Tamil books

Monday 26 March 2012

காலத்துக்கேற்ற கையேடு


காலத்துக்கேற்ற கையேடு
வால் ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம்’ என்ற முழக்கத்துடன் அமெரிக்க நகரங்களில் பேரணிகளும் ஊர்வலங்களும் புற்றீசல்கள் போல் புறப்பட்டு பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன.

உலகத்தையே நெருக்கடிக்குள்ளாக்கும் அமெரிக்கா வுக்கே நெருக்கடியா? ஆம் நெருக்கடிதான். சாதாரண நெருக்கடி அல்ல, அசாதாரணமானது. அதன் வெளிப்பாடு தான் மக்களின் எழுச்சிப் பேரணிகள்.

பொதுவாக உலக நாடுகளில் ஏற்படும் நிதி நெருக்கடியைப் பயன்படுத்தி அமெரிக்கா லாபம் சம்பாதிக்கும். பொருளாதார மந்தம் ஏற்பட்ட காலங்களில் அமெரிக்க முதலாளிகள், ஆயுத விற்பனை, பொருள் விற்பனை எனப் பல வகையிலும் கொழுத்தார்கள். முதல் உலகப் போருக்குப் பின்னும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னும் அப்படித்தான் தனது கூட்டணி நாடுகளுடன் சேர்ந்து வலையை விரித்து பொருளாதார சாம்ராஜ்யத்தை விஸ்தரித்தது அமெரிக்கா.

அதன் விளைவாகத்தான்- இரண்டாம் உலகப்போருக்குப்பின் பிரட்டன் உட்டோ மாநாடு. பரிந்துரைகள் என்று உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம் (ழுஹகூகூ)- அதன் இன்றைய வடிவம் தான் உட்டோ (றுகூடீ) -அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தின் கீழ் செயல்படுகின்றன.

வளரும் நாடுகள் கடன் பெற வேண்டுமெனில் அந்த முப்பெரும் அமைப்பு கள் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும். மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்தல், கட்டுப்பாடற்ற தாராளச் சந்தையை திறந்துவிடுதல், அரசின் பொதுத் துறை நிறுவனங்கள், குறிப்பாக நிதி நிறுவனங்கள்-வங்கி, இன்சூரன்ஸ் போன்றவற்றின் பங்குகளை விற்றல். அதாவது அந்நிய மூல தனம் நுழைய வழி செய்தல் ஆகியவற்றை ஏற்றாக வேண்டிய நிர்ப்பந்தம். ஒருமுறை அந்தச் சுழலுக்குள் நுழைந்தால் மீண்டும் வெளியேற முடியாத மரணவளையத்துக்குள் சிக்கிச் சின்னாபின்னமாவது தான் கதி.

ஆனால், தற்போது அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்பட் டுள்ள நிதி நெருக்கடி வேறு வகை. அதன் மூல காரணம் என்ன? எப்படி உலக மயமாதல் என்ற அதன் கொள்கைப்படி உலக நாடுகளைப் பாதிக்கிறது? சீனா போன்ற நாடுகள் அதில் பாதிக்காமல் தப்பித்தது எப்படி? அமெரிக்காவின் ஆணைப்படி நடந்துகொள்ளும் இந்தியா கூட பெரிதளவு பாதிக்காமல் இருக்க என்ன காரணம்? தொழிலக மூலதனம் அதிகரிக்காமல் நிதி மூல தனம் அதிகரிப்பால் ஏற்படும் தாக்கங்கள் என்ன? என்பன பற்றி எல்லாம் நிதி விவகாரங்கள் - பொருளாதார விஷயங்கள் பற்றி பெரிதாகத் தெரியாத சாதாரண வாசகர்களும் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில், எளி மையாகவும் அருமையாகவும் வெளி வந்திருக்கிறது “நிதி நெருக்கடி - ஒரு புரிதல்” எனும் நூல்.

முதலாளித்துவம் - அதன் குணாம்சம்; அதன் கட்டுத் தளையிலிருந்து தொழிலாளிகளை விடுவித்தல், யாரால், எப்படி? தொழிலாளி வர்க்க ஆட்சி யில் விளைந்த நன்மைகள் என்ன? சோவியத் தலைமையிலான புதிய எழுச் சியை சிதைத்திட அமெரிக்க ஏகாதிபத்தியம் கையாண்ட சதிச் செயல்கள், முதலாளித்துவ நாடுகளில் தொழிலாளர் சேம நலத்திட்டங்கள் அறிமுகம் அமல் செய்யப்பட்டது. சோவியத் சிதைவுக்குப் பின் அமெரிக்காவின் தான டித்த மூப்பான நடைமுறைகள், நடவடிக்கைகள் போன்றவை பற்றி இந் நூலில் காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் அமானுல்லா கான் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார்.

ஆடம்ஸ்மித், மார்க்ஸ்-ஏங்கெல்ஸ், கீன்ஸ், ஃபிரீட்மேன், மார்ஷல் திட் டம், தாட்சரிசம், ரீகனாமிசம் என பல வகையான பொருளாதாரத் தத்துவங் கள் தொடர்பாகச் சுருக்கமாக இந்நூல் கூறுகிறது. அரசியல் உணர்வுள்ள, தொழிற்சங்கச் சார்புள்ளவர்கள் மட்டுமின்றி, சாதாரண பொதுமக்களும் தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் ஏராளமாக இந்த நூலில் உள்ளன. ஆங் கிலத்திலிருந்து தமிழில் தந்துள்ள இரா.யேசுதாஸ் பாராட்டப்பட வேண்டி யவர். தக்க சமயத்தில் நூலை வெளியிட்டுள்ளது பாரதி புத்தகாலயம்.
நிதி நெருக்கடி ஒரு புரிதல்
அமானுல்லாகான்
ரூ.50

பாரதி புத்தகாலயம்,
421, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை,
சென்னை 600018

No comments:

Post a Comment