Tamil books

Friday 23 March 2012

2012 உலக புத்தக தினம்

 உலகம் முழுவதும் ஏப்ரல் 23ம் நாள் உலகப் புத்தக தினமாக
அனுஷ்டிக்கப்படுகிறது. 1995ம் ஆண்டு முதல் இது தொடர்ந்து நடைபெற்று வரும்
நிகழ்வாக இருந்து வருகிறது. உலகளாவிய அளவில் பல இலக்கியவாதிகள் இந்த
நாளில் பிறந்தோ அல்லது இறந்தோ இருக்கிறார்கள். ஐரோப்பாவில் வாழ்ந்த தலை
சிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையாகக் கருதப்படுகிறவருமான வில்லியம்
ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும் இந்நாளில் தான் என்பதும், புத்தக தினம்
இந்த நாளில் கொண்டாடப்படுவதற்கான விசேஷ காரணமாக அமைகிறது.
 காதலர் தினம் முதல் கல்லூரி தினம் வரை கொண்டாடப்பட்டு வரும்
சூழ்நிலையில் உலக புத்தக தினம் அறிவுலகவாதிகளின், படைப்பாளிகளின், புத்தக
நேசர்களின் நாளாக அதற்குரிய சகல விதமான ஏற்பாடுகளுடன் நிகழ்வதற்கான
தீவிரமான சூழலை நாம் எதிர்காலத்தில் உருவாக்க கடமைப்பட்டிருக்கிறோம்.
 பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மூன்று அமைப்புகளும் இணைந்து இந்த
ஆண்டு உலகப் புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்துள்ளன.
வருகிற ஏப்ரல் 21 முதல் மே 1 வரை மாநிலம் முழுக்க பல  நிகழ்வுகளை
இவ்வமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.
 ஏப்ரல் 21 சனிக்கிழமை மாலை, சென்னைக் கடற்கரை காந்தி சிலை அருகே
கவிஞர்கள் பலரும் பங்கேற்கும் உலகப் புத்தகதின சிறப்புக் கவியரங்கமும்,
ஏப்ரல் 22 ஞாயிறு காலை 7 மணிக்கு வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக
எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் Run for
Read  ஓட்டமும் நடைபெறவுள்ளது. இதன் பிறகு நிகழ்வில் கலந்து கொள்ளும்
ஒவ்வொருவரும் தாங்கள் வாசித்து முடித்த புத்தகத்தை சக நண்பர்களிடம் தந்து
அவர்கள் வாசித்த புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் ‘புத்தகப் பரிமாற்றம்’
நடைபெறும்.
 ‘உலகைக் குலுக்கிய புத்தகங்கள்’ என்ற தலைப்பில் தெருமுனை நாடகம்,
‘புத்தகத் தேர்’  இழுப்பு, மாவட்ட வாரியாக புத்தகக் கண்காட்சிகள் என
இந்நிகழ்வுகள் நீட்சி கொள்கின்றன. புத்தகக் காட்சி நடைபெறும் இடங்களில்
வாசிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் கலந்து கொள்ளும்
ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகின்ற புத்தகங்களிலிருந்து பிடித்தமான
பகுதியை வாசித்தல், புத்தக விமர்சனம், எனத் திட்டமிடப்பட்டுள்ள
இந்நிகழ்வுகளில் அறிவுலகத்தைச் சார்ந்தவர்களும், வாசகர்களும்,
பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்புச் செய்வர் 

1 comment:

  1. மரியாதைக்குரிய,
    நண்பர் 'புத்தகம் பேசுது' நிர்வாகத்தாருக்கு வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - ஈரோடு மாவட்டம் -தாளவாடி மையத்தின் தலைவர் பரமேஸ்வரன் ஆகிய நான் பதிவிடுவது.இந்த ஆண்டு முதல் இரு மாநில எல்லைப்பகுதியான தாளவாடியிலும் உலக புத்தக தினத்தை சிறப்பாக விழா எடுப்பது என முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டினை இன்று முதல் துவங்கியுள்ளோம்.அதுவும் ஒருவார இயக்கமாக கடைப்பிடிப்பது அதனடிப்படையில் இப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளையும்,அரசு அலுவலகங்களையும்,கன்னட மக்களையும்,மற்றும் பிற சமூக ஆர்வலர்களையும் ஊக்கப்படுத்தி,பிரச்சாரம் செய்து முடிந்த அளவு புத்தக வாசிப்புத்திறன் மற்றும் விற்பனையை செய்வது என தமிழ்நாடு அறிவியல் இயக்கம்-மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலின் பேரில் எங்கள் மையத்தில் முடிவு எடுத்துள்ளோம்.இது முதல் மற்றும் புதிய முயற்சியாக உள்ளது.வெற்றிபெற தங்களது ஆசிர்வாதமும் தேவை.என PARAMESWARAN.C // TAMIL NADU SCIENCE FORUM // THALAVADY. http.tnsfthalavady.blogspot.com நன்றி!.

    ReplyDelete