Tamil books

Thursday 21 April 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்பு

கல்பனா சேக்கிழார்

ஈட்டலும், காத்தலும், வகுத்தலும் என்னும் கொள்கைகளை வாழ்க்கை உயிர்நாடியாகக் கொண்ட, டாக்டர் இராஜா சர். அண்ணா-மலைச் செட்டியார் அவர்கள் நில்லாத செல்வத்தை நிலைக்கச் செய்யவும், கல்லாத இனமெல்லாம் கற்க வைக்கவும், 1922ஆம் ஆண்டில்  சிதம்பரத்தில் மீனாட்சிக்கல்லூரி என்னும் பெயரில் கல்லூரி தொடங்கினார். பின்பு மீனாட்சி தமிழ்க் கல்லூரி, மீனாட்சி ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மீனாட்சி வடமொழிக் கல்லூரி, இசைக் கல்லூரி முதலிய பல கல்லூரி-களாக வளர்ச்சி பெற்றது. இக்கல்லூரிகள் அனைத்தும் 1929இல் இணைக்கப்பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகமாக மலர்ந்து மணம் பரப்பத் தொடங்கியது. இப் பல்கலைக்கழகம் 1955ஆம் ஆண்டு வெள்ளி விழாக் கண்டபொழுது, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், அண்ணா-மலை அரசரின் கல்விக்கொடையைப் போற்றி,
வயலும் ஏரும் மழையும் எருவும்
இருந்தும் என்ன செய்வேன் என்னுமோர்
ஏழைக்கு விதைநெல் ஈந்தான் போல
அரசன்அண் ணாமலை திருநாட் டுக்கும்
பண்டைப் பெருமையும் பதியும் நிதியும்
இருந்து வருத்தும் நிலைமை எண்ணி
அறிவின் ஊற்றுத் திறந்தான்
எனப் பாடினார்.
அப் பெருமை மிகு பல்கலைக்கழகம் 2004 இல் பவளவிழா கண்டு, 79 ஆண்டு கால வளர்ச்சியில் எத்தனையோ பெருமைகளைத் தேடிக்கொண்டது.
தமிழையும் தமிழிசையையும் இரு கண்களாகக் கொண்டு தோற்றுவிக்கப்பெற்ற இப் பல்கலைக்கழகம் தமிழுக்கெனப் பல்வேறு துறைகளைக் கண்டது.ஆரம்பம் முதலே ஒவ்வொரு துறையிலும் சிறந்த மேதைகள், இருந்து  பெருமை சேர்த்துள்ளார்கள். அது-போலவே இப் பல்கலைக்கழகத்தின் பதிப்பகமும் பல்வேறு அரிய நூல்களை வெளியிட்டு தமிழுலகிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
பல்கலைக்கழகம் உருவாகிய நாளில் இருந்தே பதிப்பகமும் செயல்பட்டு வருகிறது. இப்-பதிப்பகம்   பழைமையான புகழ்பெற்ற பதிப்பகங்-களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இப் பதிப்பகத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் தமிழ்தான் முழங்க வேண்டும் என்ற கொள்கையைப் பேச்சளவில் இல்லாமல் செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 1931ஆம் ஆண்டு ரா.இராகவையங்கார் அவர்களுடைய ‘பாரிகாதை’ என்னும் நூல்தான் முதன் முதலில் பதிப்பிக்கப் பெற்றது. அதன்பிறகு பல்வேறு துறைசார்ந்த ஏறத்தாழ 625 நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் பெரும்பான்மை-யான நூல்கள் தமிழ் நூல்களாகும்.
கம்பராமாயணம் முழுமையும், செம்பதிப்பாக ,திருவருட்பா மூலமும் உரையும், திருமந்திரம், திருவாசகம், தொல்காப்பியம், சைவசித்தாந்தப் பொழிவுகள், பிற்கால சோழர் வரலாறு, திருமந்திரமாலை 300, ஞானாமிருதம், யாப்-பருங்கலக்காரிகை, சிவஞானபோதம், சிலப்பதிகாரம் போன்ற பல்வேறு நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. ,அர்த்தசாஸ்திரம், கௌடில்யம், பொருள்நூல் போன்ற நூல்கள் மொழிபெயர்த்தது போல, பிற மொழிகளில் இருந்து தமிழில் பல நூல்கள் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. டாக்டர் எஸ்.இராதா-கிருஷ்ணன் அவர்களின் ‘கீழை மேலை நாடு-களில் மெய்ப்பொருளியல் வரலாறு’ குறிப்பிடத் தகுந்த நூலாகும். தமிழரின் பண்பாட்டுச் சிறப்பினை உலகுக்கு உணர்த்தும் வகையில் தமிழர் பண்பாட்டு வரலாறு என்னும் நூல்  நான்கு தொகுதிகளாக வெளியிடப் பெற்றுள்-ளது. இந்நூல் தமிழக அரசுப் பரிசினையும் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ்மேடைகளில் தமிழிசை பாடப்பட வேண்டும் என்னும் அவாவின் காரணமாக, பிற மொழிகளில் இயற்றப்பட்ட பாடல்களைச் சிறந்த இசை அறிஞர்களைக் கொண்டு மொழிபெயர்த்து சுமார் 25 நூல்கள் பதிப்பித்துள்ளனர். திருப்பாம்புரம் டி.என்.சாமி-நாதபிள்ளை, வி.எஸ்.கோமதிசங்கர ஐயர், சிரோமணி என்.எஸ்.தேசிகன், க.வெள்ளை-வாரணனார் கே.பி. சிவானந்தம் பிள்ளை, ப.வைத்தியலிங்கம் பிள்ளை போன்றோரைத் துணையாகக் கொண்டு இசைத் தொடர்பான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.
கலைப்புலம் சார்ந்த இதழ்கள், அறிவியல் இதழ்கள், பொறியியல் இதழ்கள்,இந்திய மொழிப்புல இதழ்கள், கல்வியியல் இதழ்கள், உளவியல் இதழ்கள் போன்ற இதழ்களும் ஆண்டுதோறும் பதிப்பிக்கப் பெறுகின்றன.
பல¢கலைககழக வெள¤ய¦டுகள¢
தம¤ழுக¢காகத் தொடங¢கப¢ பெற¢ற அண¢ணா-மலைப¢ பல¢கலைகழகத¢த¤ல¢ தம¤ழ¢ சார¢ந¢த பல ஆய¢வு நூல¢கள¢, இந¢ ந¤றுவனப் பத¤ப¢பகத¢த¤ன¢ வாய¤லாக வெள¤வந¢துள¢ளன. 1937ஆம¢ ஆண¢டில¤ருந¢து தம¤ழ்த் தொடர¢பான நூல¢கள¢ பத¤ப¢ப¤க¢கப¢ பெற¢று வருக¤ன¢றன. 
இப்பதிப்பகத்தின்வழி வெளியான பல்வேறு துறைசார்ந்த அவ¢வளவு நூல¢களையும¢ தொகுக¢க முடியாத காரணத¢தால¢, இக¢ கட¢டுரைய¤ல¢ தம¤ழ¤யல¢ துறை சார¢ந¢து வெள¤வந¢துள¢ள நூல¢கள¢ மட¢டும¢ தொகுத¢துத¢ தரப¢ பெற¢றுள¢ளன.

No comments:

Post a Comment