Tamil books

Thursday 23 June 2011

தமிழ் நூல் தொகுப்பு வரலாறு



தொகுப்பு மரபிலிருந்து சமூக வரலாற்றைத் தேடி...
புதிய புத்தகம் பேசுது இதழ் ஆண்டுதோறும் சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டு வருகிறது. இந்த வகையான மலர்கள் தமிழியலையும் தமிழ்ச் சமூகத்தையும் புரிந்துகொள்வதற்கான / மீள்வாசிப்பு செய்வதற்கான ஆவணங்களாகத் திகழ்கின்றன. கடந்த ஆண்டுதமிழ்ப் பதிப்புலகம் (1800_2009) எனும் மலர் வெளிவந்தது. இம்மலர் கல்வியாளர்கள் மற்றும் தமிழ்ச் சமூக வரலாற்றில் அக்கறை கொண்டவர்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. அந்த வரிசையில் இன்னொரு சமகால வரலாற்று ஆவணமாகதமிழ் நூல் தொகுப்பு வரலாறு (சங்ககாலம் முதல் சமகாலம் வரை) என்னும் இந்நூல் வெளிவருகிறது. இந்நூல் தமிழ்நூல் தொகுப்புப் பாரம்பரியம் குறித்து பன்முகப்பட்ட நிலையில் விவாதிக்கிறது.
தமிழ் இலக்கியங்களுள் தொன்மையானதும் தமிழ்ச் சமூக வரலாற்றைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுமான சங்க இலக்கியங்களே ஒரு தொகுப்பு நூல்தான். ‘சங்க இலக்கியம்' எனும் பெயர் பரவலாக அறியப்படுவதற்கு முன்னர்பாட்டும் தொகையும்'பதினெண்மேற்கணக்கு நூல்கள்Õ எனும் பெயர்களே வழங்கப்பட்டன. இவை தொகுக்கப்பட்டவை எனும் தன்மையை உணர்த்தும் வகையிலான பெயர்கள். தமிழில் மட்டுமல்லாமல் உலகின் பல மொழிகளிலும் _ குறிப்பாக தொன்மையான மொழிகளில் _ இவ்வாறான தொகுப்புப் பாரம்பரியம் செம்மொழி களுக்கிடையேயான பொதுமைக் கூறுகளுள் தொகுப்பு மரபும் முக்கியமானது. இம்மரபு தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தின் எல்லாக் கட்டங்களிலும் இருந்துள்ளது; இன்றும் தொடர்கிறது.
இலக்கியம் என்பது மொழியும் உணர்வும் மட்டுமேயல்ல. அது ஒரு குறிப்பிட்ட காலகட்ட மக்களின் உளவியல் மற்றும் வாழ்வியலின் புனைவு மயப்படுத்தப்பட்ட / பொதுமைப் படுத்தப்பட்ட பதிவுகள். இப்பதிவுகள் தமிழ்ச் சூழலில் தொகுப்பு மரபினூடாகவே அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கையளிக்கப்பட்டன. எனவேதான் பண்டைக் காலத்திலேயே ஆய்வுப் பாரம்பரியம் இருந்துள்ளது எனக் குறிப்பிடும் .வி. சுப்பிரமணியன் அவர்கள் அதனைத் தொகுப்பு மரபுகளிலிருந்தே அடையாளம் காண்கிறார். தொகுப்பு மரபு, ஒரு காலகட்டத்தின் பதிவுகளை அடுத்தடுத்த தலை முறைகளுக்கு கடத்துகிறது என்பது எந்த அளவிற்கு உண்மையானதோ, அதே அளவிற்கு அந்தக் காலகட்டத்தின் அனைத்துப் பதிவுகளையும் கடத்துவதில்லை என்பதும் உண்மை. தொகுப்பில்  தெரிவுÕ நிகழும்போதே அதன் உடன்விளைவாக விலக்கலும் நிகழ்கிறது. இதற்கு இலக்கிய நயமும் உணர்வும் மட்டும் காரணமில்லை. தொகுப்போரும் தொகுப்பிப்போரும் எவ்விதமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனரோ அதற்கு மாற்றான பதிவுகள் விலக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம். இத்தகையப் புரிதல்களோடே தொகுப்பு மரபு குறித்தான விவாதங்களை முன்வைக்கும் கட்டுரைகள் அடங்கிய நூலொன்றை உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினோம்.
சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபுகள் குறித்த முழுமையான தரவுகளையும் விவாதங்களையும் உள்ளடக்கிய நூலாக வெளிவரவேண்டும் எனத் திட்டமிட்டோம். மரபிலக்கியத் தொகுப்புகள், இருபதாம் நூற்றாண்டுத் தொகுப்புகள், இயக்கம் சார்ந்த தொகுப்புகள், நாட்டார் வழக்காற்றியல் தொகுப்புகள் ஆகிய வகைப்பாடுகளின் கீழ் நாற்பது தலைப்புகளைத் தேர்வு செய்தோம். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இலக்கணத் தொகுப்புகள், இசைநூல் தொகுப்புகள், ஈழத் தொகுப்புகள், மானுடவியல் தொகுப்புகள், விளிம்புநிலைத் தொகுப்புகள், புதுமைப்பித்தன் மற்றும் கு..ரா. தொகுப்புகள் உள்ளிட்ட பல தலைப்புகளில் கட்டுரைகளைப் பெறமுடியவில்லை. இந்நூல் தொகுப்பு மரபு குறித்தமுழுமையானÕ நூல் அல்ல என்று உணர்கிறோம். அதேசமயம் சங்ககாலம் தொடங்கி சமகாலம் வரையிலான தொகுப்பு மரபை ஆவணப்படுத்துவதில் முன்கை எடுத்திருக்கிறோம். இம்முயற்சியின் நிறை குறைகள் குறித்து கல்வியாளர்களும் அறிஞர்களும் வாசகர்களும் விவாதித்து எங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம். தமிழ் இலக்கியத் தொகுப்பு மரபு குறித்து தொடர்ச்சியான விவாதங்களையும் முழுமையான ஆவணத்தையும் உருவாக்கும் முயற்சியில் இந்நூல் ஓர் ஆரம்பப்புள்ளி.

வெளியீடு  
புதிய புத்தகம் பேசுது.
421 . அண்ணாசாலை.
தேனாம்பேட்டை. சென்னை 600018/ 044 /24332424 
விற்பனை நிலையம்
7, இளங்கோ சாலை, தேனபேட்டை, சென்னை- 600 018
044- 24332924
திருவல்லிக்கேணி: 48, தேரடி தெரு | திருவான்மியூர்: 1, 100அடி சாலை, தரமணி
பெரம்பூர்: 52, கூக்ஸ் ரோடு |  ஈரோடு: 39, ஸ்டேட் பாங்க் சாலை  
திண்டுக்கல்: 3சி18, எல்.பி.ஜி. காம்பவுண்ட்  | நாகை: 1, ஆரியபத்திரபிள்ளை தெரு   திருப்பூர்: 447, அவினாசி சாலை |  திருவாரூர்: 35, நேதாஜி சாலை
சேலம்: 36/1 அத்வைத ஆஸ்ரமம்சாலை | மயிலாடுதுறை: 147, பட்டமங்கலத் தெரு அருப்புக்கோட்டை: 31, அகமுடையார் மகால்  | புதுக்கோட்டை:  வடக்கு ராஜா வீதி
மதுரை: 37, பெரியார் பேருந்து நிலையம்   | மதுரை: சர்வோதயா மெயின்ரோடு, மகபூப்பாளையம்  | குன்னூர்: N.K.N. வணிகவளாகம் பெட்போர்ட்  
செங்கற்பட்டு:1 டி., ஜி.எஸ்.டி சாலை  | விழுப்புரம்: 26/1, பவானி தெரு
திருநெல்வேலி: 25A ராஜேந்திரநகர் முதல் தெரு,  | விருதுநகர்: 131, கச்சேரி சாலை
கும்பகோணம்: 352, பச்சையப்பன் தெரு  |  வேலூர்: S.P. Plaza  264, பேஸ் மிமி , சத்துவாச்சாரி 
நெய்வேலி: பேருந்து நிலையம் அருகில்,  சிஐடியு அலுவலகம் 
தஞ்சாவூர்: காந்திஜி வணிக வளாகம் காந்திஜி சாலை   LIC கோட்ட அலுவலகம் எதிரில்) தஞ்சாவூர் - 613001.
தேனி: 12,பி, மீனாட்சி அம்மாள் சந்து, இடமால் தெரு 
கடலூர்: பஜார், ஜீவா மார்க்கெட், பழைய அண்ணா பாலம்
நாகர்கோவில்: ரப்ஷா காம்ப்ளக்ஸ், தெற்குதோப்பு வணிகர்தெரு, மீனாட்சிபுரம்
கோவை: 2 வது வீதி விரிவு, காந்திபுரம், கோவை - 12
திருச்சி: வெண்மணி இல்லம், கரூர் புறவழிச்சாலை

Friday 22 April 2011

வாசிப்பின் கொடியை இல்லங்கள் தோறும் உயர்த்திக் கட்டுவோம்

 எஸ்.வி.வேணுகோபாலன்
ரிசுப் பொருள்களைப் பற்றிப் பேசுகிற சீனப் பழமொழி ஒன்று, அடுத்த தலைமுறைக்கான பரிசாக எதுவம்  தர விரும்பினால், புத்தகங்களைக் கொடு என்கிறதாம். திரும்பத் திரும்பத் திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக நூல்கள் இருக்கும் என்று கேரிசன் கெயிலர் என்கிற அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் சொல்லியிருக்கிறார். தனித் தீவில் இருக்கத் தண்டனை வழங்கு, ஆனால் புத்தகங்கள் இருக்க வேண்டும் என்னோடு என்றும் சொல்லியிருக்கின்றனர் சில அறிஞர்கள்.  ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் நூல்கள் அற்று அல்ல என்று சொல்வோரும் உண்டு.  புத்தகங்கள் மனிதர்களின் கண்டுபிடிப்புகளிலேயே உன்னதமான - தொடர்வினை உருவாக்குகிற - தனக்கு இன்னொன்று ஒப்பற்ற ஒரு வித்தியாசமான கருவி என்று கூட படுகிறது.


புத்தகங்கள், அவற்றை எழுதுபவரது  மனசாட்சி ஆக இருக்கலாம், ஆனால் அது வாசிப்பவரின் குரலில் கேட்கிற மாயாஜாலம் நிகழ்கிறது. கைகளால் விதைப்பாடு செய்வதைக் கண்களால் அறுவடை செய்கிறோம், அது என்ன என்று வழங்கும் குழந்தைகளுக்கான புதிர் சொல்வது போல நூதன அனுபவம் வாசிப்பு.  குழந்தைப் பருவத்திலிருந்தே ஊட்ட வேண்டிய சத்துணவு, வாசிப்பின் அருமை.  தங்களைப் பெரியவர்கள் போல் காட்டிக் கொள்ள பாவனைகளில் இறங்கும் குழந்தைகள் செய்யத் துடிக்கும் முக்கிய வேலைகளில் இந்த வாசிப்பு இருப்பதை, 'தத்தக்கா புத்தக்கா' என குழந்தைகளின் மழலைச் சொல் கேட்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும். 

நூலகங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிற (சீர்காழி) எஸ் ஆர் ரங்கநாதன் (1892 -1972) அவர்கள் புத்தகங்களை மாட்டு வண்டியில் வைத்து சிற்றூர்களுக்கு எடுத்துப் போய் சாதாரண மக்களிடையே வாசிப்பின் இன்பத் திளைப்பை ஊட்டினாராம். தமது  புத்தகங்கள் மண்ணெண்ணையை விடவும், தீப்பெட்டிகளைவிடவும் மலிவான விலைக்கு மக்கள் கைக்குச் சென்று சேர வேண்டும் என்ற மகாகவி பாரதிக்கு, மக்களிடையே கனல் மூட்டும் நோக்கம் இருந்ததை இந்த வாக்கியம் விளக்குகிறது.  ஓர் அரிய அறிவுஜீவியோடு உரையாட நேர்ந்தால் அவர் வாசிக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேள் என்கிறார் அறிஞர் எமர்சன்.  நம்பிக்கை உலகின் வாசல் திறப்பாகப் புத்தகங்கள் இருக்கின்றன.  இருளைப் போக்குவதாக மட்டுமல்ல, சோர்வின் உடைப்புக்கும், சோகத்தினின்று ஆறுதலுக்கும், சுதந்திரம் பற்றிய விழிப்புணர்வுக்கும்..... நூல்கள் எத்தனை எத்தனை வல்லமையைத் தேக்கிக் கொண்டு அடக்கமான கையிருப்பாக இருக்கின்றன. 

ஆன்மீக அன்பர்கள் வாசிக்க இலகுவான சிறு சிறு வாழ்த்துச் செய்யுள்கள், பதிகங்களை அச்சிட்டு குடும்ப நிகழ்வுகளின் போது வழங்கும் மரபு உள்ள நமது சமூகத்தில், அண்மைக் காலமாக வாசிக்கத் தக்க பல சிறு நூல்களை முற்போக்கு எண்ணம் கொண்டோர் பலர் தமது இல்ல நிகழ்ச்சிகளின் போது தாம்பூலப் பையில் வைத்தோ, அதுவே தாம்பூலமாகவோ அளித்து வரும் பாராட்டுக்குரிய நிகழ்வுகள் பெருகி வருகின்றன.  மிக அரிய விவாதப் பொருள்களைக் கூட எளிய எழுத்துக்களாய் மலிவான விலையில் நூலாக்கம் செய்து வரும் பாரதி புத்தகாலயத்தின் பங்களிப்பு இந்த முயற்சிகளுக்கு மிகப் பெரிய தூண்டுகோலாயிருப்பதையும் குறிப்பிட வேண்டும்.  திருவிழாக்களுக்குச் சென்று வருகிற உள்ளக் களிப்போடும், கம்பீரத்தோடும் புத்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை கூடி வருவதும் களிப்புற வைக்கும் செய்திகளாகும்.  

உலக நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் பிறந்த தினமான (நினைவு தினம் என்றும் கூறப்படுகிற) ஏப்ரல் 23 உலக புத்தக தினமாகக் கொண்டாடப் படுவது வாசிப்பின் கொடியை தமது வீடுகளில் உயர்த்திக் கட்டியிருப்பவர்களுக்கு உவகை ஊட்டுவதாகும்.  எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்லப்படுகிற இந்த ஏப்ரல் 23 , ஸ்பெயின் நாட்டின் கேட்டலோனியா மாநிலத்தில் புனித ஜார்ஜ் தினம் என்று அழைக்கப்படுவதாகும்.  அன்றைய தினம் காதலுக்கான அடையாளமாக நூல்கள் ரசவாதம் புரியும் அற்புதம் ஆண்டுதோறும் நிகழ்கிறது.  காதலன் வழங்கும் வண்ண வண்ண ரோஜா மலர்களுக்கு ஈடாக, பதிலுக்குக் காதலிகள் நூல்களைப் பரிசளித்துத் தங்களது இதயத்தை அதோடு சேர்ந்து ஒப்படைத்து விடுவார்களாம்.  வீதிகள் எங்கும் ஆங்காங்கு தற்காலிகக் கடைகள் போட்டு புத்தக விற்பனையும், ரோஜா விற்பனையும் அமோகமாக நடக்குமாம்.  நாளின் முடிவில், நாற்பது லட்சம் பூக்களும் எட்டு லட்சம் புத்தகங்களும் கை மாறி இருக்குமாம்.  கையில் ரோஜா ஏந்திச் செல்லாத பெண்ணையே பார்க்க முடியாத அந்த நாளில், ஆண்டு முழுவதும் நடக்கும் புத்தக விற்பனையில் பாதி அளவு அந்த ஒரு நாளிலேயே நடந்திருக்குமாம். 

எந்தப் புத்தக தினத்தின் போதும் என்னால் மறக்க இயலாத ஒரு மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை.  அந்த மனிதரின் கதை போல் என்னை வாசிப்பை நோக்கி எப்போதும் ஈர்க்கத் தக்க இன்னொரு செய்தி இதுவரை கிடைக்கவும் இல்லை. டாக்டர் டார்செம் என்கிற அந்த அற்புத எழுத்தாளர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருபத்து நான்கு புத்தகங்களுக்கு மேல் எழுதியும் தொகுத்தும் வழங்கியிருப்பவர்.  உலக பஞ்சாபி எழுத்தாளர் சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டுத் தலைவராகவோ, பொதுச் செயலாளராகவோ அபார வெற்றி பெற்று இயங்கியவர்.  இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாவட்டப் பொருளாளர்.  சாகித்திய அகாதமி குழுவில் பணியாற்றியவர்.  ஆனால், கண் பார்வை அற்றவர்! 

பிறவியில் இருந்தே படிப்படியாகக் கண் பார்வை பறிபோய்க் கொண்டிருந்ததைச் சிகிச்சைகள் பல மேற்கொண்டும் காப்பாற்றிக் கொள்ள இயலாதென்று உணர்ந்த பதினான்காம் வயதில் அவர் படித்துக் கொண்டிருந்தது, ரஷ்ய புத்தகம் ஒன்று.  'வீரம் விளைந்தது' என்ற மகத்தான அந்தப் புதினத்தைப் படைத்த  நிகோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி அவர்களும் பார்வையற்றவர்தான்.  வேக வேகமாக வாசித்து முடித்த அந்த நூலில் இருந்து கிடைத்த பெரும் உத்வேகமும், தன்னம்பிக்கையும், வாழ்வின் ஒளியும் டார்செம் அவர்களை அதற்குப் பின்னர் பஞ்சாபி, இந்தி, உருது மூன்று மொழிகளிலும் முனைவர் பட்டம் பெற வைத்தது.  மூன்று மொழிகளிலும் எழுத்தாக்கன்களைப் புனைய வைத்தது.  கடந்த ஆண்டு, அவரது தன் வரலாற்றை "திருதராஷ்டிரன்" என்ற பெயரில் நூலாகவும் ஆக்க வைத்திருப்பது, இந்த வாசிப்பின் விளைச்சல் தான்!  

அடுத்தடுத்த தலைமுறைக்கும் வாசிப்பின் பெரும் பரிசை உணர்த்தும் இந்த உற்சாகச் செய்திகளோடு விடியட்டும், இந்த புத்தக தினமும்.  

நன்றி: புதிய ஆசிரியன்: ஏப்ரல் 2011

Thursday 21 April 2011

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்

மு. வளர்மதி


ஒரு நாட்டின் முதல் அடையாளம் மொழி. மொழியைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்ப-தும் நாட்டின் இன்றியமையாத தேவையாகும். பாமரர் முதல் புலவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஆட்சியாளர்கள் வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொன்று தொட்டுப் பங்களிப்புச் செய்து வருவதால் இன்று தமிழ் ‘செம்மொழி’ என்ற பெருமைக்குரிய ஒன்றாக விளங்குகிறது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள். இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்-குப் பின் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தம் தாய்த்தமிழை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் மாநாடுகளையும், தமிழ் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்கினர். அவ்வாறு தொடங்கப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1968ஆம் ஆண்டு சனவரித் திங்களில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை-யில் நடைபெற்றது. அம்மாநாட்டில் ‘தமிழிற்கு உயர் மைய ஆராய்ச்சி நிறுவனம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்னும் கருத்தைத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். அதே வேளையில் பூனேயில் உள்ள ‘தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில்’ இயக்குநராக இருந்த டாக்டர் கத்ரே என்னும் அறிஞர் உலகத் தமிழாராய்ச்சி நி-றுவன அமைப்பிற்கு உரிய முன் வரைவுத்திட்டம் ஒன்றை அக்கருத்தரங்கில், ஆய்வுரையாக வழங்கினார். அத்திட்டத்தில், பரந்துபட்ட நிலையில், தமிழ்மொழி, இலக்கியப் பண்பாட்டு ஆராய்ச்சியை நடத்துவதற்குரிய நெறிமுறைகளை அவர் வகுத்தளித்தார்.
மாநாட்டின் நிறைவுவிழாவில், அத்திட்டத்-தினை அறிஞர் அண்ணா மகிழ்வுடன் வரவேற்றார். அவர் தம் உரையில்,
“பிரான்சு நாட்டிலுள்ள பிரெஞ்சு மொழிக் கலைக்கழகத்தைப் போன்ற நிலையில் நாம் அதனை உருவாக்க வேண்டும். அக்கலைக் கழகத்தின் அடிப்படைகளையும் நெறிமுறை-களையும் பின்பற்றி இங்குத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைப்போமானால் சிறப்புமிகு, ‘இந்தியக் கலைக்கழகத்தை’ அல்லது ‘தமிழகக் கலைக்கழகத்தை’ நாம் உருவாக்க இயலும். அப்பொழுதுதான், நமது தமிழ்மொழி ஆராய்ச்சிக் கழகம் உலகளாவிய நிலையில் வீறுடன் விளங்க இயலும்’’ என்று அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில்தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவ வேண்டும்’ என்னும் எண்ணம் முதன்முதலாக எழுந்தது. இந்த எண்ணத்தின் விளைவாக இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவின் உதவியை அறிஞர்கள் நாடினர். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாக் கொண்டா-டும் இத்தருணத்தில் இந்நிகழ்வை நினைவூட்டு-வது பொருத்தமானதாகும். அவருடைய இம்முயற்சிக்கு யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த மதிப்பிற்குரிய டாக்டர் மால்கம் ஆதிசேஷையா, மற்றும் அறிஞர் தனிநாயகம் அடிகள் ஆகியோரின் செயலூக்கம் மிக்க நடவடிக்கைகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கம் பெற்றது.
நிறுவனத்தின் நோக்கம்
தமிழ் வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளை-யும் தக்க முறையில் செய்வதற்கான சூழ்நிலை-களை உருவாக்கி _ தமிழறிஞர்களின் வழியாக, ஆர்வலர்களின் வழியாக இயலும் வகைகளி-லெல்லாம் வாய்ப்புகளை உருவாக்கி _ உலகளா-விய நிலையில் தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும் என்பது இதன் தலையாய நோக்க-மாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழாராய்ச்சியில் ஈடுபாடுடைய அறிஞர்களின் ஒத்துழைப்புடன், பல்வேறு அறிவுத்துறை-களுடன் இணைந்த ஆராய்ச்சியைப் போற்றி வளர்ப்பதும், பிற மொழியாளர்களுக்குத் தமிழ்-மொழியைக் கற்பிப்பதும் இதன் முதன்மையான நோக்கமாகும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்விப்பணி, ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, ஓலைச்-சுவடிப் பதிப்புப்பணி, கருத்தரங்கப் பணி, வெளி-யீட்டுப் பணி என்ற பல்வேறு தளங்களில் உலக-ளா-விய நிலையில் தமிழ் வளர்ச்சிக்குரிய பணி-களைச் செய்து வருகிறது.  இன்றுவரை 600க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இவை பல்வகைப்பட்டன:
1. தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதிகள் 2. தொல்காப்பிய உரைவளம் 3. தமிழர் பண்பாடு 4. தமிழர் மரபுச் செல்வம் 5. சுவடிப் பதிப்புகள் 6. உலகத் தமிழ் எழுத்தாளர்கள் 7. ஊர்ப் பெயராய்வு 8. தமிழ் வளர்ச்சி _ ஆண்டு வாரியாக 9. தொகுப்பு நூல்கள் _ ஒரு பொருள் பற்றியன 10. வெளிநாட்டறிஞர்களின் சொற்பொழி-வுகள் 11. நிறுவன ஆய்வுகள் 12. அகராதிகள்
13. அறக்கட்டளைச் சொற்பொழிவு வெளியீடுகள் 14. ஆய்வுக் கோவைகள்
15. மொழிபெயர்ப்பு நூல்கள் என்பனவாக இவ்வெளியீடுகள் அமை-கின்றன.
தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதி எனும் வரிசையில் 9 நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. இத்தொகுதிகள் தொல்காப்பியம் முதல் புதுக்கவிதை ஈறாக இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் போக்குகளை வெளிப்படுத்து-கின்றன. தமிழின் முதல் நூலான தொல்காப்பி-யத்தின் உரைவளம் பற்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 28 நூல்களை வெளியிட்டுள்ளது. இவை தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல புதிய கருத்துகளையும் பார்வையையும் தந்துள்ளன.
தமிழர் பண்பாடு
தமிழக வரலாற்றையும், பண்பாட்டையும் வெளிக்கொணரும் நோக்கில் தமிழகக் கலைச் செல்வங்கள், தமிழர் அளவைகள், தமிழர் ஆடைகள், தமிழர் உணவு, தமிழர் எண்ணங்கள், தமிழர் கண்ட மனம், தமிழர் இசை, தமிழர் திருமணம், தமிழர் தோற்கருவிகள், தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், தமிழரின் தாயகம், தமிழும் தமிழரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, மலேசியத் தமிழரும் தமிழும், சங்கத் தமிழர் வாழ்வியல், சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், தமிழக நாட்டுப்புறக்கலைகள், தமிழர் காசு இயல், தமிழ்மொழியின் வரலாறு, தமிழர் கொடிகள், தமிழகத்தில் ஆசியர்கள், மெய்க்கீர்த்திகள் ஆகிய தலைப்புகளில் வெளி-வந்துள்ள நூல்கள் தமிழர்களின் சிறப்பையும், தமிழ்மொழியின் வளத்தையும் காட்டுவனவாகும்.
தமிழர் மரபுச்செல்வம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீ’ என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து ‘சிuறீtuக்ஷீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிணீஸீரீuணீரீமீs ணீஸீபீ நிக்ஷீணீனீனீணீtவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs கிக்ஷீt ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘பிவீstஷீக்ஷீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘றிலீவீறீஷீsஷீஜீலீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs - ணிபீuநீணீtவீஷீஸீ ணீஸீபீ க்ஷிஷீநீணீtவீஷீஸீ’ என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகள் பழந்தமிழகத்தின் மொழி, இலக்கணம், வரலாறு, பண்பாடு, அரசியல், கலை, சமூகம், தத்துவம், ஆகியன பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழுகின்றன.
இதைப்போன்றே ‘ஜிலீமீ சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீs ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs ஷீயீ மிஸீபீவீணீஸீ சிuறீtuக்ஷீமீ’ எனும் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை ‘ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்’, ‘ஷிஷீநீவீஷீ - சிuறீtuக்ஷீணீறீ கிsஜீமீநீts’, ‘கிக்ஷீts ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘லிணீஸீரீuக்ஷீணீரீமீ ணீஸீபீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ’ எனும் தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.
சுவடிப் பதிப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடி-யியல் நூலகத்தில் உள்ள பழந்தமிழ்ச் சுவடிகள் பல பதிப்பிக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இலக்கியம், இலக்கணம், மருத்துவம், கதைப்பாடல்கள், புராணப் பாடல்கள், பிரபந்தங்கள் போன்ற நூல் வகைகள் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. கண்மருத்துவம், மனைநூல், கருவூரார் பல திரட்டு, சின்ன மகிபன் குளுவ நாடகம், வெள்ளைக்காரன் கதை, கும்மிப்பாடல்கள், ஊஞ்சல் இலக்கியம், பணவிடு தூது, திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ், திருமயிலை உலா, பிரபந்தத்திரட்டு, குணவாகடம், சித்தமருத்துவ மணிகள், சிவகிரி குமர சதகம், புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை, குசலவர் சுவாமி கதை, தோட்டுக்காரி கதை, சின்னணைஞ்சான் கதை, முத்தாரம்மன் கதை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
தமிழ்ச் சுவடிகள் அட்டவணை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதிகள், 1, 2, 3; உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடி விளக்க அட்-டவணை மூன்று தொகுப்பு நூல்கள், சுவடி-யியல், சுவடியியல் பயிற்சிக் கையேடு, சுவடிச்-சுடர் என்ற பல நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. தமிழின் தொன்மையைக் காட்டுவன-வாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
உலகத் தமிழ் எழுத்தாளர்கள்
‘உலகத் தமிழ் எழுத்தாளர்கள் யார்?’ என்ற பெயரில் வெளிவந்துள்ள நூலில் உலகமெங்கு-முள்ள 1443 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ‘உலகத் தமிழிலக்கிய வரலாறு’ எனும் தலைப்பில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை தமிழிலக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. ஆய்வுலகிற்குப் பெரும் பலன் நல்குவனவாகும்.
ஊர்ப் பெயராய்வு
தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற ஊர்ப் பெயர்கள், அவர்களின் வரலாறு, பண்பாடு, கலை, புராணம் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள், இலக்கியத்-தில் ஊர்ப்பெயர்கள் (2 தொகுதிகள்) செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள், தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு சென்னை என்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்-களின் வழியாகக் காலந்தோறும் ஊர்ப்பெயர்கள் பெற்றுள்ள மாற்றங்கள், அதன் உண்மை நிலை வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள மிகவும் தேவையான ஆய்வு நூல்களாகத் திகழ்கின்றன
தமிழ் வளர்ச்சி
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் தமிழாய்வு எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்ட எண்பதில் தமிழ், எண்பத்தொன்றில் தமிழ், எண்பத்திரண்டில் தமிழ், எண்பத்து மூன்றில் தமிழ், (பகுதி 1, 2, 3) எனும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து இவ்வாறு வெளிவர-வில்லை. சமூகவியல் தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் நாட்டுப்புறவியல், கலை, பண்பாடு _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், தொல்லியல், வரலாறு, சமூகவியல் _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், சமயம், தத்துவம் உளவியல்_ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அறிவியல் தகவல் தொடர்பு  எனும் தலைப்புகளில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்தரங்குக் கட்டுரைத் தொகுப்புகளான இந்நூல்கள் தமிழியல் ஆய்வு உலகில் குறிப்பிடத்தக்கப் பாராட்டைப் பெற்றுள்ளன.
தொகுப்பு நூல்கள்
இலக்கியங்களில் பரவிக் கிடக்கும் ஒரு பொருள் பற்றிய கருத்துகளை ஒன்றிணைத்து நூல்களை வெளியிடுவது, கருத்தரங்குக் கட்டுரை-களைத் தொகுத்து நூல்களை வெளியிடுவது என்ற நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1.தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ எச்சவியல். 2. தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ உரியியல் 3. தொல்காப்பியம் _ பொருளதிகாரம் _ கற்பியல், தமிழ் ஆய்வுக் களங்கள் சங்க இலக்கியம் கவிதையியல் சிந்தனைப் பின்புல மதிப்பீடு, இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடகங்கள், தொல்காப்பியப்பாவியல் கோட்பாடுகள், (திருப்புகழ் ஒளிநெறி (3 தொகுதிகள்) பெ.நா. அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுதி 1, 2, தமிழ் நாடகம் நேற்றும் இன்றும், பயிலரங்கக் கவிதைகள், இந்திய விடுதலைக்குப் பின் தமிழிலக்கியச் செல்நெறிகள், அயலகத் தமிழ்க் கலை இலக்கியச் சமகாலச் செல்நெறிகள், தமிழில் ஆவணங்கள், தமிழக மகளிரியல், நானும் என் கவிதையும், நானும் என் எழுத்தும், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞா., ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், தணிகை மணி வ.சு. செங்கல்வராய பிள்ளை, மூதறிஞர்
மு. இராகவையங்கார், சிவக்கவிமணி
சி.கே. சுப்பிரமணிய முதலியார், பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர், திருமணம் செல்வக் கேசவராய முதலியார், பண்டிதமணி
மு. கதிரேசன் செட்டியார், பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்கள் தொகுதி 1, 2, வேதாத்திரியத்தில் சமூகவியல் இறையியல் சிந்தனைகள் என ஏராளமான நூல்கள் பல்வேறு முறைகளில் வெளியிட்டு நிறுவனம் தனது தமிழ்ப் பணிகளைச் செய்து வருகிறது.
வெளிநாட்டுப் பேராசிரியர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் ‘ணிஜீவீரீக்ஷீணீஜீலீவீநீணீறீ மீஸ்வீபீமீஸீநீமீ யீஷீக்ஷீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs’, ‘ஜிலீவீக்ஷீu விuக்ஷீuரீணீஸீ’ எனும் பெயர்களில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ரிணீக்ஷீணீவீளீணீறீ கினீனீணீவீஹ்ணீக்ஷீ, ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ - ஜிலீமீ பீணீஹ்றீவீரீலீt ஷீயீ tலீமீ ஜீsஹ்நீலீமீ, கி ஜிணீனீவீறீ ஸிமீணீபீமீக்ஷீ ஸ்ஷீறீ. மி ணீஸீபீ ஸ்ஷீறீ.மிமி, சிலீவீமீயீtணீவீஸீs ஷீயீ tலீமீ ஷிணீஸீரீணீனீ கிரீமீ, கி நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ சிஷீஸீtமீனீஜீஷீக்ஷீணீக்ஷீஹ் லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஜிணீனீவீறீ, லிணீஸீபீsநீணீஜீமீ ணீஸீபீ ஜீஷீமீtக்ஷீஹ், ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ ணீஸீபீ கிstணீபீலீஹ்ணீஹ்வீ, றிமீக்ஷீsஷீஸீணீ வீஸீ ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ, ஜிணீனீவீறீ மிஸீபீவீணீ, சிக்ஷீவீtவீநீணீறீ ஷிtuபீவீமீs வீஸீ ரிuக்ஷீணீறீ, ஷிtuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ றிக்ஷீஷீsஷீபீஹ் ணீஸீபீ றிஷீமீtவீநீs, லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் சிக்ஷீவீtவீநீவீsனீ வீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ ஷிணீஸீsளீக்ஷீவீt, ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, மிஸீபீவீணீஸீ ணிஜீவீstமீனீஷீறீஷீரீஹ், ஷிஷீuஸீபீ சிஷீக்ஷீக்ஷீமீsஜீஷீஸீபீமீஸீநீமீ தீமீtஷ்மீமீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ யிணீஜீணீஸீமீsமீ, ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ ஜிலீமீஷீக்ஷீஹ் ணீஸீபீ கிஜீஜீறீவீநீணீtவீஷீஸீ ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஸீரீ ஜிவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ, ஷிஷீநீவீணீறீ றீவீயீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs, ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ ணீஸீபீ மிஸீபீவீணீஸீ ஜீலீவீறீஷீsஷீஜீலீஹ், கிஸீ மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் - ஜிமீஸ்ணீக்ஷீணீனீ ணீஸீபீ ஜிவீஸ்ஸ்வீஹ்ணீஜீஜீவீக்ஷீணீஜீணீஸீtணீனீ, கி ஙிuஸீநீலீ ஷீயீ ணிssணீஹ்s ஷீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ, க்ஷிவீsஸீணீஸ்வீsணீனீ வீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ தீமீtஷ்மீமீஸீ tலீமீ 7tலீ & 9tலீ சிமீஸீtuக்ஷீவீமீs, கிரீக்ஷீமீமீனீமீஸீtவீஷீஸீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ லிணீஸீரீuணீரீமீ, ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ், ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ  என இன்னும் பல தமிழியல் தொடர்பான ஆங்கில நூல்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழி அறியாத பிற மொழியாளர்கள், பிற நாட்டார் தமிழ் மொழியை, இலக்கியங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்து வருகிறது. தமிழைப் பிற மொழியாளர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக கீஷீக்ஷீளீ ஙிஷீஷீளீ ஷிஜீஷீளீமீஸீ ஜிணீனீவீறீ  என்ற நூலும், அது தொடர்பான குறுந்தகடுகளும் வெளியிடப்பட்-டுள்ளன.
மொழிபெயர்ப்பு நூல்கள்
நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று மொழிபெயர்ப்புப் பணியாகும். பழமை-யான இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம் தமிழின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்குடன் பல நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பிலும், மறு பதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ - றிலீஷீஸீஷீறீஷீரீஹ் ணீஸீபீ விஷீக்ஷீஜீலீஷீறீஷீரீஹ் ஜிணீனீவீறீ ஸ்மீக்ஷீsமீ வீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, ரிuக்ஷீuஸீtஷீளீணீவீ, ரிuக்ஷீவீஸீநீவீஜீணீணீttu, விuttஷீறீறீணீஹ்வீக்ஷீணீனீ ஷிவீஜ் றீஷீஸீரீ ஜீஷீமீனீs யீக்ஷீஷீனீ sணீஸீரீணீனீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ பிமீக்ஷீஷீவீநீ ஜீஷீமீனீs, ழிணீறீணீஸ்மீஸீதீணீ, ஜிமீனீஜீறீமீ நீலீவீனீமீs, ஞிமீபீவீநீணீtவீஷீஸீ, ஜிணீஸீவீஜீணீணீளீuக்ஷீணீttஷீளீணீவீ, சிலீவீறீணீஜீஜீணீtவீளீணீக்ஷீணீனீ, ஷிமீறீமீநீtமீபீ றிஷீமீனீs ஷீயீ ஙிலீணீக்ஷீணீtலீவீபீணீsணீஸீ (ணிஸீரீறீவீsலீ, விணீறீணீஹ்ணீறீணீனீ, ரிணீஸீஸீணீபீணீனீ,ஜிமீறீuரீu) ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ் ழிணீtக்ஷீவீஸீணீவீ திஷீuக்ஷீ பிuஸீபீக்ஷீமீபீ, விணீஸீவீனீமீளீணீறீணீவீ எனப் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பழமொழி நானூறு தெலுங்கு மொழி-பெயர்ப்பு, சர்வக்ஞர் உரைப்பா, நாச்சியார் திருமொழி தெலுங்கு மொழிபெயர்ப்பு, தெசிணி-யின் தமிழாக்கப் பாடல் திரட்டு, மிருச்சகடிகம், முத்ரா ரா-க்ஷஸம், நாலடியார் மூலமும் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், திருக்குறள் பூரணலிங்கம்பிள்ளை ஆங்கில மொழியெர்ப்-புடன், பாணினியின் அஷ்டாத்தியாயி தமிழாக்கம் 3 பகுதிகள், கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நன்னெறி ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஆகிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அகராதிகள்
தமிழ்மொழியின் அடிப்படைத் தேவையான அகராதிகள் வெளியீட்டுப் பணிகளையும் உலகத் தமிழாராயச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தமிழ்_ஆங்கிலம் அகராதி பகுதி 1, 2, 3, 4, செந்தமிழ் அகராதி, சொற்பிறப்பு _ ஒப்பியல் தமிழ் அகராதி என்ற அகராதிகள் வெளியிடப்-பட்டுள்ளன.
ஆய்வுக் கோவைகள்
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் அம்மன்றத்தால் வெளியிடப்-படாதவை மட்டும் ஆண்டு வாரியாக வெளி-யிடப்பட்டுள்ளன. இ.ப.த.ம. ஆய்வுக்கோவை தொகுதி 1, 2, 3, (1970) ஆய்வுக் கோவை தொகுதி 1, 2 (1969) என்பவை அவை. இந்நூல்கள் பல்பொருள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று வரை 31 அறக்கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறக்கட்டளைச் சார்பிலும் ஆண்டு-தோறும் ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்து, சொற்பொழிவு ஆற்றச் செய்து, சொற்பொழிவு நிகழ்த்தும் நாளன்றே நூலை வெளியிடுவது வழக்கமாகும். இந்த அறக்கட்டளைகள் அறிஞர்களாலும், கொடையாளர்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் நிறுவப்பட்டு பல சிறந்த நூல்கள் வெளிவருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. அறக்கட்டளைச் சொற்-பொழிவு நூல்களாக இந்நாள் வரை 142 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை படைப்பிலக்கியம், இதழ்கள், இலக்கியக் கோட்பாடுகள், இசுலாமியத் தமிழ், கிறித்துவமும் தமிழும், சைவத்தமிழ், தமிழ் நூல் பதிப்புகள், வ.உ.சியும் தமிழும், பாவாணர் ஆய்வுகள், மொழியியல், கலை பண்பாடு, இதழியல், பதிப்பியல், மொழிபெயர்ப்பியல், இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு, தொ.பொ.மீ. இலக்கியப்பணி, தொழில் கல்வி, அறிவியல், தொழில் நுட்பவியல், தமிழர் கண்ட தாவரவியல், ம.பொ.சி.யும் தமிழும் தமிழரும், தமிழகத்தில் தேசியமும் காந்தியமும் மற்றும் நாமக்கல் கவிஞரின் படைப்புகள், சமூகவியல், தனித்தமிழ் இயக்கம், காசு இயலும் பிற துறைகளும், தனிநாயக அடிகள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தமிழில் ஆவணங்கள், பெண்ணியம், திருமுறைகள், தமிழ்ப்பண்பாடு, மற்றும் பெயரியல், அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்கம், கவிதையியல், ஆகிய பொருண்-மைகள் அடிப்படையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள் யாவும் வெளியிடப்-பட்டுள்ளன. இப்பொருண்மை குறித்து வெளியிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழுக்கும் தமிழருக்கும் வளம் சேர்ப்பன. சான்றுக்கு ஒரு சில சுட்டிக்காட்டலாம். பிராகிருதமும் தமிழும், தமிழும் குறியியலும், தமிழும் தெலுங்கும், தமிழில் பிறதுறைக் கோட்பாட்டாய்வுகள், வரலாறும் மதிப்பீடும், தமிழும் கிறித்தவமும், சைவத்தமிழ், திருமறையும் தீந்தமிழும், இசுலாம் வளர்த்த தமிழ், உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகள், தமிழ் தந்த வ.உ.சி., தமிழெழுத்து வரி வடிவ வரலாறு, பாவாணர் ஆய்வு நெறி, இதழாளர் பெரியார், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, சங்க இலக்கிய ஆய்வு, தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும், தமிழர் கட்டிடக்கலை, தமிழரின் தாயகம், தமிழில் விடுதலை இலக்கியம், மலையாளக் கவிதைகள், தொல்காப்பிய இசைக்குறிப்புகள், சங்ககாலக் காசு இயல், உலக அரங்கில் தமிழ், பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி, தொல்லியல் நோக்கில் சங்க காலம், பெரியாரியப் பெண்ணியம், மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் _ பெண், பண்பாட்டு நோக்கில் திருமுறைகள், கவிதையியல் என்று இன்னும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
நிறுவன இதழ் வெளியீடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழியல் (யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs) 1969ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் இருமொழி பருவ இதழாக வெளிவருகின்றது. இவ்விதழ் தமிழ் ஆய்வு உலகில் உள்ள தமிழ் ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துரைக்கும் வகை-யில் ஒரு பரந்துபட்ட களமாக விளங்குகிறது.
தமிழர் தம் பல்துறை அறிவையும், ஆய்வுத் திறனையும், உயர்ந்த சிந்தனைகளையும் உலகை உணரச் செய்து தமிழையும் தமிழரையும் வளர்ச்சியடையச் செய்வதே இவ்விதழின் நோக்கமாகும்.
உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்யும் தமிழ் அறிஞர்கள் இவ்விதழுக்குக் கட்டுரைகள் வழங்கி வருகின்ற-னர். தனித்தன்மை மிக்க இக்கட்டுரைகள் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவ்வாறு இயன்ற வகையில் சிறப்புடன் நூல் வெளியீட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

பதிப்பு-காப்பு உரிமை : கேள்விகள் - பதில்கள்


வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங்
1
பதிப்பு-காப்பு உரிமை குறித்து‍ வாசகர்களுக்கு இயல்பாக ஏற்படுகின்ற சந்தேகங்களின் பேரில் எழும் கேள்விகளுக்கு வழக்கறிஞர் லாரன்ஸ் லியாங் பதிலளிக்கிறார். . இதனை அசோகன் முத்துசாமி அவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்.
லாரன்ஸ் லியாங் சட்டம் சம்பந்தமான ஆராய்ச்சியாளர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர். பெங்களூரில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த சட்டரீதியான இயக்கங்களை நடத்தி வருபவர். மாற்றுச் சட்ட அமைப்பை(Alternative Law Forum)
அமைத்தவர்களில் ஒருவர். ‘‘அறிவு சார்ந்த சொத்துரிமை’’ சம்பந்தமான அரசியல் கோட்பாடுகளுக்கு எதிராக குரல் எழுப்பியவர்.
இவர் சட்டம், பொதுக்கலாச்சாரம் அறிவு சார்ந்த சொத்துக்கள் ஆகிய துறைகளில் ஆய்வு செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும் அவர், மென்பொருட்களில் திறந்த வெளி அணுகுமுறை இயக்கத்தின் (Open Source Movement) முக்கிய ஆதரவாளர்.
இவர் ‘‘Sex Laws and Video tape: The public is watching, Guide to open content licenses’’  ஆகிய நூல்ககளை எழுதியுள்ளார். தற்போது ‘‘Law, Justice and Cinema’’  என்னும் நூலை எழுதி வருகிறார்.

2
என்னுடைய படைப்பின் மீதான எனது காப்புரிமையை நான் முறைப்படி பதிவு செய்ய வேண்டிய தேவை இருக்கின்றதா?
என்னுடைய கையெழுத்துப் பிரதியை (அல்லது தட்டச்சுப் பிரதியை) எங்கே நான் பதிவு செய்ய வேண்டும்?
இல்லை. காப்புரிமை தானாகவே வந்துவிடுகின்றது. சம்பிரதாயங்கள் எதுவும் தேவையில்லை. என்றபோதும், ஒரு படைப்பு யாருக்குச் சொந்தம் என்பதில் ஏதேனும் தகராறு வந்தால், காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்பதற்கான சட்டப்படி செல்லத்தக்க முதல்கட்ட சாட்சியமாக காப்புரிமைப் பதிவுச் சான்றிதழ் பயன்படுகின்றது.
காப்புரிமைச் சட்டத்தின் 48வது பிரிவு பின்வருமாறு கூறுகின்றது:
காப்புரிமைப் பதிவேட்டில் பதியப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதில் பதியப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றிற்கு காப்புரிமைப் பதிவேடே முதல் கட்ட சாட்சியமாக விளங்கும். அல்லது காப்புரிமைப் பதிவாளரால் உண்மைப் பிரதி என்று சான்றளிக்கப்பட்ட, காப்புரிமை அலுவலகத்தின் முத்திரை பதிக்கப்பட்ட அந்த ஆவணங்களின் சாராம்சங்கள் முதல்கட்ட சாட்சியமாக விளங்கும் கூடுதல் அத்தாட்சியோ அல்லது மூலப்பிரதியைக் காட்ட வேண்டிய தேவையோ இன்றி அனைத்து நீதிமன்றங்களிலும் சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். 
என்றாலும், காப்புரிமையைப் பதிவு செய்யாமலிருப்பது உங்களது படைப்புகள் ஆக்கிரமிக்கப்படுவது உள்ளிட்ட காப்புரிமைச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள எந்த உரிமையைப் பயன்படுத்துவதிலிருந்தும் உங்களை விலக்கி வைப்பதில்லை. இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் இந்த நிலையை உறுதி செய்துள்ளன.
காவல்துறையினர் உள்ளிட்ட இச்சட்டத்தைச் செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் பலர் பெரும்பாலும் இச்சட்டம் பற்றி நன்கு அறியாதவர்களாக இருக்கிறார்கள். பதிவுச் சான்றிதழ் இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கருதிக் கொள்கின்றனர். ஆதலால் காப்புரிமையைப் பதிவு செய்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். உங்களது காப்புரிமையை இணையதளத்திலும் பதிவு செய்து கொள்ள வகை செய்திருப்பதன் மூலம் அமைச்சரகம் அந்த வேலையை மேலும் சுலபமாக்கியிருக்கின்றது.
http://copyright.gov.in/UserRegistration/frmLoginPage.aspx என்கின்ற இணைய முகவரியில்  இந்தச் செயல்முறை பற்றிக் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.

3
1957_ம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை என்ன?
ஒரு படைப்பு உருவாக்கப்பட்ட உடனேயே காப்புரிமை அமலுக்கு வந்து விடுகின்றது. காப்புரிமையைப் பெறுவதற்காக எந்தச் சம்பிரதாயமும் செய்ய வேண்டிய தேவை இல்லை. எனினும், கல்வித்துறையின் காப்புரிமை அலுவலகத்தில் பராமரிக்கப்படும் காப்புரிமைப் பதிவேட்டில் ஒரு படைப்பைப் பதிவு செய்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பதிவேட்டில் செய்யப்பட்டுள்ள பதிவுகள் நீதிமன்றங்களில் முதல்கட்ட சாட்சியமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்துவிதமான படைப்புகளையும் பதிவு செய்து கொள்வதற்காகக் காப்புரிமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. காப்புரிமைப் பதிவாளர் அதன் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.
அதன் முகவரி
 B.2/W.3, C.R.Barracks,
Kasturba Gandhi Marg,
 New Delhi -110003.
Tel. 338 4387.
4
 ஒரு நூலுக்குக் காப்புரிமை எத்தனை ஆண்டுகள் நீடிக்கும்?
ஒரு இலக்கியப் படைப்பின் ஆசிரியரின் இறப்புக்குப் பின் அறுபதாண்டுகள் வரை காப்புரிமை நீடிக்கும். காப்புரிமைச் சட்டத்தின் 22 வது பிரிவு கால அளவை அளிக்கின்றது.

5
ஒரு பத்திரிகையிலோ அல்லது செய்தித்தாளிலோ வெளிவரும் ஒரு படைப்பின் காப்புரிமைக்கு உரியவர் யார், பதிப்பாளரா அல்லது படைப்பின் ஆசிரியரா?
ஒரு ஆசிரியரின் இலக்கியப் படைப்பு விஷயத்தில் காப்புரிமைச் சட்டத்தின் 17 _வது பிரிவு பின்வருமாறு உரிமை அளிக்கின்றது
அ. செய்தித்தாள், பத்திரிகை அல்லது அது போன்ற வார, மாத இதழின் உரிமையாளரிடம் செய்து கொண்ட பணி ஒப்பந்தம் அல்லது பயிற்சி ஒப்பந்தத்தின் கீழ் பணியாற்றும்போது.
ஆ. செய்தித்தாளிலோ, பத்திரிகையிலோ அல்லது அது போன்ற வார, மாத இதழ்களில் பிரசுரிக்கப்படுவதற்கென எழுதப்பட்டிருக்கும் போது.
அதற்கு மாறாக ஒப்பந்தம் எதுவும் போடப்படாத நிலையில், பதிப்பாளரே அந்தப் படைப்பினுடைய காப்புரிமையின் உடைமையாளராவார். ஆனால், இது செய்தித்தாள், பத்திரிகை அல்லது வார, மாத இதழ்களில் வெளியிடப்படும் படைப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் மற்ற விஷயங்களில் படைப்பின் முதல் உரிமையாளராக, படைப்பாளியே இருப்பார்.
கீ

6
20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்ட ஒரு நூல் மீது தனக்குக் காப்புரிமை இருக்கிறது என்று ஒருவர் கூறினால் எப்படி? ஆசிரியரும், பதிப்பாளரும் இப்போது இல்லை. யாரேனும் அதை மறுபடியும் பதிப்பிக்கலாமா?
ஒரு நூல் 20_ம் "நூற்றாண்டின் ஆரம்பத்தில் பதிப்பிக்கப்பட்டது என்பதனாலேயே அதற்குத் தானாகவே இனியும் காப்புரிமை இல்லாமல் போய்விடாது. அந்த ஆசிரியர் எப்பொழுது மறைந்து போனார் என்பதைப் பொறுத்தது அது. எடுத்துக்காட்டாக, ஒரு நூல் 1910_ம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டு, அதன் ஆசிரியர் 1980_ம் ஆண்டுதான் இறந்து போனார் என்றால், காப்புரிமை 2040_ம் ஆண்டு வரை நீடிக்கும்.   
கீ  
7
காப்புரிமையை மற்றொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ மாற்றுவதற்கான நடைமுறை என்ன?
உங்களது காப்புரிமையை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிறருக்கு எழுதி வைக்கலாம். அதற்கான நடைமுறைகள் சட்டத்தின் 18, 19 ஆகிய பிரிவுகளில் விதிக்கப் பட்டுள்ளன. அல்லது ஒரு குறிப்பிட்ட உரிமத்தை வழங்கலாம்.

8
பொதுத் தளத்தில்(public domain)  இலவசமாகச் சுற்றுக்கு விடப்பட்டுள்ளதால் திரைப்படச் சுவரொட்டிகள், நாட்காட்டி கலைப்படங்கள், தீப்பெட்டி முத்திரைச் சீட்டுகள் ஆகியவை காப்புரிமை உள்ள பொருட்களா?
ஒரு படைப்பு பொது அரங்கில் கிடைப்பதா லேயே அது காப்புரிமைப் பாதுகாப்பை  இழந்து விடுவதில்லை. ஒரு படைப்பில் காப்புரிமை இல்லாத நிலையிலோ அல்லது காப்புரிமை காலாவதியாகிவிட்ட நிலையிலோ தான் அது பொது அரங்கிற்கே வருகின்றது.
கீ
9
நு£லகங்களும், ஆவணக் காப்பகங்களும் காப்புரிமை உள்ள ஒரு படைப்பைப் பாதுகாப்பதற்காக நகலெடுக்க முடியுமா?
ஆம். ஒரு நூல் இந்தியாவில் விற்பனை செய்யப்படவில்லை எனில், ஒரு பொது நு£லகப் பொறுப்பாளரின் உத்தரவின் பேரில் அதிகபட்சமாக அந்த நூலை மூன்றுக்கு மிகாமல் பிரதியெடுத்துக் கொள்வதற்கு (பிரசுரம், இசைத்தகடு, அட்டவணை, வரைபடம் அல்லது திட்டப்படம் உள்பட) காப்புரிமைச் சட்டத்தின் 52 (0) பிரிவு அனுமதி அளிக்கின்றது.
10
திறந்தவெளி அணுகுமுறை (Open axis) என்றால் என்ன? ( ஒரு படைப்பை ) திறந்தவெளி மூலமாக வெளியிடுவதனால் பிரச்சனைகள் உண்டா?
திறந்தவெளி அணுகுமுறை அல்லது இலவச மென்பொருள் என்பது அதை மறு உற்பத்தி செய்வதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது அதைத் தழுவி மற்றொன்றை உருவாக்குவதற்கோ தடைகள் எதுவும் விதிக்காத மென்பொருளைக் குறிக்கின்றது. நூல் வெளியீட்டாளர்களுக்குக்  கூடுதல் பொருத்தமான சொல் 'திறந்த உள்ளடக்கம்' என்பதுதான். இலக்கிய மற்றும் கலாசார படைப்புகளுக்குத் திறந்த உள்ளடக்கக் கோட்பாட்டைப் பயன்படுத்துவதை இது குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, பொதுப் படைப்பாக்க உரிமங்கள் என்பவற்றிற்கு ஒரு உதாரணம், திறந்த உள்ளடக்க உரிமங்களாகும்.
'பொதுப் படைப்பாளிகள்' என்பது லாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். சட்டம் அளிக்கக்கூடிய அறிவுசார் உடைமை உரிமைகள் அனைத்தையும் பயன்படுத்த விரும்பாதவர்
களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். 'சில உரிமைகள் காப்புரிமைக்கு உட்பட்டவை' என்றோ அல்லது 'இப்படைப்பில் எதுவும் காப்புரிமைக்கு உட்பட்டவையல்ல' என்று உலகிற்கு அறிவிப்பதற்கான எளிய, ஆனால் நம்பகமான வழிக்கான இன்னும் தீர்க்கப்படாத கோரிக்கை இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். முழுமையான காப்புரிமை தாங்கள் விரும்பும் வகையில் தங்களது படைப்பு வெளிச்சம் பெறுவதற்கும், பரவலாக விநியோகிக்கப்படுவதற்கும் உதவுவதில்லை என்கின்ற முடிவிற்குப் பலர் வெகு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டார்கள். தொழில்முனைவோர் பலரும், கலைஞர்கள் பலரும் தங்களது படைப்பாக்க முதலீட்டிலிருந்து லாபம் பெறுவதற்கு இப்போது நூதனமான வழிமுறைகளையே தேர்வு செய்வார்கள். இன்னும் பலர் அறிவுசார் பொதுமைக்குப் பங்களிப்பதன் மூலமும்,
அதில் பங்கேற்பதன் மூலமும் மனநிறைவு அடைகிறார்கள். காரணங்கள் எதுவாயினும், இணைய குடிமக்கள் பலர் தங்களது படைப்புகளை மறுபயன்பாட்டிற்கும், மாற்றங்களுக்கு உட்படுத்தவும், பெருந்தன்மையான வகையில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறார்கள் என்பது தெளிவு. தங்களது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கு விரும்புகின்றவர்களுக்காகப் பொதுப் படைப்பாளிகள் அமைப்பு தன்னுடைய இணையதளத்தில் கட்டணம் எதுவுமின்றி உலகிற்கு வழங்குகின்றது.

11
வர்த்தகம் சாராத உரிமத்தை நான் தேர்வு செய்தால், அப்போதும் என்னுடைய உரிமம் பெற்ற படைப்புகளின் மூலம் பணம் சம்பாதிக்க முடியுமா?
நிச்சயமாக. வர்த்தக நோக்கமின்றிப் பயன்படுத்துதல் என்கின்ற நிபந்தனை உங்களது படைப்புகளைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும். காப்புரிமை பெற்றுள்ள உங்களுக்கு அல்ல. உங்களது படைப்புகளை மற்றவர்கள் லாப நோக்கத்திற்காகப் பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ அல்லது நகலெடுத்தாலோ, பொருள் ஈட்டுவதற்காகவோ அல்லது பொருளாதார ஆதாயத்திற்காகவோ உங்களது அனுமதியில்லாமல் அதைச் செய்ய முடியாது. படைப்பாளிகள் தங்களது படைப்புகளை மேல்நிலைக்கு உயர்த்தவும், விற்பனை செய்யவும் புதிய வழிகளைப் பரிசோதித்துப் பார்க்குமாறு படைப்பாளிகளை ஊக்குவிப்பதுதான் எங்களது முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. உண்மையில், படைப்பாளிகள் தங்களது படைப்புகளின் வர்த்தக அம்சங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டே, அதன் விநியோகத்தை அதிகப்படுத்த வழிவகுக்கும் கருவியாகவே வர்த்தக சார்பற்ற ஒரு உரிம முறையை நாங்கள் வடிவமைத்தோம்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்களது புகைப்படம் ஒன்றை வர்த்தகச் சார்பற்ற உரிம முறையில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, அதை உங்களது இணையதளத்தில் வலையேற்றம் செய்கிறீர்கள். 'ஸ்பெக்டக்கில்' என்கின்ற ஒரு லாப நோக்கில் நடைபெறும் பத்திரிகையின் ஆசிரியர் உங்களது புகைப்படத்தைப் பார்க்கின்றார். அதைத் தன்னுடைய அடுத்த இதழின் அட்டைப் படமாகப் பயன்படுத்த விரும்புகிறார். வர்த்தகச் சார்பற்ற வகையின் கீழ் அவர் அந்தப் புகைப்படத்தைத் தன்னுடைய நண்பர்களுக்கும், தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கும் காட்டலாம். ஆனால், அவர் அதைத் தன்னுடைய பத்திரிகைக்காகப் பயன்படுத்த வேண்டும் எனில், அவர் உங்களிடம் ஒரு ஒப்பந்தம் (நீங்கள் புத்திசாலியாக இருந்தால், பணம் பெற்றுக்கொண்டு) போட்டுக் கொள்ள வேண்டும்.

12
காப்புரிமை பதிவு செய்யப்பட்ட
ஒரு படைப்பின் எத்தனை பக்கங்கள்
ஒரு நூலகத்தில் பயன்படுத்துபவருக்குக் கொடுக்கப்படலாம்? அதே நபர் வேறு நாட்களில் எஞ்சியுள்ள பக்கங்களையும் கேட்டால் என்ன செய்வது?

சட்டத்தில் எண்ணிக்கையின் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் விவரிக்கப் படவில்லை. இலக்கிய, நாடக, இசை அல்லது கலைப்படைப்பை, ஆய்வு உள்ளிட்ட தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளும்போது 'நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும்' என்கின்ற வார்த்தைகளை மட்டுமே சட்டம் பயன்படுத்து கின்றது. அது ஒவ்வொரு விவகாரத்தையும் (அல்லது வழக்கையும்) சார்ந்தது.

13
நான் வாசிப்பதற்காக ஒரு நூலை முழுமையாக நகலெடுக்க முடியுமா? என்னுடைய நண்பருக்கு அதை நான் பரிசளிக்கலாமா?
தனிப்பட்ட ஆய்விற்காக ஒரு படைப்பை நியாயமாகப் பயன்படுத்துவதற்கு இந்தியாவில் கட்டுப்பாடுகள் இல்லை. வழக்குச் சட்டத்திற்கான விளக்கப்படி, ஒரு படைப்பின் எவ்வளவு பகுதி நகலெடுக்கப்படுகின்றது என்கின்ற அடிப்படையில் கட்டுப்பாடுகள் விதித்திருக்கின்ற போதும், ஆனால் நீங்கள் அதை மற்றவர்களுக்கு இரவல் அளித்தால் அது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு புறம்பானதாகக் கருதப்படக் கூடும்.
கீ
14
சில படைப்புகள் பொதுப் பணத்தின் மூலம் பதிப்பிக்கப்படுகின்றன. அவையும் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம். ஆனால், 52_ வது பிரிவில் அரசின்  படைப்புகளுக்குப் பிரத்யேகமான விதி விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

15
அறிவுத்திருட்டு (றிறீணீரீவீணீக்ஷீவீsனீ) என்றால் என்ன?
மற்றவருடைய படைப்பை அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, குறிப்பாகக் கல்விச் சூழலில் அப்படிச் செய்வது அறிவுத் திருட்டு எனப்படும். 
கீ
16
ஒரு ஆசிரியரின் காப்புரிமை அவரது சட்டப்படியான வாரிசுக்குத் தானாகவே மரபு வழிச் சொத்தாக ஆகிவிடுமா?
அதற்கு மாறாக உயில் எதுவும் இல்லாத வரையில், சட்டப்படியான வாரிசுகள் காப்புரிமையின் உடைமையாளர்களாக ஆகின்றார்.

17
கிராமபோன் தட்டுகளிலிருந்து இசையைக் குறுந்தகட்டில் பிரதியெடுத்து விற்பனை செய்யலாமா?
கூடாது. அது காப்புரிமை பெற்றவரின் ஒலிப்பதிவு உரிமையை மீறுவதாகும்.
கீ
18
பொது நிகழ்ச்சிகளுக்கு செய்தித்தாள்கள் அழைக்கப்படுகின்றன. அந்த செய்தித்தாள்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களுக்குக் காப்புரிமை கோரப்படுகின்றது. செய்தித்தாளை அழைத்த நிறுவனத்தால் அந்தப் புகைப்படங்களைப் பயன்படுத்த முடியுமா? புகைப்படங்கள் விளைபலனாக இருக்கலாம் ஆனால், அந்த நிறுவனம்தானே அதன் உள்ளடக்கம்?
இது அந்த நிகழ்ச்சியின் தன்மையைப் பொறுத்தது. அது ஒரு நிகழ்த்துக் கலையாக இருந்தால் முன்கூட்டியே நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவை பொதுக்கூட்ட உரைகள் போன்ற பொது நிகழ்ச்சிகள் பற்றி செய்தி கூறுவதாக இருந்தால் காப்புரிமைச் சட்டத்தில் அவற்றுக்கு விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

19
 காப்புரிமையை மீறுவதற்கு தண்டனை என்ன?
சட்ட மீறலுக்கு சிவில் மற்றும் கிரிமினல் பரிகாரங்கள் இருக்கின்றன .சிவில் பரிகாரங்களில் தடையுத்தரவு மற்றும் நட்டஈடு போன்றவை அடங்கும். சிறைத் தண்டனையும், அபராதமும் கிரிமினல் தண்டனைகளில் அடங்கும்.
கீ
20
 காப்புரிமையைப் பாதுகாக்கும் சட்டங்கள் எவை? அது மாநில அல்லது மத்திய அரசாங்கத்தின் தனியுரிமையா?
அது மத்தியப் பட்டியலில் 49_ஆவதாக வருகின்றது. 
கீ
21
 ஆண்டறிக்கைகள், நினைவு மலர்கள் காப்புரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவையா?
ஆம், அவை அசலான படைப்புகள் என்கின்ற தகுதியைப் பூர்த்தி செய்தால்.

22
 உரிமையாளரற்ற படைப்புகள் என்றால் எவை? உரிமையாளரற்ற படைப்புகளைப் பதிப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
காப்புரிமை உள்ளவர் தன்னுடைய படைப்பு என்று உரிமை கோராமலிருந்தாலோ அல்லது பதிப்பாளர் அந்தப் படைப்பைப் பதிப்பிக்காமல் இருந்தாலோ அது உரிமையாளரற்ற படைப்பு ஆகும். அத்தகைய படைப்புகளை மறுபதிப்பு செய்வதற்கான நடைமுறைகளை ஒத்துக்கொண்ட பின்னர், காப்புரிமைப் பதிவாளருக்கு விண்ணப்பித்த பின்பு அவற்றுக்குக் கட்டாய உரிமம் வழங்குவதற்கு இந்தியச் சட்டம் அனுமதிக்கின்றது.
கீ
23
 காப்புரிமை அளிக்கப்பட்ட படைப்புகளின் விவரங்கள் அடங்கிய தேசியப் பதிவேடு இருக்கின்றதா? இம்மண்ணின் சட்டத்தைப் பின்பற்ற நாம் இதை எப்படி அறிந்து கொள்வது? ஏற்கனவே பொது வெளிக்கு வந்துவிட்ட ஆனால், அரிதாகிவிட்ட படைப்புகளைச் பதிப்பிப்பதற்கு எந்த முகமையேனும் தடையில்லாச் சான்று வழங்க முடியுமா?
காப்புரிமைப் பதிவாளரால் அது பராமரிக்கப்படுகின்றது. காப்புரிமை உள்ள ஒரு படைப்பைக் கட்டாய உரிமத்தின் மூலம் மறுபடியும் பதிப்பிப்பதற்கு நீங்கள் நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.