Tamil books

Thursday 3 October 2013

கல்விச் சிந்தனைகள்: காந்தி

தாய்மொழி மூலமே கல்வி கற்றுத் தரப்பட வேண்டும்; கல்வி என்பது நம்நாட்டிலுள்ள வாழ்க்கை நிலைமைகளுடன் தொடர்பு உள்ளதாக இருக்க வேண்டும்; மிகவும் ஏழையான இந்தியன் கூட மிகச் சிறந்த கல்வி பெறுவதற்கான நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்என்பவை காந்தியின் கல்விச் சிந்தனைகள். நம் கல்வி முற்றிலும் அந்நியக் கல்வியாக இருக்கிறதென்று 1919-ஆம் ஆண்டிலேயே சொன்னவர்; கல்வி தாய்மொழியில், இலவசமாக, பெருபான்மையான மக்களின் தேவைகளை சமாளிக்கக்கூடிய விதத்தில் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியவர்.
கல்வித் திட்டத்தை வகுப்பதும், அதை நிறைவேற்றுவதும் இரண்டுமே மக்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும். கல்வி பணத்தைப் பொறுத்ததாக இருக்கக்கூடாது. சூரியனின் ஒளியையும், மழையையும் போல எல்லாருக்கும் பொதுவாக கல்வி கிடைக்கச் செய்யவேண்டுமென்பது காந்தி கண்ட கனவு. ‘‘பெண்களிடையே எழுத்தறிவின்மைக்குக் காரணம், ஆண்களிடமிருப்பது போன்ற மந்தமும், சோம்பேறித்தனமும் அல்ல; பெண்கள் கீழானவர்கள் என்ற நியாயமில்லாத ஒரு சம்பிரதாயம் இருந்து வருவதுதான் இதற்கு முக்கியக் காரணம்’’- என்கிறார் அவர்.
உங்களிடமே உள்ள சிறந்த அம்சங்களை வெளிக்கொணருவதுதான் உண்மையான கல்வி. மனிதகுலம் என்ற புத்தகத்தைவிட சிறந்த புத்தகம் பேறு என்ன இருக்க முடியும்? கல்வி என்றால் குழந்தை அல்லது மனிதனின் மனம், உடல் ஆன்மா ஆகிய மூன்றிலும் உள்ள் சிறந்த அம்சங்களை வெளிக்கொணர்வதேÓ என்றெல்லாம் சொன்னவர் காந்தி. அவரது கல்விச் சிந்தனைகளிற் பல, இன்றைய சூழலுக்கும் பொருந்துகிற நவீனத்தன்மையுடன் இருப்பதை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. தொகுத்திருப்பவர், சென்னை, தக்கர் பாபா - காந்தி கல்வி நிலைய நிர்வாகி . அண்ணாமலை.

பேராசிரியர் . மாடசாமி, இந்நூலின் முன்னுரையாககாந்தியின் வகுப்பறை என்றோர் அழகிய கட்டுரையை வழங்கியிருக்கிறார். ‘‘மாணவன் தான் வசிக்கும் சூழலை விட்டுவிலகித் தனித்து போகாத, உடல் உழைப்புடன் இணைந்த புத்தகச்சுமையற்ற, குழுவாய் இணைந்து கற்கிற, செயல்பாடுகளையும் கைத்தொழில்களையும் பயிற்றுவிக்கிற, மாணவர்களின் பன்முகத் திறன்களுக்கு வாய்ப்பளிக்கிற கல்விதான் காந்தி முன் வைக்கிற கல்வி’’ என்று டால்ஸ்டாயின் பரிசோதனைகளையும் காந்தி தானே நேரடியாகச் செய்துகாட்டியதையும் ஒப்பிட்டு விளக்குகிறார் மாடசாமி

கல்விச் சிந்தனைகள்காந்தி

தொகுப்புஅண்ணாமலை | ரூ: 70 பக்: 144

No comments:

Post a Comment