Tamil books

Thursday 21 April 2011

சென்னைப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை

வ. ஜெயதேவன்


இந்தியப் பல்கலைக்கழகங்களுள் மிகவும் தொன்மையானவை மூன்று பல்கலைக்-கழகங்கள் ஆகும். அவை கொல்கத்தா, மும்பை, சென்னைப் பல்கலைக்கழகங்கள். அவை 1857இல் தொடங்கப்பெற்றவை. 150 ஆண்டு-களைக் கடந்த அவற்றுள் சென்னைப் பல்கலைக்கழகம் தென்னகப் பல்கலைக்-கழகங்களுக்கெல்லாம் அன்னைப் பல்கலைக்-கழகம் மட்டுமன்றிச் சில பல்கலைக்-கழகங்-களுக்குப் பாட்டிப் பல்கலைக்கழக-மாகவும் விளங்கிவரும் பெருமைக்கும் உரியது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பன்முகச் சிறப்புக்களுள் அதன் பதிப்புத்துறையின் பங்களிப்பும் சிறப்பாகக் குறிக்கத்தக்கது. அப்பதிப்புத்துறை எப்போது தொடங்கப் பெற்றது, அது தொடங்கப் பெற்ற பின்னணி யாது, அதன் முதல் வெளியீடு எது முதலான வரலாறுசார் வினாக்களுக்கு விடைகாண இயலவில்லை. எனினும் அது ஆற்றிய, ஆற்றி-வரும் பற்பல பணிகள் பயன் மிக்கவை; போற்றப்பட வேண்டியவை என்பதில் இரு கருத்துகள் இருக்க நியாயம் இல்லை. அத்துறையின் வெளியீட்டுப் பணிகள் குறித்துச் சுருக்கமாக இங்கு நோக்கலாம்.
பாடத்திட்டங்கள்
சென்னைப் பல்கலைக்கழகம் பல்வேறு இணைப்புக் கல்லூரிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கல்லூரிகளில் பயிற்று-விக்கப்படும் பல்வேறு படிப்புப் பிரிவுகளுக்கு உரிய பாடத்திட்டங்கள் உரிய பாடத்திட்டக் குழுவில் (ஙிஷீணீக்ஷீபீ ஷீயீ ஷிtuபீவீமீs) வடிவமைக்கப்-பட்டுக் கல்வி அவை  (கிநீணீபீமீனீவீநீ சிஷீuஸீநீவீறீ), பேரவை (ஷிமீஸீணீtமீ)  ஆகியவற்றில் ஏற்கப்பட்ட பின்னர் ஆசிரியர், மாணவர் நலன் கருதித் தனி நூல்களாக வெளியிடும் நடைமுறை வழக்கில் உள்ளது.
பாட நூல்கள்
பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பட்டப்படிப்புக்களில் அடித்தளப் படிப்பில் (திஷீuஸீபீணீtவீஷீஸீ சிஷீuக்ஷீsமீ) மொழிப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இம்மொழிப் பாடங்-களுக்கு உரிய பாட நூல்களைப் பல்கலைக்-கழகம் வெளியிட்டுவருகிறது.
அறக்கட்டளைச் சொற்பொழிவுகள்
பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு அறக்கட்டளைகள் நிறுவப்பட்-டுள்ளன. அறக்கட்டளை நிறுவத் தனியார் அல்லது அரசு நல்கும் நிதி வங்கி நிலைவைப்-பில் இடப்பட்டு அதன் வாயிலாகக் கிட்டும் வட்டி வருவாயைக் கொண்டு ஆண்டுதோறும் அல்லது வரையறுத்த காலத்தில் சொற்பொழி-வுகள், கருத்தரங்குகள் நடத்துவது வழக்கில் உள்ள முறை. இந்நிகழ்ச்சிகளில் அறிஞர்கள் பங்கேற்று உரை நிகழ்த்துவர் அல்லது கட்டுரை வழங்குவர். இவ்வுரைகளுள் அல்லது கருத்-தரங்கத் தொகுப்புக்களுள் தெரிவுசெய்யப்பெற்ற சிலவற்றைப் பல்கலைக்கழகம் நூல் வடிவில் வெளியிட்டுவருகிறது.
ஆய்விதழ்கள்
ஆய்வே பல்கலைக்கழக ஆசிரியர்களின் முதன்மையான பணி ஆகும். ஆதலின் அவர்கள் தமது ஆய்வுவழி அறியலாகும் அரிய உண்மை-களை உலகின் கருத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் அவ்வப்போது கட்டுரைகள் வெளியிடுவது வழக்கம். அவர்களின் அத்தகு வெளியீட்டுக்கு உதவும் களமாகப் பல்கலைக்-கழகம் ஆய்விதழ்கள் பலவற்றை வெளியிட்டு-வருகிறது. தமிழாய்வு, உயராய்வு ஆகிய இதழ்கள் தமிழ்ப் புலம் சார்ந்தும், கிஸீஸீணீறீs ஷீயீ ளிக்ஷீவீமீஸீtணீறீ ஸிமீsமீணீக்ஷீநீலீ கீழைக்கலையியல், மொழிப்புலம் சார்ந்தும்,  ஙிuறீறீமீtவீஸீ ஷீயீ tலீமீ மிஸீstவீtutமீ ஷீயீ ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீணீறீ சிuறீtuக்ஷீமீ  மரபுசார் பண்பாட்டுப் புலம் சார்ந்தும், மிஸீபீவீணீஸீ றிலீவீறீஷீsஷீஜீலீவீநீணீறீ கிஸீஸீuணீறீ மெய்ப்பொருளியல் புலம் சார்ந்தும் வெளியிடப்படுகின்றன. அன்றியும், யிஷீuக்ஷீஸீணீறீ ஷீயீ tலீமீ விணீபீக்ஷீணீs ஹிஸீவீஸ்மீக்ஷீsவீtஹ்  என்னும் பெயரில் தனித்தனியே கலையியல் புலம் சார்ந்தும் அறிவியல் புலம் சார்ந்தும் இரண்டு இதழ்கள் வெளியிடப்படுகின்றன. மேலும் மிஸீபீவீணீஸீ சீமீணீக்ஷீ ஙிஷீஷீளீ ஷீயீ மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ கியீயீணீவீக்ஷீs என ஆண்டு நூல் ஒன்றும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு நூல்கள்
பல்கலைக்கழக ஆசிரியர்கள், இணைப்புக் கல்லூரி ஆசிரியர்கள் எழுதும் ஆய்வு நூல்கள் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், மொழியியல் சார் ஆய்வு நூல்கள், அரசியல், ஆட்சியியல், இசையியல், இதழியல், உளவியல், கல்வியியல், குற்றவியல், சட்டவியல், சமயவியல், சமுதாய-வியல், தொல்பொருளியல், நூலகவியல், பொது-வாழ்வியல், பொருளியல், மானிடவியல், மெய்ப் பொருளியல், வரலாற்றியல் சார் கலையியல் ஆய்வு நூல்கள், இயற்பியல், உயிரியல், கணிதவியல், மருத்துவவியல், மனையியல், வேதியியல் சார் அறிவியல் ஆய்வு நூல்கள் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுள் முனைவர் பட்டப்பேற்றுக்கு அடிப்படையாய் அமைந்த வெளியீடுகளுள் கால்டுவெல் ஆங்கிலத்தில் எழுதிய திராவிட மொழி-களின் ஒப்பிலக்கணம், ரா. பி. சேதுப்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய சொற்களும்  அவற்றின் பொருண்மையும், தமிழ் இலக்கிய வழக்கும் பேச்சு வழக்கும், வே.வேங்கடராஜூலு ரெட்டியார் எழுதிய கபிலர், பரணர், மா. இராசமாணிக்கம் எழுதிய பத்துப்பாட்டு ஆராய்ச்சி, ந. சஞ்சீவி தொகுத்த சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணைகள், இந்திய விடுதலையும் தமிழ் இலக்கியமும், பல்கலைப் பழந்தமிழ், தெய்வத்தமிழ், பெருந்தமிழ், க.த. திருநாவுக்கரசு எழுதிய சாகித்திய அகாதெமியின் பரிசு பெற்ற திருக்குறள் நீதி இலக்கியம், பு. ரா. புருஷோத்-தம நாயுடு செய்த திருவாய்-மொழி_ஈட்டின் தமிழாக்கம் (10 தொகுதி-கள்), எஸ். கே. நாயர் செய்த கம்ப ராமா-யணத்தின் மலையாள மொழிபெயர்ப்பு, ஏ. சங்கர் கேதிலயா செய்த பெரிய புராணத்தின் கன்னட மொழி பெயர்ப்பு, கே. குஞ்சுன்னி ராஜா ஆங்கிலத்தில் எழுதிய சமசுகிருத இலக்கியத்திற்குக் கேரளாவின் பங்களிப்பு, ஏ. சங்கரன் ஆங்கிலத்தில் எழுதிய இரச, தொனிக்-கோட்பாடு, சங்கரராஜூ நாயுடுவின் திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பு,  சிலப்பதிகார இந்தி மொழிபெயர்ப்பு,  எஸ். என். கணேசனின் மணிமேகலை இந்தி- மொழிபெயர்ப்பு, இந்தி_தமிழ் உறழ்ச்சி இலக்கணம், கே. ஏ. நீலகண்ட சாத்திரி ஆங்கிலத்தில் எழுதிய சோழர்கள் முதலியவை குறிப்பிடத்தக்கவை.
பதிப்பு நூல்கள்
ஓலைச்சுவடிகளிலிருந்து அச்சிற் பதிப்பிக்-கும் பணியைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கிவைத்தவர் பேராசிரியர் வையாபுரிப்-பிள்ளை ஆவார். தமிழ் அகராதி ஆதார நூற்-றொகுதி என்னும் வரிசையில் அரும்பொருள் விளக்க நிகண்டு, நாமதீப நிகண்டு, கயாதரம், சிற்றிலக்கியத் திரட்டு (2 தொகுதிகள்) முதலியவற்றை அவர் பதிப்பித்-தார். அச்சில் வாரா அருந்தமிழ் என்னும் வரிசையில் மு. சண்முகம் பிள்ளை, இ. சுந்தர-மூர்த்தி பதிப்பில் திவாகரம் இரு தொகுதி-களாக வெளிவந்தது. நாககுமார காவியம், பாரதி தீபம், இருபுராண விருத்தம், அல்லி கதை முதலிய பல நூல்கள் இவ்வரிசையில் வெளியாயின. வை. இரத்தினசபாபதி பதிப்பித்த மெய்கண்ட சாத்திரங்கள், நா. பாஸ்கரன் பதிப்பித்த திருவருட்பயன் ஆகியனவும் இங்குச் சுட்டத் தக்கன.
அகராதிகள்
சென்னைப் பல்கலைக்கழக வெளியீடுகளுள் மிகவும் புகழ் பெற்றவை அகராதிகள் ஆகும். 1924_39 காலப்பகுதியில் பகுதிப் பகுதியாகவும் பின்னர்ப் பின்னிணைப்புத் தொகுதி உள்ளிட்ட ஏழு தொகுதிகளாகவும் வெளியிடப்பட்ட தமிழ்ப் பேரகராதி (ஜிணீனீவீறீ லிமீஜ்வீநீஷீஸீ) தமிழ் அகராதியியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இவ்வகராதி 1, 24, 405 பதிவுகளைக் கொண்-டது. இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் இத்தகைய பேரகராதி வெளி-வந்தது என்பதும் இன்றளவும் அளவிலும் தரத்திலும் இதற்கிணையாகவோ இதனை விஞ்சும் வகையிலோ தமிழில் ஓர் அகராதி வெளிவரவில்லை என்பதும் எண்ணிப்பார்க்கத் தக்கவை. இதன் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் இவ்வகராதிச் சாதனைக்காக அன்றைய அரசு அவருக்கு இராவ்பகதூர் என்னும் சிறப்புப் பட்டம் நல்கிச் சிறப்பித்தது.
இத்தகு சிறப்புடைய அகராதியை வெளி-யிட்ட சிறப்பு சென்னைப் பல்கலைக்கழகத்-திற்கு உரியது. இவ்வகராதியைத் திருத்தியும் புதுக்கியும் பெருக்கியும் பதிப்பிக்கும் பணி இப்போது நடைபெற்றுக்கொண்டுள்ளது. இத்-திருத்தப்பணித் திட்டத்தின் துணைவிளைவு-களாகப் பதினாறு அகராதிகள் தொகுக்கப்பட்-டுள்ளன. அப்பதினாறுள் பத்து அகராதிகளைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. சட்டச் சொல்லகராதி, அணிகலன் அகராதி, சித்திரக் கவிக் களஞ்சியம், பாட்டியல் களஞ்சியம் ஆகியனவும், உரிச்சொல் நிகண்டு, நாமதீப நிகண்டு, ஆசிரிய நிகண்டு, பிங்கல நிகண்டு, பாரதிதீப நிகண்டு முதலியவற்றின் அகராதியும் மூலமும் தனித்தனியே நூல்களாகவும் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களைத் தலைமைப் பதிப்பாசிரியராகவும் பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை முதலியவர்களைப் பணிக்குழுவிலும் கொண்டும் ஆக்ஸ்போர்டு சுருக்க அகராதியை (சிஷீஸீநீவீsமீ ளிஜ்யீஷீக்ஷீபீ ஞிவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்)  அடிப்படையாகக் கொண்-டும் சென்னைப் பல்கலைக்கழகம் உருவாக்கி வெளியிட்ட ஆங்கிலம்_தமிழ்ச் சொற்களஞ்-சியம் விற்பனையில் மகத்தான சாதனை புரிந்த அகராதி ஆகும். இன்றும் இதற்குப் பெரும் வரவேற்பு உள்ளது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பார்க்குப் பெருந்துணை-யாகத் திகழ்ந்துவருகிறது அது.
மாரியப்ப பட் அவர்களின் துணையோடு பல்கலைக்கழகம் வெளியிட்ட கிட்டலின் கன்னட_ஆங்கில அகராதி (ரிவீttமீறீ’s ரிணீஸீஸீணீபீணீ-ணிஸீரீறீவீsலீ பீவீநீtவீஷீஸீணீக்ஷீஹ்) இன்றுங்கூடக் கன்னட மக்களிடையே செல்வாக்குடையதாக விளங்கி-வருகிறது. மரியப்ப பட், சங்கர் கேதிலயா இணைந்து தொகுத்துப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள துளு_ஆங்கில அகராதி அத்துறையில் முன்னோடிப் பணியாக இன்றும் போற்றப்பெறுகிறது.
150 நூல் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆம் ஆண்டு நிறைவின் நினைவை நிலையாகப் போற்றும் பொருட்டு 150 நூல்கள் வண்ணமிகு விழா ஒன்றில் வெளியிடப்பட்டன. அவ்விழா-வில் இந்திய நாட்டின் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தி, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் கலந்துகொண்டு நூல்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதுகாறும் கூறியவற்றால், சென்னைப் பல்கலைக்கழகம் பல மொழிகளில், பல துறைகளில், பல வகைகளில் அறிவூட்டமான, பயன்பாடு மிக்க, தரமான, அரிய நூல்களை வெளியிட்டு வருகிறது எனத் தெளியலாம்.

No comments:

Post a Comment