Tamil books

Thursday 21 April 2011

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீட்டுப் பணிகள்

மு. வளர்மதி


ஒரு நாட்டின் முதல் அடையாளம் மொழி. மொழியைப் பேணிப் பாதுகாப்பதும், வளர்ப்ப-தும் நாட்டின் இன்றியமையாத தேவையாகும். பாமரர் முதல் புலவர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள், ஆட்சியாளர்கள் வரை தமிழ் மொழியின் வளர்ச்சிக்குத் தொன்று தொட்டுப் பங்களிப்புச் செய்து வருவதால் இன்று தமிழ் ‘செம்மொழி’ என்ற பெருமைக்குரிய ஒன்றாக விளங்குகிறது.
சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் தமிழர்கள். இருபதாம் நூற்றாண்டில் விடுதலைக்-குப் பின் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தம் தாய்த்தமிழை வளர்ப்பதைக் கருத்தில் கொண்டு உலகத் தமிழ் மாநாடுகளையும், தமிழ் ஆய்வு நிறுவனங்களையும் தொடங்கினர். அவ்வாறு தொடங்கப்பட்ட நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். 1968ஆம் ஆண்டு சனவரித் திங்களில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னை-யில் நடைபெற்றது. அம்மாநாட்டில் ‘தமிழிற்கு உயர் மைய ஆராய்ச்சி நிறுவனம்’ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்னும் கருத்தைத் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சராக விளங்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிஞர்கள் முன் எடுத்துரைத்தார். அதே வேளையில் பூனேயில் உள்ள ‘தக்கணக் கல்லூரி முதுகலை ஆராய்ச்சி நிறுவனத்தில்’ இயக்குநராக இருந்த டாக்டர் கத்ரே என்னும் அறிஞர் உலகத் தமிழாராய்ச்சி நி-றுவன அமைப்பிற்கு உரிய முன் வரைவுத்திட்டம் ஒன்றை அக்கருத்தரங்கில், ஆய்வுரையாக வழங்கினார். அத்திட்டத்தில், பரந்துபட்ட நிலையில், தமிழ்மொழி, இலக்கியப் பண்பாட்டு ஆராய்ச்சியை நடத்துவதற்குரிய நெறிமுறைகளை அவர் வகுத்தளித்தார்.
மாநாட்டின் நிறைவுவிழாவில், அத்திட்டத்-தினை அறிஞர் அண்ணா மகிழ்வுடன் வரவேற்றார். அவர் தம் உரையில்,
“பிரான்சு நாட்டிலுள்ள பிரெஞ்சு மொழிக் கலைக்கழகத்தைப் போன்ற நிலையில் நாம் அதனை உருவாக்க வேண்டும். அக்கலைக் கழகத்தின் அடிப்படைகளையும் நெறிமுறை-களையும் பின்பற்றி இங்குத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைப்போமானால் சிறப்புமிகு, ‘இந்தியக் கலைக்கழகத்தை’ அல்லது ‘தமிழகக் கலைக்கழகத்தை’ நாம் உருவாக்க இயலும். அப்பொழுதுதான், நமது தமிழ்மொழி ஆராய்ச்சிக் கழகம் உலகளாவிய நிலையில் வீறுடன் விளங்க இயலும்’’ என்று அவர் தெரிவித்தார். இந்தக் கருத்தரங்கில்தான் ‘உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நிறுவ வேண்டும்’ என்னும் எண்ணம் முதன்முதலாக எழுந்தது. இந்த எண்ணத்தின் விளைவாக இந்த நிறுவனத்தை உருவாக்குவதற்கு யுனெஸ்கோவின் உதவியை அறிஞர்கள் நாடினர். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாக் கொண்டா-டும் இத்தருணத்தில் இந்நிகழ்வை நினைவூட்டு-வது பொருத்தமானதாகும். அவருடைய இம்முயற்சிக்கு யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் பொறுப்பிலிருந்த மதிப்பிற்குரிய டாக்டர் மால்கம் ஆதிசேஷையா, மற்றும் அறிஞர் தனிநாயகம் அடிகள் ஆகியோரின் செயலூக்கம் மிக்க நடவடிக்கைகளில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாக்கம் பெற்றது.
நிறுவனத்தின் நோக்கம்
தமிழ் வளர்ச்சிக்குரிய அனைத்துப் பணிகளை-யும் தக்க முறையில் செய்வதற்கான சூழ்நிலை-களை உருவாக்கி _ தமிழறிஞர்களின் வழியாக, ஆர்வலர்களின் வழியாக இயலும் வகைகளி-லெல்லாம் வாய்ப்புகளை உருவாக்கி _ உலகளா-விய நிலையில் தமிழின் சிறப்பை உணர்த்த வேண்டும் என்பது இதன் தலையாய நோக்க-மாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழாராய்ச்சியில் ஈடுபாடுடைய அறிஞர்களின் ஒத்துழைப்புடன், பல்வேறு அறிவுத்துறை-களுடன் இணைந்த ஆராய்ச்சியைப் போற்றி வளர்ப்பதும், பிற மொழியாளர்களுக்குத் தமிழ்-மொழியைக் கற்பிப்பதும் இதன் முதன்மையான நோக்கமாகும்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கல்விப்பணி, ஆய்வுப்பணி, மொழிபெயர்ப்புப்பணி, ஓலைச்-சுவடிப் பதிப்புப்பணி, கருத்தரங்கப் பணி, வெளி-யீட்டுப் பணி என்ற பல்வேறு தளங்களில் உலக-ளா-விய நிலையில் தமிழ் வளர்ச்சிக்குரிய பணி-களைச் செய்து வருகிறது.  இன்றுவரை 600க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. இவை பல்வகைப்பட்டன:
1. தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதிகள் 2. தொல்காப்பிய உரைவளம் 3. தமிழர் பண்பாடு 4. தமிழர் மரபுச் செல்வம் 5. சுவடிப் பதிப்புகள் 6. உலகத் தமிழ் எழுத்தாளர்கள் 7. ஊர்ப் பெயராய்வு 8. தமிழ் வளர்ச்சி _ ஆண்டு வாரியாக 9. தொகுப்பு நூல்கள் _ ஒரு பொருள் பற்றியன 10. வெளிநாட்டறிஞர்களின் சொற்பொழி-வுகள் 11. நிறுவன ஆய்வுகள் 12. அகராதிகள்
13. அறக்கட்டளைச் சொற்பொழிவு வெளியீடுகள் 14. ஆய்வுக் கோவைகள்
15. மொழிபெயர்ப்பு நூல்கள் என்பனவாக இவ்வெளியீடுகள் அமை-கின்றன.
தமிழ் இலக்கியக் கொள்கைத் தொகுதி எனும் வரிசையில் 9 நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. இத்தொகுதிகள் தொல்காப்பியம் முதல் புதுக்கவிதை ஈறாக இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் போக்குகளை வெளிப்படுத்து-கின்றன. தமிழின் முதல் நூலான தொல்காப்பி-யத்தின் உரைவளம் பற்றி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 28 நூல்களை வெளியிட்டுள்ளது. இவை தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பல புதிய கருத்துகளையும் பார்வையையும் தந்துள்ளன.
தமிழர் பண்பாடு
தமிழக வரலாற்றையும், பண்பாட்டையும் வெளிக்கொணரும் நோக்கில் தமிழகக் கலைச் செல்வங்கள், தமிழர் அளவைகள், தமிழர் ஆடைகள், தமிழர் உணவு, தமிழர் எண்ணங்கள், தமிழர் கண்ட மனம், தமிழர் இசை, தமிழர் திருமணம், தமிழர் தோற்கருவிகள், தமிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், தமிழரின் தாயகம், தமிழும் தமிழரும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு, மலேசியத் தமிழரும் தமிழும், சங்கத் தமிழர் வாழ்வியல், சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், தமிழக நாட்டுப்புறக்கலைகள், தமிழர் காசு இயல், தமிழ்மொழியின் வரலாறு, தமிழர் கொடிகள், தமிழகத்தில் ஆசியர்கள், மெய்க்கீர்த்திகள் ஆகிய தலைப்புகளில் வெளி-வந்துள்ள நூல்கள் தமிழர்களின் சிறப்பையும், தமிழ்மொழியின் வளத்தையும் காட்டுவனவாகும்.
தமிழர் மரபுச்செல்வம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீ’ என்ற பெயரில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளைத் தொகுத்து ‘சிuறீtuக்ஷீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘லிணீஸீரீuணீரீமீs ணீஸீபீ நிக்ஷீணீனீனீணீtவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs கிக்ஷீt ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘பிவீstஷீக்ஷீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘றிலீவீறீஷீsஷீஜீலீவீநீணீறீ பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs’, ‘பிமீக்ஷீவீtணீரீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs - ணிபீuநீணீtவீஷீஸீ ணீஸீபீ க்ஷிஷீநீணீtவீஷீஸீ’ என்ற தலைப்புகளில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுதிகள் பழந்தமிழகத்தின் மொழி, இலக்கணம், வரலாறு, பண்பாடு, அரசியல், கலை, சமூகம், தத்துவம், ஆகியன பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும் ஆவணங்களாகத் திகழுகின்றன.
இதைப்போன்றே ‘ஜிலீமீ சிஷீஸீtக்ஷீவீதீutவீஷீஸீs ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs ஷீயீ மிஸீபீவீணீஸீ சிuறீtuக்ஷீமீ’ எனும் கருத்தரங்கக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவை ‘ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ்’, ‘ஷிஷீநீவீஷீ - சிuறீtuக்ஷீணீறீ கிsஜீமீநீts’, ‘கிக்ஷீts ணீஸீபீ கிக்ஷீநீலீவீtமீநீtuக்ஷீமீ’, ‘லிணீஸீரீuக்ஷீணீரீமீ ணீஸீபீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ’ எனும் தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.
சுவடிப் பதிப்புகள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடி-யியல் நூலகத்தில் உள்ள பழந்தமிழ்ச் சுவடிகள் பல பதிப்பிக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இலக்கியம், இலக்கணம், மருத்துவம், கதைப்பாடல்கள், புராணப் பாடல்கள், பிரபந்தங்கள் போன்ற நூல் வகைகள் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. கண்மருத்துவம், மனைநூல், கருவூரார் பல திரட்டு, சின்ன மகிபன் குளுவ நாடகம், வெள்ளைக்காரன் கதை, கும்மிப்பாடல்கள், ஊஞ்சல் இலக்கியம், பணவிடு தூது, திருக்குருகூர் திருவேங்கடநாதன் பிள்ளைத்தமிழ், திருமயிலை உலா, பிரபந்தத்திரட்டு, குணவாகடம், சித்தமருத்துவ மணிகள், சிவகிரி குமர சதகம், புதுவூர்ச் சக்கரவர்த்தி அம்மானை, குசலவர் சுவாமி கதை, தோட்டுக்காரி கதை, சின்னணைஞ்சான் கதை, முத்தாரம்மன் கதை போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.
தமிழ்ச் சுவடிகள் அட்டவணை, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத் தமிழ்ச் சுவடிகள் விளக்க அட்டவணை தொகுதிகள், 1, 2, 3; உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடி விளக்க அட்-டவணை மூன்று தொகுப்பு நூல்கள், சுவடி-யியல், சுவடியியல் பயிற்சிக் கையேடு, சுவடிச்-சுடர் என்ற பல நூல்கள் வெளியிடப்பட்-டுள்ளன. தமிழின் தொன்மையைக் காட்டுவன-வாக இந்நூல்கள் அமைந்துள்ளன.
உலகத் தமிழ் எழுத்தாளர்கள்
‘உலகத் தமிழ் எழுத்தாளர்கள் யார்?’ என்ற பெயரில் வெளிவந்துள்ள நூலில் உலகமெங்கு-முள்ள 1443 தமிழ் எழுத்தாளர்களைப் பற்றிய விவரக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ‘உலகத் தமிழிலக்கிய வரலாறு’ எனும் தலைப்பில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை தமிழிலக்கிய ஆவணங்களாகத் திகழ்கின்றன. ஆய்வுலகிற்குப் பெரும் பலன் நல்குவனவாகும்.
ஊர்ப் பெயராய்வு
தமிழர்கள் வாழ்ந்து வருகின்ற ஊர்ப் பெயர்கள், அவர்களின் வரலாறு, பண்பாடு, கலை, புராணம் ஆகியவற்றின் வெளிப்பாடாக அமைந்துள்ளதை எடுத்துக்காட்டும் வகையில் தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள், இலக்கியத்-தில் ஊர்ப்பெயர்கள் (2 தொகுதிகள்) செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள், தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் ஓர் ஒப்பாய்வு சென்னை என்ற நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நூல்-களின் வழியாகக் காலந்தோறும் ஊர்ப்பெயர்கள் பெற்றுள்ள மாற்றங்கள், அதன் உண்மை நிலை வரலாறு ஆகியவற்றை அறிந்து கொள்ள மிகவும் தேவையான ஆய்வு நூல்களாகத் திகழ்கின்றன
தமிழ் வளர்ச்சி
ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் தமிழாய்வு எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்ட எண்பதில் தமிழ், எண்பத்தொன்றில் தமிழ், எண்பத்திரண்டில் தமிழ், எண்பத்து மூன்றில் தமிழ், (பகுதி 1, 2, 3) எனும் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து இவ்வாறு வெளிவர-வில்லை. சமூகவியல் தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள் நாட்டுப்புறவியல், கலை, பண்பாடு _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், தொல்லியல், வரலாறு, சமூகவியல் _ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், சமயம், தத்துவம் உளவியல்_ தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அறிவியல் தகவல் தொடர்பு  எனும் தலைப்புகளில் 4 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. கருத்தரங்குக் கட்டுரைத் தொகுப்புகளான இந்நூல்கள் தமிழியல் ஆய்வு உலகில் குறிப்பிடத்தக்கப் பாராட்டைப் பெற்றுள்ளன.
தொகுப்பு நூல்கள்
இலக்கியங்களில் பரவிக் கிடக்கும் ஒரு பொருள் பற்றிய கருத்துகளை ஒன்றிணைத்து நூல்களை வெளியிடுவது, கருத்தரங்குக் கட்டுரை-களைத் தொகுத்து நூல்களை வெளியிடுவது என்ற நோக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. 1.தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ எச்சவியல். 2. தொல்காப்பியம் _ சொல்லதிகாரம் _ உரியியல் 3. தொல்காப்பியம் _ பொருளதிகாரம் _ கற்பியல், தமிழ் ஆய்வுக் களங்கள் சங்க இலக்கியம் கவிதையியல் சிந்தனைப் பின்புல மதிப்பீடு, இருபதாம் நூற்றாண்டு தமிழ் நாடகங்கள், தொல்காப்பியப்பாவியல் கோட்பாடுகள், (திருப்புகழ் ஒளிநெறி (3 தொகுதிகள்) பெ.நா. அப்புசுவாமியின் அறிவியல் கட்டுரைகள் தொகுதி 1, 2, தமிழ் நாடகம் நேற்றும் இன்றும், பயிலரங்கக் கவிதைகள், இந்திய விடுதலைக்குப் பின் தமிழிலக்கியச் செல்நெறிகள், அயலகத் தமிழ்க் கலை இலக்கியச் சமகாலச் செல்நெறிகள், தமிழில் ஆவணங்கள், தமிழக மகளிரியல், நானும் என் கவிதையும், நானும் என் எழுத்தும், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞா., ஆராய்ச்சிப் பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார், தணிகை மணி வ.சு. செங்கல்வராய பிள்ளை, மூதறிஞர்
மு. இராகவையங்கார், சிவக்கவிமணி
சி.கே. சுப்பிரமணிய முதலியார், பின்னத்தூர்
அ. நாராயணசாமி ஐயர், திருமணம் செல்வக் கேசவராய முதலியார், பண்டிதமணி
மு. கதிரேசன் செட்டியார், பேராசிரியர் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை, பேராசிரியர் அ.மு. பரமசிவானந்தம், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிஞர்கள் தொகுதி 1, 2, வேதாத்திரியத்தில் சமூகவியல் இறையியல் சிந்தனைகள் என ஏராளமான நூல்கள் பல்வேறு முறைகளில் வெளியிட்டு நிறுவனம் தனது தமிழ்ப் பணிகளைச் செய்து வருகிறது.
வெளிநாட்டுப் பேராசிரியர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் ‘ணிஜீவீரீக்ஷீணீஜீலீவீநீணீறீ மீஸ்வீபீமீஸீநீமீ யீஷீக்ஷீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs’, ‘ஜிலீவீக்ஷீu விuக்ஷீuரீணீஸீ’ எனும் பெயர்களில் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. ரிணீக்ஷீணீவீளீணீறீ கினீனீணீவீஹ்ணீக்ஷீ, ஜிலீவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ - ஜிலீமீ பீணீஹ்றீவீரீலீt ஷீயீ tலீமீ ஜீsஹ்நீலீமீ, கி ஜிணீனீவீறீ ஸிமீணீபீமீக்ஷீ ஸ்ஷீறீ. மி ணீஸீபீ ஸ்ஷீறீ.மிமி, சிலீவீமீயீtணீவீஸீs ஷீயீ tலீமீ ஷிணீஸீரீணீனீ கிரீமீ, கி நிக்ஷீணீனீனீணீக்ஷீ ஷீயீ சிஷீஸீtமீனீஜீஷீக்ஷீணீக்ஷீஹ் லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் ஜிணீனீவீறீ, லிணீஸீபீsநீணீஜீமீ ணீஸீபீ ஜீஷீமீtக்ஷீஹ், ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ ணீஸீபீ கிstணீபீலீஹ்ணீஹ்வீ, றிமீக்ஷீsஷீஸீணீ வீஸீ ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ, ஜிணீனீவீறீ மிஸீபீவீணீ, சிக்ஷீவீtவீநீணீறீ ஷிtuபீவீமீs வீஸீ ரிuக்ஷீணீறீ, ஷிtuபீவீமீs வீஸீ ஜிணீனீவீறீ றிக்ஷீஷீsஷீபீஹ் ணீஸீபீ றிஷீமீtவீநீs, லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் சிக்ஷீவீtவீநீவீsனீ வீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ ஷிணீஸீsளீக்ஷீவீt, ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, மிஸீபீவீணீஸீ ணிஜீவீstமீனீஷீறீஷீரீஹ், ஷிஷீuஸீபீ சிஷீக்ஷீக்ஷீமீsஜீஷீஸீபீமீஸீநீமீ தீமீtஷ்மீமீஸீ ஜிணீனீவீறீ ணீஸீபீ யிணீஜீணீஸீமீsமீ, ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ ஜிலீமீஷீக்ஷீஹ் ணீஸீபீ கிஜீஜீறீவீநீணீtவீஷீஸீ ளிஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஸீரீ ஜிவீக்ஷீuளீளீuக்ஷீணீறீ, ஷிஷீநீவீணீறீ றீவீயீமீ ஷீயீ tலீமீ ஜிணீனீவீறீs, ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ ணீஸீபீ மிஸீபீவீணீஸீ ஜீலீவீறீஷீsஷீஜீலீஹ், கிஸீ மிஸீtக்ஷீஷீபீuநீtவீஷீஸீ tஷீ ஸிமீறீவீரீவீஷீஸீ ணீஸீபீ றிலீவீறீஷீsஷீஜீலீஹ் - ஜிமீஸ்ணீக்ஷீணீனீ ணீஸீபீ ஜிவீஸ்ஸ்வீஹ்ணீஜீஜீவீக்ஷீணீஜீணீஸீtணீனீ, கி ஙிuஸீநீலீ ஷீயீ ணிssணீஹ்s ஷீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ, க்ஷிவீsஸீணீஸ்வீsணீனீ வீஸீ ஜிணீனீவீறீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ தீமீtஷ்மீமீஸீ tலீமீ 7tலீ & 9tலீ சிமீஸீtuக்ஷீவீமீs, கிரீக்ஷீமீமீனீமீஸீtவீஷீஸீ ஞிக்ஷீணீஸ்வீபீவீணீஸீ லிணீஸீரீuணீரீமீ, ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ், ஙிவீதீறீவீஷீரீக்ஷீணீஜீலீஹ் ஷீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ  என இன்னும் பல தமிழியல் தொடர்பான ஆங்கில நூல்களை நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் மொழி அறியாத பிற மொழியாளர்கள், பிற நாட்டார் தமிழ் மொழியை, இலக்கியங்களை அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்து வருகிறது. தமிழைப் பிற மொழியாளர்கள் கற்றுக் கொள்ள ஏதுவாக கீஷீக்ஷீளீ ஙிஷீஷீளீ ஷிஜீஷீளீமீஸீ ஜிணீனீவீறீ  என்ற நூலும், அது தொடர்பான குறுந்தகடுகளும் வெளியிடப்பட்-டுள்ளன.
மொழிபெயர்ப்பு நூல்கள்
நிறுவனத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்று மொழிபெயர்ப்புப் பணியாகும். பழமை-யான இலக்கியங்களை மொழிபெயர்த்து வெளியிடுவதன் மூலம் தமிழின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் நோக்குடன் பல நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பிலும், மறு பதிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளன. ஜிஷீறீளீணீஜீஜீவீஹ்ணீனீ - றிலீஷீஸீஷீறீஷீரீஹ் ணீஸீபீ விஷீக்ஷீஜீலீஷீறீஷீரீஹ் ஜிணீனீவீறீ ஸ்மீக்ஷீsமீ வீஸீ ஜிக்ஷீணீஸீsறீணீtவீஷீஸீ, ரிuக்ஷீuஸீtஷீளீணீவீ, ரிuக்ஷீவீஸீநீவீஜீணீணீttu, விuttஷீறீறீணீஹ்வீக்ஷீணீனீ ஷிவீஜ் றீஷீஸீரீ ஜீஷீமீனீs யீக்ஷீஷீனீ sணீஸீரீணீனீ ஜிணீனீவீறீ, ஜிணீனீவீறீ பிமீக்ஷீஷீவீநீ ஜீஷீமீனீs, ழிணீறீணீஸ்மீஸீதீணீ, ஜிமீனீஜீறீமீ நீலீவீனீமீs, ஞிமீபீவீநீணீtவீஷீஸீ, ஜிணீஸீவீஜீணீணீளீuக்ஷீணீttஷீளீணீவீ, சிலீவீறீணீஜீஜீணீtவீளீணீக்ஷீணீனீ, ஷிமீறீமீநீtமீபீ றிஷீமீனீs ஷீயீ ஙிலீணீக்ஷீணீtலீவீபீணீsணீஸீ (ணிஸீரீறீவீsலீ, விணீறீணீஹ்ணீறீணீனீ, ரிணீஸீஸீணீபீணீனீ,ஜிமீறீuரீu) ஜிணீனீவீறீ றிஷீமீtக்ஷீஹ் ஜிஷீபீணீஹ் ழிணீtக்ஷீவீஸீணீவீ திஷீuக்ஷீ பிuஸீபீக்ஷீமீபீ, விணீஸீவீனீமீளீணீறீணீவீ எனப் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பழமொழி நானூறு தெலுங்கு மொழி-பெயர்ப்பு, சர்வக்ஞர் உரைப்பா, நாச்சியார் திருமொழி தெலுங்கு மொழிபெயர்ப்பு, தெசிணி-யின் தமிழாக்கப் பாடல் திரட்டு, மிருச்சகடிகம், முத்ரா ரா-க்ஷஸம், நாலடியார் மூலமும் உரையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன், திருக்குறள் பூரணலிங்கம்பிள்ளை ஆங்கில மொழியெர்ப்-புடன், பாணினியின் அஷ்டாத்தியாயி தமிழாக்கம் 3 பகுதிகள், கார் நாற்பது, களவழி நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நன்னெறி ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஆகிய நூல்கள் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
அகராதிகள்
தமிழ்மொழியின் அடிப்படைத் தேவையான அகராதிகள் வெளியீட்டுப் பணிகளையும் உலகத் தமிழாராயச்சி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. தமிழ்_ஆங்கிலம் அகராதி பகுதி 1, 2, 3, 4, செந்தமிழ் அகராதி, சொற்பிறப்பு _ ஒப்பியல் தமிழ் அகராதி என்ற அகராதிகள் வெளியிடப்-பட்டுள்ளன.
ஆய்வுக் கோவைகள்
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகள் அம்மன்றத்தால் வெளியிடப்-படாதவை மட்டும் ஆண்டு வாரியாக வெளி-யிடப்பட்டுள்ளன. இ.ப.த.ம. ஆய்வுக்கோவை தொகுதி 1, 2, 3, (1970) ஆய்வுக் கோவை தொகுதி 1, 2 (1969) என்பவை அவை. இந்நூல்கள் பல்பொருள் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன.
அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று வரை 31 அறக்கட்டளைகள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறக்கட்டளைச் சார்பிலும் ஆண்டு-தோறும் ஒரு பேராசிரியரைத் தேர்ந்தெடுத்து, சொற்பொழிவு ஆற்றச் செய்து, சொற்பொழிவு நிகழ்த்தும் நாளன்றே நூலை வெளியிடுவது வழக்கமாகும். இந்த அறக்கட்டளைகள் அறிஞர்களாலும், கொடையாளர்களாலும், பல்வேறு அமைப்புகளாலும் நிறுவப்பட்டு பல சிறந்த நூல்கள் வெளிவருவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. அறக்கட்டளைச் சொற்-பொழிவு நூல்களாக இந்நாள் வரை 142 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவை படைப்பிலக்கியம், இதழ்கள், இலக்கியக் கோட்பாடுகள், இசுலாமியத் தமிழ், கிறித்துவமும் தமிழும், சைவத்தமிழ், தமிழ் நூல் பதிப்புகள், வ.உ.சியும் தமிழும், பாவாணர் ஆய்வுகள், மொழியியல், கலை பண்பாடு, இதழியல், பதிப்பியல், மொழிபெயர்ப்பியல், இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாறு, தொ.பொ.மீ. இலக்கியப்பணி, தொழில் கல்வி, அறிவியல், தொழில் நுட்பவியல், தமிழர் கண்ட தாவரவியல், ம.பொ.சி.யும் தமிழும் தமிழரும், தமிழகத்தில் தேசியமும் காந்தியமும் மற்றும் நாமக்கல் கவிஞரின் படைப்புகள், சமூகவியல், தனித்தமிழ் இயக்கம், காசு இயலும் பிற துறைகளும், தனிநாயக அடிகள், பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தமிழில் ஆவணங்கள், பெண்ணியம், திருமுறைகள், தமிழ்ப்பண்பாடு, மற்றும் பெயரியல், அறிவியல் தமிழ்க் கலைச் சொல்லாக்கம், கவிதையியல், ஆகிய பொருண்-மைகள் அடிப்படையில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல்கள் யாவும் வெளியிடப்-பட்டுள்ளன. இப்பொருண்மை குறித்து வெளியிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழுக்கும் தமிழருக்கும் வளம் சேர்ப்பன. சான்றுக்கு ஒரு சில சுட்டிக்காட்டலாம். பிராகிருதமும் தமிழும், தமிழும் குறியியலும், தமிழும் தெலுங்கும், தமிழில் பிறதுறைக் கோட்பாட்டாய்வுகள், வரலாறும் மதிப்பீடும், தமிழும் கிறித்தவமும், சைவத்தமிழ், திருமறையும் தீந்தமிழும், இசுலாம் வளர்த்த தமிழ், உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகள், தமிழ் தந்த வ.உ.சி., தமிழெழுத்து வரி வடிவ வரலாறு, பாவாணர் ஆய்வு நெறி, இதழாளர் பெரியார், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, சங்க இலக்கிய ஆய்வு, தெ.பொ.மீ.யும் மேலை அறிஞரும், தமிழர் கட்டிடக்கலை, தமிழரின் தாயகம், தமிழில் விடுதலை இலக்கியம், மலையாளக் கவிதைகள், தொல்காப்பிய இசைக்குறிப்புகள், சங்ககாலக் காசு இயல், உலக அரங்கில் தமிழ், பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி, தொல்லியல் நோக்கில் சங்க காலம், பெரியாரியப் பெண்ணியம், மௌனத்தின் அதிர்வுகளும் மொழியும் _ பெண், பண்பாட்டு நோக்கில் திருமுறைகள், கவிதையியல் என்று இன்னும் பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறந்த நூல்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.
நிறுவன இதழ் வெளியீடு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் தமிழியல் (யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ ஜிணீனீவீறீ ஷிtuபீவீமீs) 1969ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இவ்விதழ் ஆண்டுக்கு இருமுறை தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும் இருமொழி பருவ இதழாக வெளிவருகின்றது. இவ்விதழ் தமிழ் ஆய்வு உலகில் உள்ள தமிழ் ஆய்வுச் சிந்தனைகளைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு எடுத்துரைக்கும் வகை-யில் ஒரு பரந்துபட்ட களமாக விளங்குகிறது.
தமிழர் தம் பல்துறை அறிவையும், ஆய்வுத் திறனையும், உயர்ந்த சிந்தனைகளையும் உலகை உணரச் செய்து தமிழையும் தமிழரையும் வளர்ச்சியடையச் செய்வதே இவ்விதழின் நோக்கமாகும்.
உலகின் பல்வேறு இடங்களில் பல்வேறு துறைகளில் ஆய்வு செய்யும் தமிழ் அறிஞர்கள் இவ்விதழுக்குக் கட்டுரைகள் வழங்கி வருகின்ற-னர். தனித்தன்மை மிக்க இக்கட்டுரைகள் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் பயன் அளிக்கும் வகையில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் இவ்வாறு இயன்ற வகையில் சிறப்புடன் நூல் வெளியீட்டுப் பணிகளைச் செய்து வருகிறது.

No comments:

Post a Comment