்களையும் இணைத்து எழுந்து செல்வாக்குப் பெற்றது. இவ்வெழுச்சிக் காலத்-தேதான், இஸ்லாமிய இலக்கியம் இருக்கிறது’ என்னும் தனித்துவக் கோசமும் நிலைப்பட்டு எழுந்தது. இச் சிந்தனை பரவலாக ஏற்பட்ட-தற்குக் காரணம்:  சிதைந்து கிடந்த இவ்வுண்-மையை எம்.எம். உவைஸ் தமது பட்டத்திற்-காகவும், சு.வித்தியானந்தன் அதில் இலயித்த-தற்காகவும் ஆராய்ச்சி செய்து வெளியாக்கியது-தான். ஆனால், பொதுமக்கள் மத்தியில், மேடையில் பேசி வெளியாக்கியவர் எச் செம் பி முஹிதீன் அவர்கள்தான். அவரது பேச்சுகளின் வெளியீடாக ‘தமிழும் முஸ்லிம் புலவர்களும்’, ‘தமிழும் முஸ்லிம்களும்’ புத்தகப் பிரசுரங்களாக வந்தன. இத்தனித்துவ நிலைமை ஈழமளாவிய பாங்குடன் எழுச்சி பெற்று முஸ்லிம்களைத் தாக்கியமைக்கு இரு பக்க அமுக்கங்கள் காரண-மாகின்றன. ஒன்று தமிழ்நாட்டு முஸ்லிம்கள், ஈழத்து முஸ்லிம்களின் தனித்துவங்களை மறைத்துக் கபளீகரம் செய்தமையாகும். மற்றது, ஈழத்துத் தமிழர்கள் முஸ்லிம் இலக்கியங்களை மறைத்து இருட்டடிப்புச் செய்தவைகளாகும். ‘1956க்குப் பின், சிங்களவர்கள், இலங்கைத் தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதுவதில் முனைந்தனர்’ என்னும் குற்றச்சாட்டைத் தமிழர்கள் முன்வைக்கின்றனர். இதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பது ஆராய்ச்சிக்-குட்பட்டதாகும். ஆனால், 1956க்கு முன், இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களதும் முஸ்லிம்களதும் வரலாற்றை மாற்றித் திரிப்பதில் ஈடுபட்டே வந்திருக்கின்றனர். இந்த அமுக்க நிலைகளைப் பரவலாக ஆய்வு செய்ய வேண்டி-யது முக்கியமாகும். இவற்றின் வரலாற்றுத் தெளிவு சுருக்கமாகவாவது பதிவு செய்யப்படு-வதற்கு இந்நூலின் தொகுப்புரை நமக்கு வசதி-யளிப்பது ஒரு சாசனப் பதிவு என்றே கூறி-விடலாம்’’ (எம்.எஸ்.எம்.இக்பால் பக்.-மிமி - மிமிமி).
“எச் செம் பியின் அறிஞர் அஸீஸ் சில நினைவுகள்... நூல் விமரிசனம்’’ எனும் நூலின் தொகுப்புரையில் இடம்பெற்ற கருத்தே இது. எம்.எஸ்.எம்.இக்பால், கா.சிவத்தம்பி, எம்.எச்.எம்.ஷம்ஸ், ஏ.இக்பால் ஆகியோருடைய விமரிசனக்கட்டுரைகள் இந்நூலில் இடம்-பெற்றன. இது வெளிவந்த 1975இலும் சரி, முன்ன-தாக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்-கப்பட்டபோதிலும் சரி, முஸ்லிம் எழுத்தா-ளர்கள் பலர் இடதுசாரிகளாயும் மு.எ.ச.ஸ்தாப-கர்-களாயும் உறுப்பினர்களாயும் திகழ்ந்தனர். எச்.எம்.பி.முஹிதீன், எம்.எஸ்.எம்.இக்பால், எம்.எச்.எம்.ஷம்ஸ், ஏ.இக்பால் ஆகியோரும் முற்போக்கு எழுத்தாளர்களே. ஆயினும் மு.எ.ச. இன் சில தவறுகளால் இடதுசாரி முஸ்லிம்களில் சிலர் தனித்து “ஸ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ்’’ எனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். அது தொகுத்து, ஸபீனா பதிப்பகம் ஊடாக வெளியிட்ட நூல்தான் இது.
இஸ்லாமியத் தமிழிலக்கியம் என்பதற்கான தனி அடையாளத்தை வலியுறுத்தி அதற்கான ஆய்வுப் பின்புலத்தைத் தோற்றுவித்தவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியரான சுவாமி விபுலாநந்தர். அவரது மாணவரான பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் மாணவரே சு.வித்தியானந்தன்;  இவர்தான் உவைஸ் இஸ்லாமியத் தமிழை ஆய்வு செய்வ-தற்கு ஊக்கமளித்தவர். சுவாமி விபுலாநந்தரின் பல்கலைக்கழக மாணவ பரம்பரையைச் சேர்ந்தவரான சு.வித்தியானந்தன், நாவலர். பரம்பரையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராயும் திகழ்பவர். மேலே சுட்டிக்காட்டிய வலதுசாரிப் பிற்போக்குவாதியாயும் இல்லாமல், இடது சாரியாயும் இல்லாமல் பண்டிதமணி சி.கணபதிப்-பிள்ளை போல இடைநிலைப் பாதைக்குரியவர் சு.வித்தியானந்தன். வேதாந்தியான சுவாமி விபுலாநந்தரதும் சைவசித்தாந்தியான நாவலரதும் இணைப்புக் கண்ணியாக இவர் திகழ்ந்தார். தனது பாரம்பரியங்களின் மீது மிகுந்த மதிப்பைக் கொண்டிருந்தவர், அந்த முன்னோடிகள் போன்றே முஸ்லிம்களது தனித்துவத்தை வெளிப்படுத்துவதில் ஆர்வத்தோடு ஈடுபட்ட-மையை எம்.எஸ்.எம்.இக்பாலின் கூற்றிலிருந்து அறிய முடிகிறது.
இத்தகைய செல்நெறிகளினூடே இலங்கைத் தேசியத்தை முன்னிறுத்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இடதுசாரி உணர்வுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் எழுத்தாளர் மஜ்லிஸ் என்பவை தவிர்ந்த தமிழ்_-முஸ்லிம் தேசியவாத அமைப்புகளும் தத்தமது பதிப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளன. இதுதொடர்பில் மறுமலர்ச்சி இலக்கிய இயக்க முன்னோடி தி.ச.வரதராசன் (வரதர்) வெளியிட்டுள்ள “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 1964-_65’’ எடுத்துக்காட்டியிருக்கும் சங்கங்கள், தாபனங்கள் பற்றிய பட்டியல் கவனிப்புக்குரியது. இலக்கிய இரசிகர்கள் சங்கம் (சுன்னாகம்), இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (யாழ்ப்பாணம் - வெளியிடும் பத்திரிகை: ‘இலங்கை எழுத்தாளன்’), இலங்கை தமிழ்ப் புத்தக வெளியீட்டுக் கழகம் (யாழ்ப்பாணம்), இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (கொழும்பு, கிளைகள்: யாழ்ப்பாணம், கண்டி, அக்கரைப்பற்று, நாவலப்பிட்டி, மட்டக்களப்பு; வெளியிடும் பத்திரிகை: ‘புதுமை இலக்கியம்’), இலக்கிய வட்டம் (மாத்தளை), இலங்கை கலைச்சபை (கொழும்பு), இலங்கை கிறிஸ்தவ இலக்கிய சபை (கொழும்பு), வரதரால் தரப்பட்ட பல அமைப்புகளில் எடுத்துக்காட்டாகத் தரப்பட்ட ஒரு சில மட்டுமே இவை (தி.ச.வரதராசன், 1964_-65 பக்.258_-287). பின்னிணைப்பில் தரப்பட்ட “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 4ம் பதிப்பு 1971’’ இல் இடம்பெற்ற பதிப்பு முயற்சிகளின் பட்டியல் ஈழப்பதிப்புலகின் ஒரு துளியை எடுத்துக்காட்ட வல்லது. தொடரும் ஆக்க இலக்கிய வெளிப்பாடுகளை “மல்லிகை’’ சஞ்சிகை-யில் தொடர்ந்து பதிவுசெய்துவரும் செங்கையாழி-யானின் முயற்சி விதந்துரைக்கத்தக்கது.
முடிவுரையோ தொகுப்புரையோ அல்லாத அவசரக் குறிப்புடன் இந்த எழுத்து முயற்சியை நிறுத்திக் கொள்ளலாம். இலங்கைப் பதிப்புலகம் எதிர்கொள்ளும் பிரச்சனையைத் தொட்டுக்-காட்டுவதுடன், அதனுள்ளும் தனித்துவமாக வளர்த்தெடுக்கப்பட்ட செல்நெறியை வெளிப்-படுத்துவதாக இச்சிறு கட்டுரை அமைந்துள்ளது. இன்று கணினி யுகத்தில் இலக்கிய அமைப்புகள் மற்றும் சஞ்சிகைகள் சார்ந்து பெருகிவரும் பதிப்பு முயற்சிகள் மற்றும் குமரன், பூபாலசிங்கம், சேமமடு வெளியீட்டகங்கள் போன்றவற்றின் வெளியீட்டு முயற்சிகளும் தனியான கவனிப்புக்-குரியனவாகும். பூரணப்படுத்தப்படும் எதிர்காலக் கட்டுரை முயற்சி இவையனைத்தையும் உள்வாங்கியதாக அமைய முடியும்.
உசாத்துணை
1.    அருணாசலம்.க, “இலங்கையில் தமிழியல் ஆய்வு முயற்சிகள்’’, குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை. 1997
2.    கைலாசபதி.க, “ஈழத்து இலக்கிய முன்னோடிகள்’’, மக்கள் வெளியீடு 1986.
3.    வரதராசன்.தி.ச, “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) 1964-_65’’, வரதர் வெளியீடு.
4.    வரதராசன் தி.ச., “வரதரின் பல குறிப்பு (டைரக்டரி) -_ 4, 1971’’. வரதர் வெளியீடு.
5.    இக்பால். எம்.எஸ்.எம்., சிவத்தம்பி கா. ஷம்ஸ். எம்.எச்.எம். இக்பால் ஏ. “எச்செம்பியின் அறிஞர் அஸீஸ் சில நினைவுகள்.. நூல் விமர்சனம்’’ (தொகுப்பு). ஸ்ரீலங்கா முஸ்லீம் எழுத்தாளர் மஜ்லிஸ். ஸபீனா பதிப்பகம், கொழும்பு 1975.
6.    “ஞானம்’’ (கலை இலக்கிய சஞ்சிகை) 100வது இதழ், கொழும்பு, செப்டம்பர் 2008
7.    சாரல் நாடன், “மலையகம் வளர்த்த தமிழ்’’. துரைவி வெளியீடு, கொழும்பு 1997.
பின்னிணைப்பு
பதிப்புலகம் தொடர்பிலான நூலொன்றில் ஈழத்து முயற்சிகள் குறித்து எழுத முற்பட்ட-போது அதற்கான தரவுகளைக் குறைந்தபட்ச முழுமைப்படுத்தலுடன் என்றாலும் வழங்கக்-கூடிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிட்டவில்லை. இன்றைய யுத்த சூழல் ஏற்படுத்தும் தடையைவிடவும் ஈழத்து ஆய்வு முயற்சிகள் இத்துறையில் போதியளவு முன்னெடுக்கப்பட இடமில்லாமல் இருக்கும் காரணிகளை இக்கட்டுரை முன்வைக்க ஓரளவு முயன்றுள்ளது. இலக்கிய அமைப்புகள், சமூக-அரசியல் சக்திகள் போன்றனவே பெரும்பாலான பதிப்பு முயற்சிகளில் இறங்கியுள்ளன. தனியார் பதிப்பு முயற்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதுவரையான தேடலில் ஒரு பட்டியலை வழங்கும் பட்சத்தில் தரப்பட்டவற்றை விடவும் விடுபட்டன மிகப் பெரும்பான்மையாக அமையும். அதன் காரணமாக இக்கட்டுரை பிரச்சனைகளையும் செல்நெறியையும் காட்டுவதோடு அமைதி கொள்கிறது.
இத்தகைய பதிப்பு முயற்சிகள் குறித்துத் தேடலை மேற்கொண்டவர்களாக முன்னர் வரதர் திகழ்ந்தார். இப்போது மலையக முயற்சி-களைத் தேடி வெளியிடுகிறவராகச் சாரல்நாடன் விளங்குகிறார். அவர்கள் இருவரது முயற்சிகள் இங்கு பின்னிணைப்புகளாகத் தரப்படுகின்றன. பின்னிணைப்பு 1இல் இடம்பெறும் வரதரது பங்களிப்புக் குறித்துக் கட்டுரை பேசுகிறது. சாரல் நாடன் “மலையகம் வளர்த்த தமிழ்’’ (துரைவி வெளியீடு, 1997) எனும் நூலில் “நூல் வெளி-யீட்டு முயற்சிகள்’’ எனும் தலைப்பில் வழங்கி-யுள்ள மலையகப் பதிப்புகள் குறித்த அட்டவணை (பக். 47_-48) பின்னிணைப்பு- 2 ஆக இங்கே இடம் பெறுகிறது. (சாரல் நாட-னுடைய இந்த நூல் கூடத் தமிழகத்திலேயே பதிப்புச் செய்யப்பட்டுள்ளது). அண்மைக் காலத்தில் மலையகக் கலை இலக்கிய ஆக்கங்-களை அதிகமாக வெளியிட்ட துரைவி வெளியீடு இதனைப் பதிப்புச் செய்துள்ளது.
பின்னிணைப்புகள் இரண்டிலும் காணத்தக்க இலங்கைப் பதிப்பகங்கள் ஈழப்பதிப்புலகம் பற்றிய தொடர் தேடலுக்கான பதச்சோறாகக் கொள்ளத்-தக்கன.
பின்னிணைப்பு - 1
1955ம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் வெளி-வந்த புத்தகங்களின் தொகுப்பு. தொகுத்தளித்தவர்:  இரசிகமணி கனக செந்திநாதன்
(1) சிறுகதைகள்
அக்கா: அ. முத்துலிங்கம் (1964) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ.2.50
அமரத்துவம்: யாழ்வாணன் (1969) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2.50
அமைதியின் இறகுகள்: செம்பியன் செல்வன், (1966), யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2.50
இப்படி எத்தனை நாட்கள்: நா.க. தங்கரத்தினம் (1968), சிவச்செல்வி வெளியீடு, கலையகம், சித்தன்கேணி. ரூ.3.00:
இருவர் யாத்திரிகர்: ‘சிற்பி’ (1958), தமிழருவிப் பதிப்பகம், கந்தரோடை, சுன்னாகம். ரூ.2.50
ஈழத்துப் பரிசுச் சிறுகதைகள் (தொகுப்பு): (1962), தமிழ் எழுத்தாளர் மன்றம், கொழும்பு. ரூ.2.50
ஈழநாட்டு வரலாற்றுக் கதைகள்: அருள்-செல்வ-நாயகம் (1956), இ.மா. கோபாலகிருஷ்ண-கோன், மதுரை. ரூ.1.00.
உதயம்: நீர்வை பொன்னையன் (1970), நவயுகப் பதிப்பகம், யாழ்ப்பாணம். ரூ.2.00.
ஊர் நம்புமா?: ‘நந்தி’ (1961), நண்பர்கள் வெளியீடு, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.1.50.
ஒரே இனம்: செ.கணேசலிங்கன் (1960), பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை. ரூ.2.50.
ஒன்றே தெய்வம்: எஸ்.பி. கிருஷ்ணன் (1970), அன்பு வெளியீடு, 550/7. கே.கே.எஸ். வீதி,  யாழ்ப்பாணம். ரூ.2.00.
கடவுளரும் மனிதரும்: பவானி (1962) ‘சிக்கல்’ 8 சால்ஸ் கொழும்பு-3, ரூ.2.50
கதைப் பூங்கா (தொகுப்பு): க. குணராசா
க. நவசோதி (1962), பல்கலைக்கழகம், பேராதனை: ரூ.1.50
கயமை மயக்கம்: ‘வரதர்’ (1960), வரதர் வெளியீடு, 226, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.50
கன்னிப்பெண்: ‘நகுலன்’ (1965), நகுலன் வெளியீடு, கலையகம், சித்தன்கேணி ரூ.2.50
காந்தீயக் கதைகள் (தொகுப்பு): எஸ். பொன்னுத்துரை (1970), அரசு வெளியீடு 231, ஆதிப்பள்ளித்தெரு, கொழும்பு-13 ரூ.1.25
காலத்தின் குரல்கள் (தொகுப்பு): கலா. பரமேஸ்வரன், (1964), பல்கலைக் கழகம் பேராதனை: ரூ.1.25 
குழந்தை ஒரு தெய்வம்: காவலூர் இராசதுரை, (1951) தமிழ்ப் புத்தகாலயம், 393, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை - 14. ரூ.1.50
கொட்டும் பனி: செ.கதிர்காமநாதன் (1968), விஜயலட்சுமி புத்தகசாலை: 248, காலி வீதி, கொழும்பு ரூ.3.50.
சங்கமம்: செ. கணேசலிங்கன் (1961), பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை, ரூ.2.00
சாலையின் திருப்பம்: டொமினிக் ஜீவா (1965), எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 94, 2/7 யோர்க் வீதி, கொழும்பு, ரூ.2.50
சின்னஞ்சிறு கதைகள்: ச.வே. பஞ்சாட்சரம் (1969), தமிழருவிப் பதிப்பகம், சுன்னாகம் ரூ.1.25
சௌந்தர்ய பூஜை: விஜயேந்திரன் (1970) வெளியீடு, ஐ.குமாரசாமி, கிருஷ்ணசாமி புத்தக விற்பனையாளர், பெரியகடை, யாழ்ப்பாணம். 90 சதம்.
டானியல் கதைகள்: கே டானியல், (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம். 162, வாசலறோட், கொழும்பு-3. ரூ.2.50
தண்ணீரும் கண்ணீரும்: டொமினிக் ஜீவா (1960_-1962) தமிழ்ப்புத்தகாலயம், 293, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை-14 ரூ. 2.00.
தாம்பூல ராணி: அருள் செல்வநாயகம், கலைமகள் காரியாலயம், மைலாப்பூர், சென்னை ரூ.2.50.
தாலி சிரித்தது: மலையமான், (1965) தேனருவிப் பிரசு£லயம், 30, ரோகினி ஒழுங்கை வெள்ளவத்தை ரூ.2.00
தெய்வ மகன்: நாவேந்தன், (1965) தமிழக்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம் ரூ.2.00.
தோணி: வ.அ. இராசரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13. ரூ.2.00
நல்லவன்: செ.கணேசலிங்கன் (1956) பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை ரூ. 1.50
நிலவிலே பேசுவோம்: என்.கே. ரகுநாதன் (1962) பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை ரூ.2.50
நிலவும் நினைப்பும்: ‘சிற்பி’ (1962), பாரி நிலையம் 59, பிராட்வே சென்னை ரூ. 2.50
நிறை நிலா : இ.நாகராசன் (1965) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம்: ரூ.3.00
பசி: மாதகல் செல்வா, (1962) பூபால சிங்கம் புத்தகசாலை, பெரியகடை, யாழ்ப்பாணம் ரூ.1.00
பாட்டாளி வாழ்க்கையிலே (தனிக்கதை) கச்சாயில் இரத்தினம், (1969) பகுத்தறிவுப் பண்ணை, 237, பருசலை வீதி, எட்டியாந்-தோட்டை.
பாதுகை: டொமினிக் ஜீவா (1962) தமிழ்ப்புத்தகாலயம் 293, பைகிராப்ட்ஸ் ரோட், சென்னை -14. ரூ.2.00
பார்வை: சாந்தன் (970) யாழ் இலக்கிய நண்பர் கழகம், மாவிட்டபுரம், தெல்லிப்பளை. 50 சதம்
புதுயுகம் பிறக்கிறது: மு. தளையசிங்கம் (1965) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு -13. ரூ. 2.75
புதுவாழ்வு: தாளையடி சபாரத்தினம், (1969) திருமதி மீனா சபாரத்தினம் உடுப்பிட்டி ரூ.4.00
போட்டிக் கதைகள் (தொகுப்பு): (1963) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், யாழ்ப்-பாணம், 226, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்: ரூ.1.50
மரபு (உருவகக் கதைகள்): எம்.ஏ. ரகுமான் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு,  கொழும்பு -13 ரூ.2-
மாலா நீ என்னை மறந்துவிடு: சீ சிவஞான சுந்தரம், (1965) ஸ்ரீகாந்த கமலபவனம், ஏழாலை, மேற்கு சுன்னாகம், ரூ.1.00
முஸ்லீம் கதை மலர் (தொகுப்பு): யூ.எல்.தாவூத் (1964) ஸபீனா பதிப்பகம் 20, பிரைஸ்பிளேஸ், கொழும்பு- 2 ரூ.2.25
மேடும் பள்ளமும்: நீர்வை பொன்னையன் (1961) மக்கள் பிரசுராலயம், 249, முதலாவது டிவிசன் மருதானை, கொழும்பு ரூ. 2.00
மோதல்: திமிலை மகாலிங்கம் (1967) தேனமுது இலக்கிய மன்றம் 1/1 டயஸ் வீதி, மட்டக்களப்பு ரூ.0. 75 சதம்
யாழ்ப்பாணக் கதைகள்: கே.வி. நடராசன் (1965) யாழ் இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ.2.50
யுகம் (தொகுப்பு): இமையவன் (1968) பல்கலை வெளியீடு, யாழ்ப்பாணம், ரூ.1.00
யோகநாதன் கதைகள்: யோகநாதன், (1964) புதுமைப் பிரசுரம், பேராதனை ரூ.2.50
ரசிகர்குழு போட்டிக் கதைகள் (தொகுப்பு): எம்.ஏ. ரகுமான் (1966) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு 13 ரூ.2.00
வாழ்வு: நாவேந்தன் (1965) தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, சுன்னாகம், ரூ.2.00
விண்ணும் மண்ணும் (தொகுப்பு): செம்பியன் செல்வன், (1963), பல்கலைக்கழகம் பேராதனை. ரூ.1.25
வீ: எஸ். பொன்னுத்துரை (1966) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13 ரூ.4.10
வெண்சங்கு: இரசிகமணி கனக செந்திநாதன் (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ.2.50
வெள்ளரி வண்டி: பொ. சண்முகநாதன் (1968) தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி. ரூ.1.50
வெள்ளிப் பாதசரம், இலங்கையர் கோன்(1962), ஸ்ரீமதி சிவஞானசுந்தரம் மங்களகிரி, ஏழாலை மேற்கு, சுன்னாகம்.
(2) நாவல்கள்
அந்தரத்தீவு : கே.எஸ்..மகேசன் (1963) க.ச.மகேசன் ‘சேதுபதி’அல்லாலை, கொடிகாமம் ரூ. 3_-50
அபலைப் பெண் : தெ. செ. நடராசா. (1965) தமிழ்மணி பதிப்பகம், 15/3 குமாரசாமி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 0.60 சதம்
அபலையின் கடிதம் (மொழிபெயர்ப்பு செ. கணேசலிங்கன்) (1965) பாரிநிலையம் 59, பிராட்வே சென்னை ரூ.1-25
அவள்: கவிஞர் விஜயேந்திரன் (1968) விஜயா பிரசுரம், மல்லாகம், ரூ.1.25
அவன் குற்றவாளி : ‘தேவன்’ யாழ்ப்பாணம் (1968) ச.கிருஸ்ணசாமி புத்தகக்கடை, 33,பெரியகடை யாழ்ப்பாணம். ரூ. 1-_00
அன்பளிப்பு : “அன்பன்’’ (1962) கோபாலப்பிள்ளை, நொறிஸ் றோட், கொழும்பு
ஆச்சி பயணம் போகிறாள்: செங்கையாழி-யான், (1968) யாழ் இலக்கிய வட்டம் மாநகர-சபை, யாழ்ப்பாணம். ரூ.2.00
உயிர்க் கூடு: க.ம. செல்வரத்தினம் (1964) க.ம. செல்வரத்தினம் வட்டு கிழக்கு, சித்தன்கேணி, ரூ.2.50
உறவும் பிரிவும் : கே.எஸ். ஆனந்தன் (1964) உதய சூரியன் பதிப்பகம், இணுவில் சுன்னாகம். ரூ.1.00
எதிர் பாராத இரவு: இளங்கீரன் (1954) நவபாரத் பதிப்பகம், சென்னை ரூ.1.00
ஏமாறச் சொன்னது நானா?: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம்பட்டா தெரு, கொழும்பு. ரூ.1.25
ஏழையின் காதல்: க நாகப்பு. வட்டுக்-கோட்டை. ரூ.1.00
ஒன்றரை ரூபா: ‘கவிநாயகன்’ வி.கந்தவனம். (1954) ‘பதி’ நுணுவில் மேற்கு சாவகச்சேரி. ரூ.1.00
கருகிய றோசா (குறுநாவல்): புதுமைலோலன், (1967) அன்பு வெளியீடு 550/7, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம். ரூ.0. 45 சதம்
கள்ளத்தோணிக்குத் தீர்ப்பு: எம்.பி.எம். முகம்மது காசீம், (1955) அன்சாரி நூல் நிலையம் விடத்தல்தீவு ரூ.0. 75 சதம்
காலத்தின் விதி: அ. பொ. செல்லையா (1965) தாய்நாடு பதிப்பகம் 176, ஐம்பட்டாதெரு, கொழும்பு ரூ.0. 75 சதம்
கிராமப்பிறழ்வு (சிங்களநாவல்): மொழி பெயர்ப்பாசிரியர் ம.மு. உவைஸ் (1964) ஸ்ரீலங்கா சாகித்திய மண்டலம் ரூ.6.00
குட்டி: பெனடிக்ற் பாலன் (1963) எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் ரூ.1.50
கேட்டதும் நடந்ததும்: தேவன் யாழ்ப்பாணம் (1956) வெளியீடு: எஸ்.எஸ். சண்முகநாதன் அன் சன்ஸ் ரூ.3.00
கொலையுண்ட கன்னிகள்: சுகீதர், சுன்னாகம்
கொழுகொம்பு: வ.சு. இராசரத்தினம் (1959) வட இல, தமிழ் நூற்பதிப்பகம், சுன்னாகம், ரூ.2.50
கோமதியின் கணவன்; தா. சண்முகநாதன் (1959) காந்திபிரஸ் வார்ட் வீதி, பதுளை ரூ.1.10
சடங்கு: செ. கணேசலிங்கன் (1966) பாரிநிலையம் 56, பிராட்வே சென்னை ரூ.4.00
சதியிற் சிக்கிய சலீமா: ஹமீதாபானு (1964) நல்வழிப்பதிப்பகம் 22, டயஸ் பிளேஸ் கொழும்பு ரூ.1.25
சிலந்தி மலைச் சாரலிலே; கே.வி.எஸ். வாஸ் (1960) கதம்பம் பதிப்பகம், 218, ஐம்பட்டாதெரு, கொழும்பு 13 ரூ10.
ஜீவயாத்திரை : யாழ்ப்பாணன், (1965) கலாபவனம் மேலைப்புலோலி, பருத்தித்துறை ரூ.1.75
சுடர் விளக்கு: பா. பாலேஸ்வரி, (1966) திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கம் 471, திருஞானசம்பந்தர் வீதி, திரிகோணமலை ரூ.2.50
செவ்வானம்: செ. கணேசலிங்கன் (1967) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.
சொந்தக்காரன்: பெனடிக்ற் பாலன்.
தரையும் தாரகையும்; செ. கணேசலிங்கன் பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை.
தாயகம் (குறுநாவல்): தொ. சிக்கன் ராஜூ (1969) குறிஞ்சிப் பண்ணை. நூரளை ரூ.1.25
தீ : எஸ். பொன்னுத்துரை, (1961) சரஸ்வதி காரியாலயம் ராயப்பேட்டை, சென்னை ரூ.2.50
தூரத்துப் பச்சை: கோகிலம் சுப்பையா, தமிழ்ப் புத்தகாலயம் 576,பைகிராப்ட்ஸ் ரோடு, சென்னை ரூ. 5/_
தென்றலும் புயலும்: இளங்கீரன் (1956) நவபாரத் பிரசுராலயம் 9, கம்மாளர் தெரு, சென்னை-6. ரூ.2.25
நந்திக்கடல் : செங்கையாழியான் (1969) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம். ரூ.2.00
நீண்ட பயணம்: செ. கணேசலிங்கன் (1965) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை ரூ.3.50
நீதியே நீ கேள்: இளங்கீரன் (1962) பாரி நிலையம் 59, பிராட்வே, சென்னை ரூ.7.50
நெஞ்சில் நிறைந்தவள் : சி. சிவஞானசுந்தரம் (1966) ஸ்ரீகாந்த பவனம் ஏழாலை தெற்கு, சுன்னாகம் ரூ.1.25
பள்ளிப்படிப்பு: எஸ்.ஏ. தேவன் (1954) கலாஜோதி வாசகசாலை தட்டாதெரு, யாழ்ப்பாணம்.
பாசக் குரல்: அருள்செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை ரூ.1.50
பாவையின் பரிசு: துரை மனோகரன் (1966) துரை மனோகரன், இந்துக்கல்லூரி, உரும்பராய் ரூ.2.50
பிராப்தம் : பிரேமகாந்தன் (1970) ஞான குருபரன் நிலையம். 82/3, ஆட்டுப்பட்டித் தெரு, கொழும்பு-13. ரூ.1.00
பெருநாள் பரிசு: மருதூர் வாணன் (1969) தேன் மதி வெளியீடு, மகளிர் வித்தியாலயா வீதி, மருதமுனை. ரூ.0. 75 சதம்
போர்க் கோலம்: செ. கணேசலிங்கன், பாரி நிலையம், 59, பிராட்வே சென்னை.
பெண்ணோ? பேயோ? : எம்.ஏ. தாஸ் (1963) சுதர்சன் பப்ளிஷர்ஸ், 124, மெயின் வீதி, யாழ்ப்பாணம் ரூ.0. 40 சதம்
மணிபல்லவம் (மொழி பெயர்ப்பு) : தேவன் (யாழ்ப்பாணம்) (1957) ஸ்ரீலங்கா புத்தக சாலை, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1.50
மத்தாப்பு : எழுத்தாளர் ஐவர் (1962) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பனை ரூ. 1.00
மலைக் கொழுந்து : ‘நந்தி’ ஆசீர்வாதம் அச்சகம், சுண்டிக்குளி, யாழ்ப்பாணம். ரூ.4-00
முதற்காதல் (மொழி பெயர்ப்பு): இலங்கையர் கோன், (1955) கலைமகள் காரியாலயம், மைலாப்பூர், சென்னை. ரூ.0. 75 சதம்.
முகை வெடித்த மொட்டு : நா. செல்லத்துரை (1967) வெண்ணிலா வெளியீடு. தென்றலகம் கந்தர்மடம் யாழ்ப்பாணம். ரூ. 2_-50
மூன்று குறுநாவல்கள் : அகஸ்தியர், அன்பு வெளியீடு.
வன்னியின் செல்வி : கச்சாயில் இரத்தினம் (1953) ஆசீர்வாதம் புத்தகசாலை. 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_50
வாழ்க்கையின் வினோதங்கள் : பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை. (1954) ரூ. 1-_50
விநோதனின் சாகசம் (மொழிபெயர்ப்பு) மொழிபெயர்ப்பாசிரியர் சோ. நடராசன் (1966) எம்.டி. குணசேனா, லிமிடெட் 217, ஓல்கோட் மாவத்தை, கொழும்பு. ரூ. 5-_00
(3) நாடகங்கள்
 அனுவுருத்திர நாடகம் (பழைய நாடகம்) : தென் மோடி நாட்டுக் கூத்து வி. பண்டிதர். வி.கி. கந்தையா, (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலா மன்றம் 163 பக்கம் ரூ. 1-_75
அரசன் ஆணையும் ஆடக சௌந்தரியும் : கங்கேஸ்வரி கந்தையா, (1965) கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம் ரூ.2.25
அலங்கார மங்கையின் அடக்கம்: ஜி.எஸ். துரைராஜ் அபிரகாம் (1965) சகீராக் கல்லூரி, அமுத்கம, தர்காநகர், ரூ.1.25
அலங்கார ரூபன் நாடகம் (பழைய நூல்) : கலாநிதி சு. வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு இலங்கை ரூ. 2-_00
இறுதிப் பரிசு :ஏ.ரி. பொன்னுத்துரை (1967) யாழ். இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ. 2_-00
இராம நாடகம் (விளக்கங்களுடன்) வட மோடி நாடகம் : வித்துவான் பண்டித வி.கி. கந்தையா (1969) மட்டக்களப்பு பிரதேசக் கலாமன்றம் ரூ. 1-_75
இறுதி மூச்சு : த. சண்முகசுந்தரம் (1965) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம் மாவிட்டபுரம் ரூ. 1-_00
இலங்கை கொண்ட இராசேந்திரன் : சதா, ஸ்ரீநிவாசன் (1960) ஸ்ரீலங்கா அச்சகம்: 234, கே.கே. வீதி, யாழ்ப்பாணம் ரூ. 1-_25
எண்பிறீக்கு எம்பரதோர் நாடகம் (பழைய நூல்) : சு.வித்தியானந்தன் (1964) மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றம் ரூ. 2--_00
எஸ்தாக்கியார் நாடகம் (பழைய நூல்) வ.ம.சூசைப்பிள்ளை (1962) ஆசீர்வாத அச்சகம் சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 1_-50
கதிரைமலைப் பள்ளு நாடகம் : பண்டிதர் க.வீரகத்தி(1962) வாணி கலைக்கழகம், கரவெட்டி. ரூ.1_25
கமுனுவின் காதலி: மு. கனகராசன்(1970) மதுரநிலையம், மானிப்பாய் ரூ.1_-00
கோபுரவாசல் (கவிதை நாடகம்) :இ.முருகையன்
கோடை (கவிதை நாடகம்) : மஹாகவிதை
சங்கிலியன் :பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை (1964) சுதந்திரன் அச்சகம் கொழும்பு ரூ. 3_-50
சங்கிலியன் : வித்துவான் கந்தையா (1960) வ. கந்தையா கொக்குவில் மேற்கு, கொக்குவில்
ரூ. 1_-00
சிங்க கிரிக் காவலன் :’சொக்கன்’(1963) கலைவாணி புத்தகசாலை, 10, பிரதான வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_50
சிலம்பு பிறந்தது : சொக்கன் (1962) இலங்கைக் கலைக்கழக நாடகக்குழு ரூ. 1-_25
ஞானக் கவிஞன் : சொக்கன் (1965) “ஆசிர்’’ வெளியீடு 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம் ரூ. 2.
தமயந்தி திருமணம் : பண்டிதர்
சோ. இளமுருகனார் (1955) சோ. இளமுருகனார் புலவரகம் நவாலி.
தணியாத தாகம் : ‘கரவைகிழான்’ (1967)
க. கந்தசாமி சித்தி விநாயகர் கோவிலடி, மன்னார்.
ரூ.2_-00
தெய்வப்பாவை :சொக்கன் (1968) வரதர் வெளியீடு 226, கே.கே.எஸ். வீதி,¢ யாழ்ப்பாணம். ரூ. 1_-25
தென்னவன் பிரமராயன் : தேவன் யாழ்ப்பாணம் (1963) ஆசீர்வாதம் புத்தக சாலை, 32, கண்டிவீதி, யாழ்ப்பாணம் ரூ. 1_-00
நாடகம் : ஏ.ரி. பொன்னுத்துரை (1970) யாழ் இலக்கிய வட்ட, மாநகரசபை யாழ்ப்பாணம். ரூ. 2_-00
நாடகமாலை : ‘ஐயன்னா’(1962) சனசமூக நிலையம், கந்தரோடை, சுன்னாகம், ரூ.1-50
பணத்தைப்பார் : பாரதநேச ஈழத்துச் செல்வன் (1966) தேன்துளிப் பதிப்பகம் வில்பொளை. ரூ. 1_-00
பண்டார வன்னியன் :வே. சுப்பிரமணியம் (1970) பண்டாரவன்னியன் கழகம், முள்ளியவளை. ரூ. 2-_50
பூதத்தம்பி : த.சண்முகசுந்தரம் (1964) வித்துவான் கணேசையர் தமிழ்ச் சங்கம், மாவிட்டபுரம், ரூ. 1_-00
பொம்மை வண்டி (மொழி பெயர்ப்பு) :
சோ. நடராசன்
மறக்குடி மாண்பு : புலவர்.நா. சிவபாதசுந்தரம் (1963) கலைச் செல்வி வெளியீடு, கந்தரோடை, சுன்னாகம். ரூ. 1-_50
மனோன்மணி : வித்துவான் க. சொக்கலிங்கம் (1958) ஸ்ரீலங்கா புத்தகசாலை கே.கே. எஸ். வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1-_25
மன்னன் ஈடிபசு (மொழி பெயர்ப்பு கவிதை நாடகம்) : இ. இரத்தினம் (1969) செய்யுட்களம், 49/3 காலி வீதி, கொழும்பு ரூ. 2_-00
மாதவி மடந்தை : இலங்கையர் கோன் (1958) திருமகள் அழுத்தகம், சுன்னாகம் ரூ. 1-_50
மார்க்கண்டன் நாடகம் (பழைய நூல்) : கலாநிதி  கா. சிவத்தம்பி (1963) பல்கலைக்கழக வைத்திய இந்து மாணவர் சங்கம், கொழும்பு.
மூன்று முழு நிலவுகள் : செம்பியன் செல்வன், (1968) ஆசீர்வாதம் புத்தகசாலை, 32, கண்டி வீதி, யாழ்ப்பாணம். ரூ. 2-_50
மிஸ்டர் குகதாசன் : இலங்கையர் கோன் (1955) ஸ்ரீலங்கா அச்சகம், கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம். ரூ. 1_-00
யார் கொலைகாரன்? : அ.பொ. செல்லையா (1968) தாய் நாடு பதிப்பகம் மீசாலை. ரூ. 1-_50
வந்து சேர்ந்தன_தரிசனம் (கவிதை நாடகங்கள்) : இ.முருகையன் (1965) செய்யுட்கள் வெளியீடு 149/3, காலி வீதி, கொழும்பு ரூ. 1_-00
வாழ்வு பெற்ற வல்லி :த. சண்முகசுந்தரம் (1962) கணேசையர் வெளியீட்டு மன்றம் மாவிட்டபுரம். ரூ. 1_-00
விசயமனோகரன் (பழைய நூல்) வெ. மரியாம் பிள்ளை (1968) ஆசீர்வாதம் வெளியீடு சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ. 3-_00
விஜயன் விஜயை நாடகம் : தேவராசன்.
(4) பெரியோர் வரலாறு
அடிகளார் பாதையில் : ‘பொன்கையூர் பர்வதன்’ (1960) இளைஞர் கழகம், புங்குடுதீவு இரசிகமணி மலர்மாலை (தொகுப்பு) : சி.செல்வத்துரை (1967) தனலக்குமிபுத்தகசாலை, சுன்னாகம் ரூ. 1-_00
இருவர் உலா: மோகன் (1966) கதம்பம் பதிப்பகம், 219, ஜெம்பட்டாதெரு, கொழும்பு. ரூ. 1-_50
இலங்கையில் சுவாமி விவேகானந்தர்:
ச. அம்பிகைபாகம் (1963) வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம். ரூ.1_-00
ஈழத்துச் சொற் செல்வர்கள்: ஈழத்துச் சிவானந்தன் (1962) அடிகளார் பதிப்பகம், புங்குடுதீவு ரூ.1_-25
ஈழம்தந்த இன்கலைச் செல்வன் (கவிதை): ஐந்து கவிஞர் (1965) ஆறுமுகசிற்பாலயம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
ஈழம் தந்த கேசரி: இரசிகமணி கனக செந்திநாதன் (1968) ஈழகேசரிப்பொன்னையா வெளியீட்டு மன்றம், சுன்னாகம். ரூ.3_-00
ஈழத்தில் நாடகமும் நானும் (சொர்ணலிங்கம் வாழ்க்கை): கலையரசு சு.சொர்ணலிங்கம் (1968) இலங்கை இளம் நடிகர் சங்கம். ரூ.10-_00
எங்கள் தலைவர் த. துரைசிங்கம்:  (1963) தமிழ்க்குரல் பதிப்பகம் ஏழாலை, சுன்னாகம். (முதலியார் தியாகராசா)
எங்கள் நேரு: தமிழ் நெஞ்சன் (1964) அமுதம் பதிப்பகம், கொழும்பு
எழுத்தாளர் கல்கி: பண்டிதர் கா.பொ. இரத்தினம் (1966) பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14. ரூ.2_-50
கலை மடந்தையின் தவப்புதல்வன்: இரசிகமணி கனக.செந்திநாதன் (1961) சன் மார்க்கசபை, குரும்பசிட்டி,
காந்தி தரிசனம்: எஸ். பொன்னுத்துரை (1969) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு கொழும்பு-13 ரூ.2-_50
கிறீன் அடிச்சுவடு : அம்பி (1967) யாழ் இலக்கிய வட்டம் மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2_-50
குமாரசுவாமி புலவர் வரலாறு :
கு. முத்துக்குமாரசுவாமிபிள்ளை பி.ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.6_-50
கென்னடியின் கதை: மோகன் (1964) கதம்பம் பதிப்பகம் ஜம்பட்டாதெரு, கொழும்பு.
கோபாலகிருஷ்ணபாரதி: நா.பா. பாலசந்திரன் (1963) ஏழிசைச் சூழல் வெளியீடு, தருமரகம், சுன்னாகம் ரூ.1_-00
சபாபதி நாவலர் சரித்திரம்: வடகோவை
அ. சிவகுருநாதன் (1955) சபாபதி நாவலர் ஞாபகநிலையம் வடக்கோவை. ரூ.1-_00
சிவயோக சுவாமிகள் திருச்சரிதம் : வித்துவான் க.சி. நடராசன் (1965) ஸ்ரீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.0. 75 சதம்
சி.வை.தாமோதரம் பிள்ளை(கவிதை): சிறுவர்கிழார் (1961) மாணவர் கழகம் இந்து தமிழ்பாட சாலை, தட்டாதெரு.
சேர். கந்தையாவைத்திய நாதன் (கவிதை): வித்துவான். மு.கந்தையா (1965) சண்முகநாத அச்சகம். யாழ்ப்பாணம்.
சுன்னாகம் செல்லாச்சியம்மையார்: ச.அம்பிகைபாகன், ச.அம்பிகைபாகன் மல்லாகம்.
செந்தமிழ்ச் செம்மல்: நா. கதிரைவேற்பிள்ளை க.சி.குலரத்தினம் (1969) கதிரைவேற்பிள்ளை கலாமன்றம் புலோலி ரூ.1-50
சேர் பொன். இராமநாதன்: ஈழவேந்தன் (1956) மா.க. கனேந்திரன் 15. கலிகந்தராம வீதி, கொழும்பு ரூ. 6_50 சதம்
ஞானசூரியன் (கணேசையர்): இ. சுந்தரராச-சர்மா (1960) ஸ்ரீலங்கா கஷ்டநிவாரண சங்கம் 76/3, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.50 சதம்
தங்கத்தாத்தா: தமிழ்மணி ‘தெல்லியூர்’ (1961) தமிழ்மணிப்பதிப்பகம், யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்
தீந்தமிழ் மேதை திரு.வி.க.: டியெம்பி நல்வழிப்பதிப்பகம், 22, டயஸ்பிளேஸ், கொழும்பு
தென்கோவை ச.கந்தையாபிள்ளை:
கு. அம்பலவாணபிள்ளை (1959) திருமகள் அழுத்தகம், சுன்னாகம்
சிவசம்பு புலவர் சரித்திரம்:
கு. முத்துக்குமாரசாமி பிள்ளை புலவரகம், மயிலணி, சுன்னாகம்.
நான் கண்ட கலைப்புலவர்: கா. மாணிக்க-வாசகர் (1958) நூல்நிலையப் பொறுப்பாளர், மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்.
நான் கண்ட சிவபாதசுந்தரனார்: ஒரு அபிமானி, (1958) சைவப்பிரகாச யந்திரசாலை வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்,
புலவர் நினைவுகள்: கு. முத்துக்குமார சுவாமிப்பிள்ளை (1967) புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.1_-00
மூன்றாவதுகண் (பண்டிதமணி சி.க.): இரசிகமணி கனகசெந்திநாதன் (1959) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம்.
யோகர்சுவாமிகள்: சிவனடியான் (1965) சண்முகநாத அச்சியந்திரசாலை, யாழ்ப்பாணம்
வாழையடி வாழை: க. செபரத்தினம் (1962) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு_-13 ரூ.2_-00
வாழ்வளித்த வழிகாட்டிகள்: வி. சுப்பிர-மணியம் (1955) சண்முகநாதன் புத்தகசாலை, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்.
ஸ்ரீமாவோ.பண்டாரநாயகா: பாமா இராசகோபால் (1970) ஈழநாடு, யாழ்ப்பாணம் ரூ.1-_00
முத்துத்தாண்டவர்: பண்டிதர் சி. நடராஜ பிள்ளை (1960) நேரு அச்சியந்திர சாலை, கொழும்பு, ரூ.0.80 சதம்.
விபுலானந்தர் சரித்திரச் சுருக்கம் மீட்சிப் பத்து: புலவர் மணி. ஏ. பெரிய தம்பிப் பிள்ளை (1960) இந்து பரிபாலன சபை, மட்டக்களப்பு ரூ.0.30 சதம்
வ.உ.சி செக்கிழுத்தசெம்மல்: ஈழவேந்தன் (1962) மா.க. கனகேந்திரன், வெள்ளவத்தை ரூ.0.30சதம்
(5) கவிதைகள்
அண்ணல் கவிதைகள்: ‘அண்ணல்’ (1954) அரசு வெளியீடு, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-_12 ரூ.2_-00
அது: மு. பொன்னம்பலம் (1968) தமிழ்ப் புத்தகாலயம், பைகிராப்ட்ஸ்ரோட், சென்னை_-5
அழகு: ச. அமிர்தநாதர் (1965) எஸ்.ஏ. பெர்னாண்டோஸ் ஸ்தாபனம், நுவரெலியா.
அழகியது: புலவர் பாண்டியனார் (1965) மெய்கண்டான், செட்டியார்தெரு, கொழும்பு-11 ரூ.4_-50
அறவழிக் கீதம்: எம்.ஐ.எல். பக்கீர்த்தம்பி (1963) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந்துறை, ரூ.0.60 சதம்
அறநெறிப்பா மஞ்சரி: சொக்கன் (1969) திருவாட்டி சின்னம்மா இராமலிங்கம் ஞாபகார்த்த வெளியீடு, நாயன்மார்கட்டு, யாழ்ப்பாணம்.
ஆனந்தத் தேன் (இரண்டாம் பதிப்பு): பண்டிதர்.க. சச்சிதானந்தன் பி.ஏ. (1961) க.சச்சிதானந்தன், மாவிட்டபுரம் ரூ.1-_00
இக்பால் இதயம்: அப்துல் காதர் லெப்பை (1961) மணிக்குரல் பதிப்பகம், லோவர் வீதி, பதுளை ரூ.1_-50
இரத்தக் கடன்: கவிஞர் சுதந்திரன் (1967) எழுவான் வெளியீடு, 19/3 அங்கின் றோட், மட்டக்களப்பு.
இலக்கிய உலகம்: வி. கந்தவனம் பி.ஏ. (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, ரூ.1-_40
இலங்கைவளமும் தாலவிலாசமும்: க.சோமசுந்தரப்புலவர், புலவரகம் நவாலி, மானிப்பாய்.
ஈழத்துக் கவிதைக் களஞ்சியம் (தொகுப்பு) கலாநிதி ஆ. சதாசிவம் (1967) இலங்கைச் சாகித்திய மண்டலம் ரூ.9_-00
ஈழத்துக் கவிமலர்கள்: (தொகுப்பு): இரசிகமணி கனக செந்திநாதன் 1962 பராசக்தி நிலையம், குரும்பசிட்டி, தெல்லிப்பனை, ரூ.1_-50
ஈழத்துப் பாதியார் கவிதைகள் (முதற்பாகம்): மு.வ. புவனேந்திரராசா. (1970) விபுலானந்தர் வெளியீடு, புல்லுமலைச் சந்தி, சூசைப்பிள்ளையார் குளம், வவுனியா, ரூ.1-_90
உமர் கையாம்: சி. கதிரவேற்பிள்ளை, கோவில் வீதி, யாழ்ப்பாணம்
எழுத்தாளர் காதலி: தமிழோவியன் (1959) தமிழோவியன், தெளிவத்தை, பதுளை.
எழிலி: பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் (1962) கலைச்செல்வி பாலன் வெளியீடு: செட்டிகுளம் ரூ. 1-
என்று வரும்?: முத்து இராசரத்தினம் (1970) ந. இராசநாயகம், 92, பாமன் கடை வீதி, கொழும்பு
ஏனிந்தப் பெருமூச்சு; வி. கந்தவனம் பீ.ஏ. (1967) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.1-_30
ஒரு வரம்: ‘முருகையன்’ (1964) இ.சரவண-முத்து, 151, சேர்ச் வீதி, கொழும்பு _ 2 ரூ.1-_00
கண்மணியாள் காதை: மகாகவி (1969) அன்னை வெளியீட்டகம், 89/1 கோவில் வீதி, யாழ்ப்பாணம். ரூ.1-_50
கண்டறியாதது: இ. சிவானந்தன் (1969) வட, இல, தமிழ் நூற்பதிப்பகம், சுன்னாகம் ரூ.2_-25
கண்ணிற் காக்கும் காவலன்: பண்டிதர்
க. வீரகத்தி, (1965) வாணி கலைக்கழகம் கரவெட்டி.
கவிதைக் குவியல்: ‘கோசுதா’ (1955) இளைஞர் முன்னேற்றப் பண்ணை, வெள்ளவத்தை ரூ.1-
கவிதைச் செல்வம் (தொகுப்பு); ச.வே. பஞ்சாட்சரம் (1961) யாழ்: இலக்கிய மன்றம், கந்தரோடை, சுன்னாகம் ரூ.1_-00
கவிதைப்பூம்பொழில்: வித்துவான் க.வேந்தனார் (1964) ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம் ரூ.2_-00
கனவுக் கன்னி: தில்லைச்சிவன் (1961) பாரதி இளைஞர் கழகம், வேலனை ரூ.1-
கன்னி மலர்; வெல்லளூர் கோபால் (1964) ஜீவா பதிப்பகம், தேற்றாத்தீவு, கழுவாஞ்சிக்குடி.
காந்தி பாமாலை (தொகுப்பு நூல்) அண்ணல் (1970) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு, ரூ.3-
காணிக்கை: தா. இராமலிங்கம் (1965) ‘ஏடு’ வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு,
கொழும்பு -13 ரூ.1-_10
கீதாஞ்சலி (மொழி பெயர்ப்பு): நடராசன்
கீரிமலையினிலே: வி. கந்தவனம் பி.ஏ. (1969) யாழ் இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம்
குலமலர்:ச. அமிர்தநாதர்
குறிஞ்சிப் பூ (தொகுப்பு): ஈழக்குமார் (1965) கவிதா நிலையம், 193, பேராதனை வீதி, கண்டி ரூ.1_-75
கொய்யாக்கனிகள்: திமிலைத் துமிலன் (1964) இராசம் பிரசுரம், திமிலை தீவு. மட்டக்களப்பு ரூ.2_-00 
சகுந்தலை வெண்பா: சு. நடேசபிள்ளை (1963) இராமநாதன் கழகம், மரதனா மடம், சுன்னாகம் ரூ.2_-50
சங்கிலியம்: காரை செ.சுந்தரம்பிள்ளை (1970) ஈழநாடு, சிவன் கோவில் மேலை வீதி, யாழ்ப்பாணம்.
சிட்டுக்குருவி: கவிஞர் மூவர் (1963) முக்கவிஞர் வெளியீடு, 31, திருகோணாமலை வீதி, மாத்தளை, ரூ.1-_50
சிந்தனைச் சோலை: தெ.அ. துரையப்பா பிள்ளை(1960) மகாசனாக் கல்லூரி தெல்லிப்பளை ரூ.5-_00
 சிலம்பொலி: நாவற்குழியூர் நடராசன் (1960) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ.1_-75
சிலம்பு சிரித்தது: இ நாகராசன்
சொந்த நாட்டிலே: சக்தி பாலையா (1961) 364, பழைய சோனகத் தெரு, கொழும்பு_-12. ரூ.1_00
செந்தமிழ்ச் செல்வம்: பண்டிதர் சோ. இளமுருகனார் (1957) புலவரகம், நவாலி. ரூ.1-_00
தண்டலை: பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் (1966) பூமாலை பதிப்பகம், 23, பலாலி வீதி, யாழ்ப்பாணம் ரூ.1_-50
தந்தையார் பதிற்றுப்பத்து (இரண்டாம் பதிப்பு): க. சோமசுந்தரப்புலவர், புலவரகம், நவாலி, மானிப்பாய்.
தமிழ் எங்கள் ஆயுதம் (தொகுப்பு): (1962) தமிழ் எழுத்தாளர் சங்கம் ‘வரதர் வெளியீடு’ கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம். ரூ.1-_00
தமிழன் கனவு; கா.சி. ஆனந்தன் (1968) ரகுநாதன் பதிப்பகம் 303, காலி வீதி, கொழும்பு_-3, ரூ.2_-00
தாய்: தில்லைச்சிவன், அன்பு வெளியீடு, 27-டி, பெரியகடை, யாழ்ப்பாணம்.
தீங்கனிச் சோலை: பரமகம்ச தாசன் (1963) ஆத்மஜோதி நிலையம், நாவலப்பிட்டி ரூ.2-_50
தூவானம்: குமரன் (1967) குறிஞ்சிப்பண்ணை, பதுளை ரூ. 1-_50
தூவுதும் மலரே: ஈழத்துக் குழூஉ இறையனார் (1962) கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம்.
தேயிலைத் தோட்டத்திலே: ஸி.வி. வேலுப் பிள்ளை (1969) தமிழாக்கம்: சக்தி அ. பாலையா, ‘செய்தி’ பதிப்பகம் த.பெ. 5, கண்டி ரூ. 1_-50
தேனாறு: கவிஞர் காரை சுந்தரம்பிள்ளை (1968) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம் ரூ.2-_50
நன்மொழி நாற்பது: யூ.எஸ்.ஏ. மஜீத் (1961) அன்புவாசா நியூறோட், கல்முனை_-7 ரூ.1_-00
நீதிக் கரங்கள்: ஐந்து கவிஞர்கள், பதிப்பாசிரியர் கனக செந்திநாதன் (1966) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம்: ரூ.1_-00
நீரர மகளிர்: திமிலைத்துமிலன் (1963) இராசம் பிரசுரம், திமிலைத்தீவு, மட்டக்களப்பு, 50 சதம்.
நெடும் பகல்: முருகையன் (1967) அமுத நிலையம், ராயப்பேட்டை சென்னை - 14. ரூ. 3.00
புதுமெய்க் கவிதைகள்: தா. இராமலிங்கம் (1964) பரிலூக்கா கல்லூரி, இரத்தினபுரி ரூ. 1.00
புது உலகம்: க. பசுபதி (1965) எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம், 9,2/7, யோர்க் வீதி, கொழும்பு. ரூபாய் 2.25
புரட்சிக் கமால் கவிதைகள்: புரட்சிக் கமால் (1962) இக்பால் பதிப்பகம், கண்டி ரூ. 3.00
பூரணன் கதை: பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் ரூ. 2.50
பூவை விடு தூது (மொழிபெயர்ப்பு) சோ. நடராசன் (1963) ஸ்ரீலங்கா சாகித்ய மண்டலம், கொழும்பு ரூ. 2.00
மகாகவியின் குறும்பா: மஹாகவி (1960) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 2.25
மலர்ந்த வாழ்வு: ஸ§பைர் (1956) தமிழ் மன்றம், கல்கின்னை, கண்டி ரூ.1.00
மரகதன் ஓட்டமணி ஒலி: ச.த.மு. சதக்குத் தம்பிப்பாவலர் (1970) எஸ்.எம். சாகிபு, 24, முகாந்திரம் ரோடு, மாத்தளை, ரூ 1.25
முகிலன் கவிதைகள்: முகிலன் (1964) தட்டார ஒழுங்கை, கொழும்பு -_ 2 ரூ. 1.00
முதுமை நினைவு: பொ. கந்தையா (1966) சுதந்திரன் அச்சகம், 194, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு.
முருகேச பண்டிதர் பிரபந்தத் திரட்டு; கு. முத்துக்குமாரசாமிப்பிள்ளை பி.ஏ. புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.1.00
முல்லைக்காடு: ஜீவா யாழ்ப்பாணன் (1957) கலாபவனம், பருத்தித்துறை ரூ.1-_50
முற்றத்து மல்லி (தொகுப்பு): அப்துல் ஸமது.
மேகதூதம் (மொழி பெயர்ப்பு) சோ. நடராசன் (1954) அப்போதிக்கரீஸ் கம்பெனி, குமாரவீதி, கொழும்பு ரூ.1.75
வள்ளி: மஹாகவி (1955) வரதர் வெளியீடு, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.60 சதம்
வாழும் கவிதை: ஜீவா ஜீவரத்தினம் (1963) மஞ்சுளா பிரசுரம், துறைநீலாவணை, கல்முனை, ரூ.0.75 சதம்
வானம் சிவக்கிறது: புதுவை. இரத்தின துரை (1970) சுசாஜினி வெளியீடு, திருநெல்வேலிகிழக்கு, யாழ்ப்பாணம். ரூ.1.50
விடிவெள்ளி கவிதைகள்: க.பே. முத்தையா (1964) பெற்றார் ஆசிரியர் சங்கம், சாதனா பாடசாலை, நல்லூர் ரூ.1.00
விடுதலை வேட்கை: ஆ. சபாபதி (1966)
விபுலானந்தக் கவிதைகள்: அருள் செல்வ நாயகம் (1958) மலர் நிலையம் ரூ.2.00
விஜயேந்திரன் கவிதைகள்: விஜயேந்திரன், வள்ளுவர் தமிழ் மன்றம், யாழ்ப்பாணம், ரூ. 1.00
விபுலானந்த கண்மலர்: அருள்செல்வநாயகம், (1965), ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.25
வீரத்தாய்: சொக்கன் கலாபவனம், பருத்தித் துறை, ரூ.1.00
வேனில் விழா: பண்டிதர் இளமுருகனார், இலக்கியக் கழகம், யாழ்ப்பாணம், (புலவரகம் நாவலி, மானிப்பாய்) ரூ.1.00
(6) சமயப் பாடல்கள்
அன்னை லலிதாம்பிகை அருட்பேராயிரம்: க.வை.ஆ. சர்மா (1964) ஐயனார் கோவிலடி ஒழுங்கை, வண்ணார் பண்ணை, ரூ. 2.00
கதிரேசன் பாமாலை: மு.க. சூரியன் (1955) எம்.சி. தங்கையா, தலத்தோய எஸ்டேட், தலத்தோய ரூ. 60
கதிரைமலை யாத்திரை பாராயணப் பிரபந்தம் புலவர் சி. சின்னையா (1955), புலவர் சின்னையா, கச்சாய், ரூ. 2.00
உசன் முருகன் பேரில் (கப்பற் பாட்டு): பண்டிதர் சோ. இளமுருகனார் (1961) ச. இராசரத்தினம், கந்தசாமி கோவில், உசன்
கதிரைச் சிலேடை வெண்பா: நவாலி க. சோமசுந்தரப்புலவர் (1955) புலவரகம், நவாலி, மானிப்பாய், ரூ.13.00
கதிரைமலைக்கோவை: புலவர் சின்னையா (1963) தமிழ் இலக்கிய மன்றம், கச்சாய் ரூ 1.50
காசியாற்றுப்படை: கு.முத்துக்குமார சுவாமிப்பிள்ளை பிஏ. (1963) புலவரகம் மயிலணி, சுன்னாகம், ரூ.0.35 சதம்
கதிர்காமப் பதிகம்: க.ராமசந்திரன் (1961) ஆத்மஜோதி நிலையம்  நொவலபிட்டி.
கந்த மலர்ப் பந்தர்: நா. தர்மலிங்கம் (1970) நா. தர்மலிங்கம், வட்டுக்கோட்டை. ரூ.1.00
குமாரபுற குமாரவேள் பதிகம்:
மு. செல்லையா (1957) ஸ்ரீலங்கா வித்தியாசாலை, அல்வாய் ரூ.0.50 சதம்
செல்வச் சந்நிதிக்கந்தன் திருப்பாமாலை: அருட்கவி சி. விநாசித்தம்பி (1967) சுப்பிரமணியன் சோடாக் கம்பெனி, வல்வெட்டித்துறை.
சுவாமிபிள்ளைத் தமிழ்: பண்டிதர் வித்துவான் காசி நடராசன் (1969) யாழ் கூட்டுறவுத் தமிழ் நூற்பதிப்பு விற்பனைக் கழகம், 111/1, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம், ரூ. 2.50
செழுங்கமலச் சிலம்பொலி: பண்டிதர்
க. வீரகத்தி (1970) வாணி கலைக்கழகம் கரவெட்டி ரூ 2.00
சிவானந்தலகரி (மொழி பெயர்ப்பு): பண்டிதர் ச. சுப்பிரமணியம் (1968) அமரபாரதி பரிக்ஷ£ஸமிதி இலங்கைக்கிளை, யாழ்ப்பாணம் ரூ. 2.50
நயினைத் தபால்: கவிஞர் ஞா.ம. செல்வராசன் (1961) ஞா.ம.செல்வராசன். ஊர்காவல்துறை.
நல்லைக் கந்தன் பாமாலை: மு.க. சூரியன் (1968) ‘அரஸ் கோ’ தொழிற்சாலை, நல்லூர், யாழ்ப்பாணம்.
நயினாதீவு நாகேஸ்வரி பதிகமும் - உரையும்: பரகவி கி.முத்துக்குமாரப் புலவர் (1965) க.ஐயாத்துரை சோதிட விலாச நயினாதீவு ரூ.0.50 சதம்
நீர்வை கந்தன் தோத்திரம்: தொகுப்பு நூல் (1968) தேவஸ்தானம், நீர்வேலி.
நபி மொழி நாற்பது: ஆ.மு. ஷரிபுத்தீன் (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு, ரூ. 1.50
நாமகள் புகழ் மாலை: க. சோமசுந்தரப் புலவர், புலவரகம், நவாலி - மானிப்பாய்.
திருமண்டூர் முருகமாலை: மு. சோமசுந்தரன் (1960) மு. சோமசுந்தரன், மண்டூர், ரூ.1.00
தில்லையந்தாதி: பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1964) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், ரூ.0.75 சதம்
பக்திப் பாடல்கள்: கா.சி. ஆனந்தன் (1965) கா.சி. ஆனந்தன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக் குழு, மட்டக்களப்பு ரூ.0.75 சதம்
பகவத் கீதை வெண்பா: புலவர் மணி பெரிய தம்பிப் பிள்ளை (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித்தெரு, கொழும்பு -_ 13, ரூ.3.50
பாணந்துறைக்கந்தரந்தாதி: பண்டிதர் த. சுப்பிரமணியம் (1956) சைவமகாசபை, பாணந்துறை
முத்துக்குமாரசாமி தோத்திரப்பாமாலை (வேலக்கை): விசுவநாதர், சின்னத்தம்பி (1969) வி.சி. முத்துவேலு, மாணிப்பாய் தெற்கு.
மயிலணி அந்தாதி: கு. முத்துக்குமாரசாமி பிள்ளை பி.ஏ. (1966) புலவரகம், மயிலணி, சுன்னாகம் ரூ.0.50 சதம்
மாத்தளைக் குறவஞ்சி, நவாலியூர் சொக்கநாதன், முக்கவிஞர் பதிப்பகம் மாத்தளை ரூ.1.00
மாவைப்பிள்ளைத் தமிழ்: பண்டிதர் மு. கந்தையா (1967) முத்தமிழ்க் கலைமன்றம் மாவிட்டபுரம் ரூ. 2.50
வள்ளி நாயகன் (நாடகக் காவியம்): அருட்கவி ச. விநாசித் தம்பி (1969) த. குணபாலசிங்கம், திருவருள் அளவெட்டி. ரூ.1.50
(7) சிறுவர் நூல்கள்
அம்பிப்பாடல்: ‘அம்பி’ (1969) வட இலங்கைத் தமிழ்நூற்பதிப்பகம் சுன்னாகம், ரூ. 2.25
கனியமுது: தொகுப்பாசிரியர் திமிலை மகாலிங்கம் (1965) தேனமுத இலக்கிய மன்றம் 1/1, டயஸ்வீதி, மட்டக்களப்பு, ரூ. 1.10
குழந்தை இலக்கியம்: சாரணா கையூம் (1963) சாயியா பதிப்பகம், வதுளை, ரூ.0.60சதம்
குருமோகன் ஞாபகார்த்தப் பாடல்கள்: தொகுப்பாசிரியர் (குறமகள்) (1965) ‘குறமகள்’ சின்னத்தம்பி வளவு, காங்கேசன் துறை,
சிறுவர் செந்தமிழ்: நவாலியூர் க. சோம சுந்தரப்புலவர் (1955) புலவரகம் நவாலி மானிப்பாய் ரூ.2.50
சிறுவர் பாடல் : இ. நாகராசன் (1968) சண்முகநாதன் அச்சகம், யாழ்ப்பாணம் ரூ.1.50
செந்தமிழ்க் கீதமாலை: அ.கி. ஏரம்பமூர்த்தி, (1964) அபிவிருத்திச்சபை, கரைச்சி ரூ.1.00
செந்தமிழ்ச் சிறுவர்களே சேர்ந்து பாடுபடு-வோம்: தொகுப்பாசிரியர் செல்வி சந்தனநங்கை கந்தப்பு (1955) மகளிர் ஆசிரிய பயிற்சிக் கழகம், கோப்பாய், ரூ. 1.25
பாட்டு: சத்தியசீலன் (1970)
பாலர் பாடல்: ‘கோசுதா’ (1957) வள்ளுவர் பண்ணை, 140 விவேகானந்த மேடு, கொழும்பு ரூ.0.50 சதம்
பாலர் பாமலர்: தொகுப்பு நூல் (1957) தமிழாசிரியர் சங்கம், நாவலப்பிட்டி
பாலர் பாமாலை: வெற்றிவேல் விநாயக மூர்த்தி (1964) பஞ்சவர் முத்தமிழ்ப் பண்ணை, பன்குடாவெளி, மட்டக்களப்பு, ரூ.0.85 சதம்
பிள்ளைத் தமிழ்: ச. அமிர்நாதர் (1970) கலைமன்ற வெளியீடு, நுவரெலியா,
மழலைச்செல்வம்: (தொகுப்பு நூல்) (நினைவு நூல்) (1984) செல்வி இந்திராநடராசா மயிலங்கூடல், இளவாலை
மலரும் மணம்: எம்.சி.எம். ஸ§பைர் (1967) மணிக்குரல் பதிப்பகம், கல்கின்னை ரூ. 1.75
மாணாக்கரின் காந்தி: எம்.ஏ. ரகுமான் (1969) அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு_-13 ரூ. 1.50
(8) இலக்கியக் கட்டுரைகள்
இலக்கியச்சோலை: செந்தமிழ் மணி பொ. கிருஷ்ணபிள்ளை (1964) ஆசிரியர் கலாசாலை, பலாலி, வசாவிளான்: ரூ. 2.25
இலக்கிய வழி (புதிய பதிப்பு): பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1955) திருநெல்வேலி ஆசிரியகலாசாலை பழையமாணவர் சங்கம் (1964) ரூ. 1.50
இரு மகா கவிகள்: கைலாசபதி எம்.ஏ., பி.எச்.டி. (1962_-1968) என்.சி.பி.எச். நிறுவனம், 6, நல்லதம்பி செட்டி தெரு, மவுண்ட் ரோட், சென்னை. ரூ. 1.50
ஈழத்து இலக்கிய வளர்ச்சி: இரசிகமணி கனக செந்திநாதன் (1964) அரசு வெளியீடு, 231, ஆதிராப்பள்ளித் தெரு, கொழும்பு_-13 ரூ. 3.50
ஈழத்தின் தமிழ் நாவல் வளர்ச்சி: சில்லையூர் செல்வராசன் (1967) அருள் நிலையம், சென்னை. ரூ.2
ஈழத்து முஸ்லீம் புலவர்கள்: ஏயாரெம் சலீம் (1962) பிறைப்பண்ணை, அக்கரைப்பற்று ரூ.1.50
ஈழத்து வாழ்வும் வளமும்: பேராசிரியர்
க. கணபதிப்பிள்ளை (1962) பாரி நிலையம் பிராட்வே, சென்னை ரூ. 2.50
உரைமலர்: எம்.ஐ.எல். பக்கீர்தம்பி (1961) கலாபிவிருத்திக் கழகம், சம்மாந்துறை. ரூ. 1.25
ஒலிபரப்புக் கலை : சோ. சிவபாதசுந்தரம் (1954) கலாபவனம், 23, பெயர்லைன் ரோட், தெஹிவளை ரூ.6_00
கலையும் பண்பும்: ‘பிறையன்பன்’ (1961) கிங்ஸ்வி பதிப்பகம், கண்டி ரூ. 3.25
கவிதை வானில் ஒரு வளர்பிறை: கனக. செந்திநாதன் (1958) வரதர் வெளீயீடு கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் ரூ.0.50 சதம்
கம்பனது கதாபாத்திரங்கள் :
சி. இலட்சுமணன் எம். ஏ. (1959) திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.
காப்பியச் சொற்பொழிவுகள் : (தொகுப்பு) எஸ். பொன்னுத்துரை (1965) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-_13
குறளில் உணர்ச்சிவளம் : இரத்தினம் நவரத்தினம் எம்.ஏ. (1958) சிவத்தொண்டன் டிரஸ்ட், யாழ்ப்பாணம்.
சிலம்பின் சிறப்பு : வித்துவான் பொன் முத்துக் குமாரன் (1964) வரதர் வெளியீடு, கே.கே.எஸ்.வீதி, யாழ்ப்பாணம் ரூ. 2-50
செந்தமிழ் வழக்கு : பண்டிதர் சோ. இளமுருகனார் (1963) தமிழ்ப் பாதுகாப்புக் கழகம், யாழ்ப்பாணம் ரூ. 1_-00
செந்தமிழும் சிலுவையும் : க.பே. முத்தையா (1963) க.பே. முத்தையா, கண்டிக்குளி, யாழ்ப்பாணம் ரூ.1-00
தமிழ் மறைக் கட்டுரைகள் : பண்டிதர் க.போ. இரத்தினம் பா.உ. (1959) தமிழ் மறைக் கழகம், கொழும்பு ரூ. 4
தமிழர் சால்பு : கலாநிதி சு. வித்தியானந்தன் (1954) தமிழர் மன்றம், கல்கின்னை கண்டி ரூ. 4.
தமிழன் எங்கே? : மு. கணபதிப்பிள்ளை (1958) ஈழமணிப்பதிப்பகம் 60, குமாரன் இரத்தினம் வீதி, கொழும்பு. ரூ. 1-_50
தமிழிலக்கிய வரலாறு : வி. செல்வநாயகம் எம்.ஏ., ஸ்ரீலங்கா அச்சகம், கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் ரூ. 4_-25
திருக்குறள் ஆராய்ச்சி : பல அறிஞர்கள் (1955) திருக்குறள் மன்றம், கொழும்பு. ரூ. 2
நான் கண்ட பாரதி : நீ. வ. நிக்கலஸ் (1965) கம்பன் கலைப்பண்ணை, மூதூர். ரூ. 3-_75
படித்தவர்கள் :மு. நடேசபிள்ளை (1959) ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே.கே.எஸ். வீதி யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்
பாரதத் தூதுவர் : கி. இலட்சுமணன் எம்.ஏ. பாரி நிலையம், 59, பிராட்வே, சென்னை
பாரத நவமணிகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1959) பிலோமினா அச்சகம்,  பிரதான வீதி. யாழ்ப்பாணம் ரூ. 2_-25
பாரதி கண்ட சமுதாயம் : இளங்கீரன் நவபாரதப் பிரசுரம், சென்னை.
மேல் நாட்டுத் தரிசன வரலாற்றின் சுருக்கம்: சி. கதிரவேற்பிள்ளை (1958) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம் குரும்பசிட்டி ரூ. 3
அன்னை தயை : மு. கணபதிப்பிள்ளை (1966) பாரிநிலையம், 57, பிராட்வே, சென்னை -1.
 பிரபந்தப் பூங்கா : இரசிகமணி கனக. செந்திநாதன் (1967) வரதர் வெளியீடு கே.கே.எஸ்.வீதி. யாழ்ப்பாணம். ரூ.1_-50
அருமைக்குழந்தைகளுக் கோர் அம்பிப்பாடல்: இரசிகமணி கனக செந்திநாதன் (1969) யாழ் இலக்கிய வட்டம், மாநகரசபை, யாழ்ப்பாணம்
இஸ்லாமிய இலக்கியச் சொற்பொழிவுகள் : (தொகுப்பு) எஸ்.ஏ. செய்யது ஹஸன் மௌலானா  (1968) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 7-_50
இலங்கையில் இன்பத் தமிழ் : க.பொ.இரத்தினம் பா. உ. (1960) கலைவாணி புத்தக நிலையம், யாழ்ப்பாணம் ரூ.1
இலங்கையில் இரு மொழிகள் : இளங்கீரன் (1959) லட்சுமிப்பதிப்பகம், சென்னை_-17 ரூ. 1_-25
ஈழநாட்டுத் தமிழ்ச் சுடர் மணிகள் :
மு. கணபதிப்பிள்ளை
உரை நடை வரலாறு : வி. செல்வநாயகம் எம்.ஏ. ஸ்ரீலங்கா புத்தகசாலை, கே. கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம்
ஒப்பியல் இலக்கியம் : க. கைலாசபதி எம். ஏ. பி. எச். டி. (1969) பாரி நிலையம், பிராட்வே, சென்னை ரூ. 6
கல்கி பிறந்தார் : இராஜ அரியரத்தினம் பாரி நிலையம், பிராட்வே, சென்னை ரூ. 1
கருத்துரைக் கோவை : கலாநிதி ஆர். சதா சிவம் (1959) ஆ. சதாசிவம், அராலி வட்டுக்கோட்டை ரூ. 2
கவிதை நயம் : க. கைலாசபதி இ. முருகையன் (1969) செய்யுட்கள் வெளியீடு கொழும்பு ரூ. 4
கூனியின் சாதனை : கவிஞர் வி. கந்தவனம் (1970) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம் ரூ. 1_-75
சிறுகதையின் தோற்றமும் - வளர்ச்சியும் : கா. சிவத்தம்பி எம்.ஏ.பி.எச்.டி. (1967) பாரிநிலையம், 59, பிராட்வே, சென்னை ரூ. 2-.75
தமிழ் நாவல் இலக்கியம் : க. கைலாசபதி எம்.ஏ.பி.எச்.டி. (1968) பாரி நிலையம் பிராட்வே சென்னை ரூ. 4-_50
நீ (உணர்வூற்று உருவகச்சித்திரம்) எஸ். அகஸ்தியர் (1969) இலங்கை முற்போக்கு எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், 4/44, தலகொட்டுவ நாரன்பிட்டிறோட் கொழும்பு  ரூ.0.75 சதம்
பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும் :
க. கைலாசபதி எம்.ஏ.பி.எச்.டி. (1966) என்.சி.பி.எச் நிறுவனம், சென்னை ரூ. 3-_00
போர்ப்பறை : மு. தளையசிங்கம் (1970) சர்வோதய இயக்கம், புங்குடுதீவு ரூ. 3-_50
மட்டக்களப்புத் தமிழகம் : வி.சி.கந்தையா (1964) ஈழகேசரி பொன்னையா நினைவு வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி ரூ. 10
மலரும் மணமும் : ஆ. கந்தையா எம்.ஏ.(1962) பாரிநிலையம் 59, பிராட்வே, சென்னை_1 ரூ.2
முஸ்லீம் தமிழ்ப் பாரம்பரியம் : எம். கே.செய்யது அகமது (1968) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 4_-25
விபுலானந்த ஆராய்வு : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர், சென்னை ரூ. 2
விபுலானந்த அமுதம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1956) கலாநிலையம் 176, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 1_-50
விபுலானந்தச் செல்வம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1963) கலைமகள் காரியாலயம், மயிலாப்பூர் சென்னை ரூ. 2
விபுலானந்த வெள்ளம் : தொகுப்பு: அருள் செல்வநாயகம் (1961) ஓரியன்ட் லாங்ஸ் மன் கம்பெனி, சென்னை ரூ. 2_-25
வடமொழி இலக்கிய வரலாறு (முதற் பாகம்) கா. கைலாசநாதக்குருக்கள் எம்.ஏ. பி. எச்.டி. (1962) கலாநிலையம், 175, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 3
விபுலானந்தத்தேன் : (தொகுப்பு) அருள் செல்வநாயம் (1956) பாரிநிலையம் பிராட்வே, சென்னை ரூ. 2-_50
நறுமலர் மாலை : அருள்செல்வநாயகம் (1957) கலாநிலையம், செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 1-_50
வள்ளுவன் முதல் பாரதிதாசன் வரை : சி. தில்லைநாதன் எம்.ஏ. (1967) தமிழ்ப் புத்தகாலயம், 576, பைகிராப்ட்ஸ் றோட், சென்னை -5, ரூ. 2-.50
(9) சமயக் கட்டுரைகள்
அறுமுகமான பொருள் : செ. தனபாலசிங்கன் (1961) சிதம்பர சுப்பிரமணியகோவில் நிர்வாகசபை, உரும்பராய் ரூ.2-_00
இந்திய சமயத்துவங்கள் : கி.இலட்சுமணன்
இலங்கையிற் சமயங்களும் அவைதரும் இன்ப வாழ்க்கை நெறியும் : ச தியாகராசா (சரசாலை) (1955) ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம். ரூ.0.80 சதம்
ஈழத்துச் சிதம்பரம் : ச.கணபதீஸ்வரக் குருக்கள் (1961) சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம், காரைநகர் ரூ. 2_-50
உமையம்மை திருப்புராணங்கள் : (1965) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி தெல்லிப்பளை
கந்தபுராண கலாசாரம் : பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளை, இந்துக்கல்லூரி மானிப்பாய் ரூ. 1
இந்துமதமும் கடவுள்கள் வரலாறும் :
இறைதூதர் இன்றேல் : எம்.ஏ.எம்.சுக்ரி. பி.ஏ. (1966) இலங்கை முஸ்லீம் எழுத்தாளர் சங்கம் த. பெ. 824, கொழும்பு_-13. ரூ. 1
உபநிடதச் சிந்தனைகள் : செ. தனபாலசிங்கன், சிதம்பரசுப்பிரமணிய தேவஸ்தானம், உரும்பராய். ரூ.2
கந்தபுராண போதனை : பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளை (1960) அகில இலங்கைச் சைவ இளைஞர் மத்தியமகாசபை. ரூ. 1-_25
கந்தபுராண விளக்கம் : சு. சிவபாதசுந்தரம் (1954) கொழும்பு விவேகானந்தசபை ரூ. 1_-25
கந்தர் கலிவெண்பா உரை : வழக்கறிஞர் நா. ஏகாம்பரம் (1955) நா. ஏகாம்பரம் வட்டுக்கோட்டை
கதிர்காமம் (இரண்டாம் பதிப்பு) குல.சபா நாதன் ரூ.2
கதிர்காமத் திருமுருகன் : எஸ்.எஸ்.நாதன் (1964) செல்லச்சாமி நாடார் அன் பிரதர்ஸ்
கீதை அமுதம் : செ. தனபாலசிங்கன் (1970) உரும்பராய். ரூ. 5
கோயில் அல்லது சிதம்பரச் சிறப்பு : பண்டிதர் செ. சிவப்பிரகாசம் (1965) முத்துத்தம்பி வித்தியாசாலை, திருநெல்வேலி ரூ. 2_-50
சங்கர பண்டிதர் பிரபந்தத்திரட்டு : சங்கர பண்டிதர் (1957) ச. பொன்னுச்சாமி வெளியீடு ரூ. 1
சமயக் கட்டுரைகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1961) திருநெல்வேலி ஆசிரிய கலாசாலை பழைய மாணவர் சங்கம்.
 சிவபெருமான் திரு நடனம் : பண்டித நடராசபிள்ளை (1962)
சிவராத்திரி விரத மகிமை : வித்துவான் வேலன் (1965) கலைவாணி புத்தக நிலையம் யாழ்ப்பாணம் ரூ. 1-_50
சுன்னாகம் ஐயனார்கோவில் வரலாறு : (1965) கோவில்பரிபாலன ஆதரவாள் சபை, சுன்னாகம்
சைவ நற்சிந்தனைகள் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1954) சன்மார்க்கசபை. குரும்பசிட்டி. ரூ.0.50 சதம்
சைவக்கதிர் : வீ. அருணாசலம்பிள்ளை (1954) சைவமகாசபை, மாத்தளை.
சைவத்திருக் கோயிற்கிரியை நெறி : கலாநிதி கா. கைலாசநாதக்குருக்கள் (1963) கலாநிலையம் 175, செட்டியார் தெரு, கொழும்பு ரூ. 5
சைவத்திருமணம் : கு. பாலசுந்தரக்குருக்கள் பி.ஏ. (1961) ஸ்ரீலங்கா சைவ ஆதீனம் கஸ்தூரியார் வீதி யாழ்ப்பாணம். ரூ.1-_50
சைவ சமய புண்ணிய காலம் : பண்டிதர் : த. சுப்பிரமணியம் (1957) ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம் ரூ. 1-_50
திருவாதிரை மலர் : ச. கணபதீஸ்வரக்குருக்கள் (1964) ஈழத்துச்சிதம்பரம் தேவஸ்தானம், காரைநகர் ரூ. 1
திருமுறைக் காட்சி : நா. முத்தையா (1960) ஆத்ம ஜோதி நிலையம், நாவலப் பிட்டி ரூ. 1_-50
திருக்கேதீஸ்வரம் : ஆ. கந்தையா எம்.ஏ. (1958) ஸ்ரீ காந்தா அச்சகம். யாழ்ப்பாணம் ரூ. 3
தெய்வீகவாழ்வு : (மொழிபெயர்ப்பு) இராசேஸ்வரி தம்பு (1956) திருமகள் அழுத்தகம் சுன்னாகம்.
சைவ சமய வரலாறு : ந.சி.கந்தையாப்பிள்ளை (1958) ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம் பவழக்காரத் தெரு, சென்னை ரூ. 1_-50
தேவாரத்திருவமுதம் : வே.க.ப.நாதன் (1954) 128/5, வாட்பிளேஸ் கொழும்பு.
நயினை நாகேஸ்வரி : குல. சபாநாதன் (1962) ரூ. 1_00
நவராத்திரி மாலை : (1964) வட-இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம். சுன்னாகம் ரூ.0.70 சதம்
நாக தம்பிரான் மான்மியம் : பண்டிதர்
த. சுப்பிரமணியம் (1963) ஸ்ரீகாந்தா அச்சகம் யாழ்ப்பாணம் ரூ.1
மாவிட்டபுரத் திருத்தல வரலாறு :
து. சண்முகநாத குருக்கள் (1965) சன்மார்க்க சபை குரும்பசிட்டி ரூ.1
முன்னேஸ்வர மான்மியம் : மு : சோமாஸ் கந்தக் குருக்கள், முன்னேஸ்வர தேவஸ்தானம், சிலாபம்
முருகன் மணவாளன்: செ. தனபால சிங்கன் (1964) உரும்பராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில், கொழும்பு கிளை, ரூ. 2_00
பகவத்கீதை கர்மயோகம்: மு. ஞானப்பிரகாசம் பி.ஏ.பி.எஸ்.ஸி. (1968) வட இலங்கைத் தமிழ் நூற் பதிப்பகம், சுன்னாகம், ரூ. 3_00
படைவீடுடைய பரமன்: செ. தனபாலசிங்கன் பி.ஏ. (1968) சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம், ரூ. 3_00
(10) பிற நூல்கள்
அப்பலோ 11,12, புத்தொளி (1969) தமயந்திப் பதிப்பகம், அச்சுவேலி. ரூ.0.60 சதம்
விஞ்ஞானக் கட்டுரைகள் : மு. சிவராசா (1968) மக்கள் கலைமன்றம், அரசடி, சங்கானை. ரூ. 1
அருமைத்தங்கைக்கு (சுகாதாரக் கடிதங்கள்) டாக்டர் நந்தி (1960) சரஸ்வதி காரியாலயம், இராயப்பேட்டை, சென்னை ரூ. 1_-25
அருட்கொடை (சம்பவத்திரட்டு) : எஸ்.எம்.ஜவுபார் (1965) முஸ்லீம் ஹோட்டல் புத்தக நிலையம், கண்டி ரூ. 3
ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை: (கட்டுரை) கலாநிதி ஆ. சதாசிவம் (1963)
இலங்கையிற் கலைவளர்ச்சி (கலைநூல்) : கலைப்புலவர் க.நவரத்தினம் (1954) ஈழகேசரிப் பொன்னையா வெளியீட்டு மன்றம், குரும்பசிட்டி. ரூ. 15
இல்லத்தின் இன்பம் (கட்டுரை) (வாழ்க்கை) ஜோ. ஏ.எம். தாஸ் (1961) மதுராநிலையம், சென்னை-1, ரூ.0.75 சதம் 
இளமைப் பருவத்திலே (சிறுவர் இலக்கியம்) எம்.ஏ.ரகுமான் (1962) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு 13. ரூ. 1
இலங்கைத் தமிழர் வரலாறு (வரலாற்று நூல்) பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை (1965) பல்கலைக் கழகம், பேராதனை. ரூ. 1
இலக்கண சந்திரிகை (இலக்கணம்) :
அ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் கழகம், மல்லாகம், ரூ. 1
இலங்கையில் தமிழ்ப் பாடங்கள் :
சி. சிவஞானசுந்தரம் (1970) அழகு வெளியீட்டகம். ஏழாலை. ரூ. 1
இலங்கைத் தீவு (கட்டுரை) எஸ். விஜயதுங்க, தமிழில் கே.வி. இராமச்சந்திரன் (1959) அருணோதயம், இராயப்பேட்டை, சென்னை 14.  ரூ. 1_-40
ஈழமும் தமிழும் (புத்தக அட்டவணை) : (தொகுப்பு) எவ் : எக்ஸ் சி. நடராசா (1960) கலைமகள் கம்பெனி, 124, செட்டியார் தெரு, கொழும்பு -11.
ஈழத்து நாடோடிப் பாடல்கள் : தி.ஙீ.சி. நடராசா (1962) ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம். ரூ. 1_-50
ஓவியக்கலை (கலை நூல்) கலாகேசரி
ஆ. தம்பித்துரை (1961) சன்மார்க்கசபை, குரும்பசிட்டி, தெல்லிப்பளை : ரூ. 1
களவுக் காதலர் கையாண்ட விடுகதைகள் : நாட்டார் இலக்கியம் (மக்கள் கவிமணி)
மு. இராமலிங்கம் (1962) இராதா பிரசுரம், மைலாப்பூர், சென்னை ரூ. 1_-50
கற்காலக்கலையும் சுவையும் (கலைநூல்) : ச.பெனடிக் (1959) ஈழக்கலை மன்றம் இராசமலை. திருகோணமலை. ரூ. 2
கண்ணகிபுராணம் (கவிதை) (பழையநூல் இரண்டாம் பதிப்பு) பதிப்பாசிரியர் மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா வட்டுக்கோட்டை. ரூ.0.50 சதம்
காலமும் கருத்தும் (சொற்பொழிவு) புதுமைலோலன் (1964) அன்பு வெளியீடு சீனியர் ஒழுங்கை, வண்ணார்பண்ணை ரூ.0.25 சதம்
கிராமக்கவிக்குயில்களின்  ஒப்பாரிகள் (நாட்டார் இலக்கியம்) (தொகுப்பு) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1960) அயோத்தி, வட்டுக்கோட்டை ரூ.1
கொழும்புப் பெண் (நகைச்சுவைக் கட்டுரைகள்) பொ. சண்முகநாதன் (1965) கலைச் செல்வி. புகையிரத நிலையவீதி, சுன்னாகம். ரூ. 1_-50
சாத்திரி : ஆசிரியர். செ. சோதிநாதன் (1960) செ. சிவப்பிரகாசம், தாவடி, கொக்குவில். ரூ.3_25
சிலப்பதிகாரச் செந்நெறி (சொற்பொழிவு) நாவேந்தன் (1968) தமிழ்க் குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு சுன்னாகம் ரூ.0.25 சதம்
சிறுவர் சித்திரம் (கலைநூல்) : கலாகேசரி ஆ. தம்பித்துரை (1962) சன்மார்க்க சபை குரும்பசிட்டி, தெல்லிப்பளை ரூபா. 1_-50
சுருட்டு கைத்தொழில் : க. குணராசா (1965) யாழ். இலக்கியவட்டம், மாநகர சபை, யாழ்ப்பாணம். ரூ.1
சேக்ஸ்பியர் கதைகள் (மொழிபெயர்ப்பு) :
சோதிட வாசகம் (கட்டுரை) த. கணபதிப் பிள்ளை மு.சின்னப்பு. (1959) மு. சின்னப்பு அனவெட்டி. ரூ.1.
தங்கத்தாமரை (சிறுவர் இலக்கியம்) : இந்திராணி மார்க்கண்டு (1962) பூபால சிங்கம் புத்தகசாலை பெரியகடை, யாழ்ப்பாணம். ரூ.0.75 சதம்
திருமணம் (கட்டுரைநூல்) தெல்லியூர் செ. நடராசா (1964) சோதிட அலுவலகம், குமாரசாமி வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம். ரூ.1
நகைமலர் : ஏ.எச்.எம். யூசுபு (1966) முஸ்லிம் முற்போக்கு எழுத்தாளர் சங்கம், காலி. ரூ. 1_-75
நாட்டுப் பாடல்கள் : வெள்ளவத்தை மு. இராமலிங்கம் (1957) அயோத்தியா, வட்டுக்கோட்டை.
நாட்டார் பாடல்கள் (நாட்டார் இலக்கியம்) மக்கள் கவிமணி மு. இராமலிங்கம் (1961) அயோத்தியா, வட்டுக்கோட்டை. ரூ. 2_-50
நாற்பது கட்டுரைகள் (மாணவர் கட்டுரைநூல்) பண்டிதர் சு. வேலுப்பிள்ளை (1964) திருமகள் அழுத்தகம். சுன்னாகம் ரூபா. 3_-50
நூலகர் கைந்நூல் : எஸ்.எம். கமால்தீன் (1970) எஸ்.எம். கமால்தீன் பொதுநூலகம், கொழும்பு _ -7.
பரியாரி பரமர் (நடைச்சித்திரங்கள்) ‘சானா’ (1964) அரசு வெளியீடு, 231, ஆதிருப் பள்ளித் தெரு, கொழும்பு ரூ. 1_-90
மட்டக்களப்பு மான்மியம் (வரலாறு) வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா (1962) கலாநிலையம் 175, செட்டியார் தெரு, கொழும்பு.  ரூ.1-.50
மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் (கிராமக் கவிதை) (தொகுப்பு) கலாநிதி சு.வித்தியானந்தன் (1962) கலைக்கழக நாடகக்குழு, இலங்கை.
முன்னீடு (சிறுகதையின் விமர்சனம்) : எஸ். பொன்னுத்துரை (1967) அரசு வெளியீடு 231, ஆதிருப்பள்ளி தெரு, கொழும்பு. ரூ.0.40 சதம்
வரலாற்று இலக்கணம் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை (1966) பாரிநிலையம் 591, பிராட்வே, சென்னை ரூ.6
வானொலியில் (வானொலிப் பேச்சு) : வ. பொன்னம்பலம் (1960) கலைமதி வெளியீட்டுக் குழு, மாதகல். ரூ.0.75 சதம்
வான வெளியில் (விஞ்ஞானம்) தேவன் _ யாழ்ப்பாணம் (1958) சண்முகநாதன் அன்ட் சன்ஸ், யாழ்ப்பாணம், ரூ.1
வாய்மொழி இலக்கியம் : (தொகுப்பு) (1961) யாழ்பிரதேச கலைமன்றம், யாழ்ப்பாணம். ரூ.1
வினைப் பகு பத விளக்கம் (இலக்கணம்) : அ. குமாரசாமிப் புலவர் (1968) பண்டித மாணவர் கழகம், மல்லாகம், ரூ. 1
விடுதலை வேட்கை (கட்டுரை) ஆ. சேயோன் (1969) பண்ணாகம் தெற்கு, சுழிபுரம். ரூ.0.75 சதம்
வெற்றியின் இரகசியங்கள் (வாழ்க்கைநூல்) அ.ந. கந்தசாமி (1966) பாரிநிலையம் 591, பிராட்வே, சென்னை ரூ. 5
(11) நாவலர் சம்பந்தமான நூல்கள்
ஆறுமுக நாவலர் சரித்திரம் : வே. கனகரத்தின உபாத்தியாயர் (1968) நாவலர் நூற்றாண்டு விழாச்சபை, யாழ்ப்பாணம், ரூபா. 3
நாவலர் சமயப்பள்ளி : சி. சீவரத்தினம் (1962) நாவலர் பாடசாலை, யாழ்ப்பாணம். ரூபா.1
நாவலர் சற்குருமணிமாலை : அம்பலவாண நாவலர் (பதிப்பு) த.சுப்பிரமணியம் (1968) சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம். ரூ. 1
நாவலர் : பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (1968) சைவபரிபாலன சபை, யாழ்ப்பாணம் ரூ.1
நாவலர் பணிகள் : ச. தனஞ்சயராசசிங்கம் (1969) இந்து மாணவர் சங்கம், பல்கலைக் கழகம், பேராதனை. ரூ. 4
நாவலர் சரித்திர ஆராய்ச்சி : பண்டிதை பொன். பாக்கியம் (1970) வட்டுக்கோட்டைத் தமிழ்ச் சங்கம், பண்ணாகம். ரூ. 2_-50
நல்லை நகர் தந்த நாவலர் : சொக்கன் (1969) சண்முகநாதன் புத்தகசாலை, யாழ்ப்பாணம். ரூ. 1.-50
நாவலர் நாவலரான கதை : கொக்கன் சேந்தன் (1969) நண்பர் வெளியீடு, இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம். ரூ.0.50 சதம்
நாவலர் அறிவுரை : இரசிகமணி கனக செந்திநாதன் (1968) சன்மார்க்க சபை குரும்பசிட்டி -தெல்லிப்பளை ரூ.0.50 சதம்.
நாவலர் மகாநாடு விழாமலர் (கட்டுரைகள்) (1969) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை. கொழும்பு 7. ரூ.25
நாவலர் மாநாடு விழாமலர் (புகைப்பட பொருள் (1970) ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை, கொழும்பு-_7 ரூ.5

No comments:

Post a Comment